search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "factory seal"

    கோவையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கலப்பட நெய் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் 500 லிட்டர் போலி கலப்பட நெய்யை பறிமுதல் செய்தனர். #Ghee #AdulteratedGhee
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் உள்ள கருப்பண்ணன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து போலியாக பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி கலப்பட நெய் தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர். விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பிரபலமான 3 நெய் தயாரிப்பு நிறுவனங்களின் லேபிள்களை பயன்படுத்தி கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு இருந்த 500 லிட்டர் போலி கலப்பட நெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கலப்பட நெய் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

    அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த கலப்பட நெய் தயாரிப்பு தொழிற்சாலையை பொன்ராஜ் என்பவர் நடத்தி வந்ததும் இங்கு பிரகாஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலை செய்ததும் தெரியவந்தது.



    இங்கு பாமாலின் ஆயிலுடன் வனஷ்பதி மற்றும் எசன்ஸ் சேர்த்து கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. எனவே இங்கு பறிமுதல் செய்யப்பட்ட போலி கலப்பட நெய்யை அதிகாரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இது குறித்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    சாய்பாபா காலனியில் செயல்பட்டு வந்த கலப்பட நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் 500 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இங்கு 3 பிரபல நெய் தயாரிப்பு நிறுவனங்களின் லேபிள்களை பயன்படுத்தியும், போலி முகவரிகளை பயன்படுத்தியும் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். எனவே இந்த நிறுவனத்துக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த உடன் போலி நிறுவனத்தை நடத்தி வந்தவர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #Ghee #AdulteratedGhee

    ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. மேலும், ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு, மக்கள் வலிமையின் இன்னுமோர் பேருதாரணம். அனைத்து அரசியல் கட்சிகளும் சிரம் தாழ்த்தி ஏற்க வேண்டிய பாடம். களத்தில் பலியான தியாகிகளை போற்றுவதோடு இல்லாமல் பாடமும் கற்கவேண்டும்

    தமிழக அரசியலின் புதிய பொழிப்புரையை தூத்துக்குடி எழுதிவிட்டது. தமிழகமே அதைப்பின்பற்றி இழந்த அரசியல்மாண்பை மீட்டெடுக்கவேண்டும். அரசியல்வாதிகளின் தேவைக்கான காரணத்தை, புதிய பாடமாக கற்றுத் தந்துள்ளது. இப்போராட்டம். இக்கல்வி கற்று, மக்கள் நீதி மய்யம் பள்ளியாய் மாறி வீதி தோறும் இச்செய்தியை பரப்பும்.

    தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். வெறும் சாட்சிகளாக , திணிக்கப்பட்ட செய்திகளின் கைதிகளாக இனி தமிழர் இயங்கமாட்டார்கள். நாம் விரும்பும் மாற்றமாக மாறத் துவங்கிவிட்டோம்

    சரியான நேரத்தில் மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட்டிருந்தால் தேவையற்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை அரசு எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமான ஒன்று என ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #SterliteShut
    பெங்களூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. மேலும், ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமான முடிவு. 22 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம். தமிழக அரசின் அரசாணையை படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

    என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×