search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 3 நாட்கள் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்- எஸ்பி வேலுமணி அறிக்கை
    X

    கோவையில் 3 நாட்கள் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்- எஸ்பி வேலுமணி அறிக்கை

    அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 3 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

    கோவை:

    கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் -அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணையின்படி நாளை (சனிக்கிழமை)அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துவி மரியாதை செலுத்தியும் தலைமை கழகம் அறிவித்த பொதுக் கூட்டங்களை நகர, பகுதி, செயலாளர்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி புறநகர் மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் அண்ணா தொழிற் சங்க பேரவை யூ.ஆர். கிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி., நடிகர் அனுமோகன், பவானி ஜே. எஸ். வாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    கோவை சாய்பாபா காலனி பகுதி வேலாண்டி பாளையம் மருத கோனார் வீதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நடிகர் வையாபுரி, ஜெயகாந்தன் ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மறுநாள் ( ஞாயிற்றுக் கிழமை) குனியமுத்தூர் நகரம் இடையர் பாளையம் பிரிவில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், டி.பி. குலாப் ஜான், ராம சுப்பிரமணியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    குறிச்சி நகரம் சங்கம் வீதியில் முன்னாள் எம்.பி. இளவரசன், மார்க்கண்டேயன், நாகராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    17-ந் தேதி தொண்டாமுத்தூர் பகுதி மாரியம்மன் கோவில் வீதி லாலி ரோடு பகுதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் புத்தி சந்திரன், முன்னாள் வாரிய தலைவர் லியாகத் அலிகான், தோவாலா ரவி,விளதை செல்வராஜ், ஆகியோர் பேசுகிறார்கள். வால்பாறையில் முன்னாள் அமைச்சர் அண்ணாவி, ஜலேந்திரன், ஈரோடு சுப்பிரணியம் ஆகியோர் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×