search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anna birthday celebration"

    அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 3 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

    கோவை:

    கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் -அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணையின்படி நாளை (சனிக்கிழமை)அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துவி மரியாதை செலுத்தியும் தலைமை கழகம் அறிவித்த பொதுக் கூட்டங்களை நகர, பகுதி, செயலாளர்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி புறநகர் மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் அண்ணா தொழிற் சங்க பேரவை யூ.ஆர். கிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி., நடிகர் அனுமோகன், பவானி ஜே. எஸ். வாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    கோவை சாய்பாபா காலனி பகுதி வேலாண்டி பாளையம் மருத கோனார் வீதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நடிகர் வையாபுரி, ஜெயகாந்தன் ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மறுநாள் ( ஞாயிற்றுக் கிழமை) குனியமுத்தூர் நகரம் இடையர் பாளையம் பிரிவில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், டி.பி. குலாப் ஜான், ராம சுப்பிரமணியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    குறிச்சி நகரம் சங்கம் வீதியில் முன்னாள் எம்.பி. இளவரசன், மார்க்கண்டேயன், நாகராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    17-ந் தேதி தொண்டாமுத்தூர் பகுதி மாரியம்மன் கோவில் வீதி லாலி ரோடு பகுதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் புத்தி சந்திரன், முன்னாள் வாரிய தலைவர் லியாகத் அலிகான், தோவாலா ரவி,விளதை செல்வராஜ், ஆகியோர் பேசுகிறார்கள். வால்பாறையில் முன்னாள் அமைச்சர் அண்ணாவி, ஜலேந்திரன், ஈரோடு சுப்பிரணியம் ஆகியோர் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 15ந் தேதிமாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 15ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, தலைமை கழக பேச்சாளர் சுப்பையா பாண்டியன், நெல்லை எல்.கபாலி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    வருகிற 16-ந்தேதி காயல்பட்டினத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் நெல்லை சடகோபன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். 17-ந்தேதி கோவில்பட்டியில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன், தலைமை கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன், சிவாஜி சின்னப்பன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    எனவே இந்த கூட்டங்களுக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய பகுதி நகர பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ×