என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் வேலுமணி"
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவில் முன்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ், நடிகர் விவேக், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் தூய்மை பணி மேற்கொண்டனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். தூய்மை பணியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 584 ஊராட்சிகளிலும் சிறந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 53 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
கோவை:
கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் -அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணையின்படி நாளை (சனிக்கிழமை)அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துவி மரியாதை செலுத்தியும் தலைமை கழகம் அறிவித்த பொதுக் கூட்டங்களை நகர, பகுதி, செயலாளர்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி புறநகர் மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதன்படி நாளை (சனிக்கிழமை) பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் அண்ணா தொழிற் சங்க பேரவை யூ.ஆர். கிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி., நடிகர் அனுமோகன், பவானி ஜே. எஸ். வாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.
கோவை சாய்பாபா காலனி பகுதி வேலாண்டி பாளையம் மருத கோனார் வீதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நடிகர் வையாபுரி, ஜெயகாந்தன் ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மறுநாள் ( ஞாயிற்றுக் கிழமை) குனியமுத்தூர் நகரம் இடையர் பாளையம் பிரிவில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், டி.பி. குலாப் ஜான், ராம சுப்பிரமணியன் ஆகியோர் பேசுகிறார்கள்.
குறிச்சி நகரம் சங்கம் வீதியில் முன்னாள் எம்.பி. இளவரசன், மார்க்கண்டேயன், நாகராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.
17-ந் தேதி தொண்டாமுத்தூர் பகுதி மாரியம்மன் கோவில் வீதி லாலி ரோடு பகுதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் புத்தி சந்திரன், முன்னாள் வாரிய தலைவர் லியாகத் அலிகான், தோவாலா ரவி,விளதை செல்வராஜ், ஆகியோர் பேசுகிறார்கள். வால்பாறையில் முன்னாள் அமைச்சர் அண்ணாவி, ஜலேந்திரன், ஈரோடு சுப்பிரணியம் ஆகியோர் பேசுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கே : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், மின்துறை அமைச்சர் தங்கமணி மின்வெட்டு துறை அமைச்சராக இருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் கூறி உள்ளாரா?
ப : தமிழகத்தை பொறுத்தவரை கடந்த தி.மு.க. ஆட்சியின் போது 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு பிரச்சனை இருந்தது. அப்போது நாங்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனால் தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.
ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபடும் போது உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. மின்துறை அமைச்சர் வாரா வாரம் சிறப்புக்கூட்டம் நடத்தி வருகிறார். யார் கேட்டாலும் மின்இணைப்பு தரப்படுகிறது. மின்சாரத்துறையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று டி.டி.வி.தினகரன் பேசுகிறார் என்றால் அவர் 10 ஆண்டுகள் அம்மாவால் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் இதுவும் பேசுவார். இதற்கு மேலும் பேசுவார். திகார் ஜெயில் உள்பட எல்லா ஜெயிலையும் பார்த்த அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல தயாராக உள்ளார்.
உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் அமைச்சர் பதவி மட்டுமல்ல கட்சி பதவியில் இருந்தும் இன்றே விலக தயார். ஊழலை நிரூபித்தால் அரசியலை விட்டே செல்ல தயாராக இருக்கிறேன். அதே சமயம், ஊழலை நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் கட்சி தலைவர் பதவியையும், எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகி துரைமுருகன், அழகிரிக்கு பதவியை கொடுக்க தயாராக இருக்கிறாரா?
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SPVelumani
கோவை:
வால்பாறை சட்டமன்ற தொகுதி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வால்பாறை துளசியம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி., வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து பேசுகிறார்கள்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர் கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவரும் தோட்ட தொழிற் சங்க செயலாளருமான வி.அமீது, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்க விழா, தூய்மை கணக்கெடுப்பு இலச்சினை அறிமுக விழா, தூய்மை வாகனம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி இயக்குனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தூய்மை ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழகத்தை முழு சுகாதாரம் அடைந்த மாநிலமாகவும், திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழ்நிலை இல்லாத மாநிலமாகவும் உருவாக்கும் வகையில் கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 4639 கோடி செலவில் 49.63 லட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 30 மாவட்டங்கள் 100 சதவீத சுகாதார நிலையை எட்டி உள்ளது.12,040 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அல்லாத ஊராட்சிகள் என கிராம சபை கூட்டங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மீதமுள்ள 484 கிராம ஊராட்சிகளும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
2014-15-ம் ஆண்டு ரூ. 610 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம், 12,524 ஊராட்சிகளில் செயல்படுத்தபட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 66,025 தூய்மை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக நடப்பு ஆண்டில் ரூ. 206 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும் கிராமங்களில் குப்பையை எளிதாக அப்புறப்படுத்தும் வகையில் 93000 குப்பை தொட்டிகளும், 43000 மிதி வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை தர வரிசைப்படுத்த மத்திய அரசு தூய்மை கணக்கெடுப்பு-2018 திட்டம் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தூய்மை ரதம் அனுப்பப்பட்டு கணக்கெடுத்து தரவரிசைப் படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார வளாகங்கள், கிராம சந்தை, வழிபாட்டு தலங்கள் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர்கள் ஹரிஹரன் (கோவை), பழனிசாமி (திருப்பூர்), இன்னசென்ட் திவ்யா (நீலகிரி),பிரபாகரன் (ஈரோடு), நாகராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், ஓ.கே. சின்னராஜ், ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர்கள் லட்சுமிபதி, ராதா, ராஜஸ்ரீ, விஜய முத்து மீனாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மற்றும் அரசு துறை அலுவலர்க்ள, மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை குறிச்சி குளத்தில் ஆகாய தாமரையை அகற்றும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்திக்க போவதாக கூறியிருக்கிறாரே?
பதில்: எங்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். காவிரி பிரச்சனையில் முதலில் மத்திய அரசு கர்நாடக தேர்தலுக்காக தாமதம் காட்டியது. ஆனாலும் அதன்பிறகு ஆணையத்தை அமைத்து விட்டார்கள்.
மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்துக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்சனையில் முழுவதும் துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #CauveryIssue #DMK #congress
கோவை:
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்தில் வெளியூர்களில் இருந்து ஆட்கள் திரட்டி வந்துள்ளார். தினகரன் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் குறிப்பிட்ட கும்பல் சென்று வருகிறது. ஒரே முகங்களைத்தான் இந்த கூட்டங்களில் காண முடிகிறது. கோவையில் கூட்டத்தை கூட்டி வந்து பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும் இந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
ஜெயலலிதாவினால் 10 ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் டி.டி.வி.தினகரன். வீட்டு பக்கமோ, நாடாளுமன்றத்துக்கோ செல்லக்கூடாது என்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்தான் இவர். இப்போது நான்தான் தலைவர் என்று கூறி வரும் அவருடன் சிலர் சென்று வருகிறார்கள். மீண்டும் அவர்கள் எங்களிடம் வந்து விடுவார்கள்.
நாங்கள் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது கஷ்டப்பட்டு உள்ளோம். ஒவ்வொருவரும் கட்சிக்காக கஷ்டப்பட்டு உள்ளனர். சிறைக்கும் சென்றுள்ளனர். பாடுபட்டு கட்சியை பல்வேறு தேர்தல்களில் வெற்றிபெற வைத்துள்ளனர். இதில் டி.டி.வி. தினகரனின் பங்கு என்ன?. ஜெயலலிதா இருக்கும்வரை அவரை பக்கத்திலேயே விடவில்லை. இப்போது நான்தான் வாரிசு என்கிறார். அது நடக்காது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட பலரும் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு உள்ளனர். எனவே இப்போது கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. காவிரி பிரச்சினையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதால் இப்போது பெய்த மழையில் ஆறு, குளங்கள் நிரம்பி வருகின்றன. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுய விளம்பரத்துக்காக கூட்டங்கள் நடத்தி குறுகிய கும்பலை வைத்து செயல்பட்டு வரும் டி.டி.வி. தினகரனின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது.
தனக்கு பிறகு இந்த இயக்கம் 100 ஆண்டுகாலம் நிலைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. எனவே இந்த கட்சி 100 ஆண்டுகாலம் நிலைக்கும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எவராலும் அ.தி.மு.க.வை நெருங்கி பிடிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #spvelumani
பல்லாவரம் தொகுதியில் தற்போது நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை குறித்து சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் இ.கருணாநிதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
“அவர் பேசும் போது பல்லாவரத்தில் 10 நாட்களுக்கு 1 முறைதான் குடிநீர் வருகிறது. இங்கு நிரந்தரமாக குடிநீர் பிரச்சனையை போக்க வேண்டுமானால் பாலாற்றில் இருந்து கொண்டு வரப்படும் குழாயை மாற்றிவிட்டு அகலமான குழாய் அமைத்தால் நிரந்தர தீர்வுகிடைக்கும். இதற்கு ரூ.50 கோடி செலவாகும் என்று குடிநீர் வாரியம் தெரிவிக்கிறது” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் வேலுமணி பேசியதாவது-
பல்லவபுரம் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், நாளொன்றுக்கு நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் குடிநீரும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம், நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் லிட்டர் குடிநீரும் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 36 இலட்சம் லிட்டர் குடிநீரும் ஆக மொத்தம் 86 இலட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பல்லாவரம் நகராட்சி குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, 99.95 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர்த் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டு சென்னை குடிநீர் வாரியம் மூலம் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அனகாபுத்தூர் நகராட்சியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மூலம், நாளொன்றுக்கு 2.53 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 53 லிட்டர் குடிநீர் வீதம், 7 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, 14.87 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிதிகளைக் கொண்டு குடிநீர் திட்டம் எடுக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பம்மல் நகராட்சியில் தற்போது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மூலம், 3.19 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 42 லிட்டர் வீதம், 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பம்மல் நகராட்சி குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, ரூ.43.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் திட்டத்தில், 89 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் ஜனவரி2019ல் முடிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை, மாண்புமிகு உறுப்பினருக்கு பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்