search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister spvelumani"

    வால்பாறை சட்டமன்ற தொகுதி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நாளை நடக்கிறது. இதில் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்கிறார்.

    கோவை:

    வால்பாறை சட்டமன்ற தொகுதி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வால்பாறை துளசியம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி., வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணி குறித்து பேசுகிறார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர் கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவரும் தோட்ட தொழிற் சங்க செயலாளருமான வி.அமீது, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ministerspvelumani #admk

    கோவை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடை பயிற்சி சாலையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பயிற்சி சாலை நவீன படுத்தப்பட உள்ளது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக திறந்த வெளி கலையரங்கம், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்படும். நடை பயிற்சி சாலையில் மழைநீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். திட்டத்தை வேகமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க. அரசு வருமான வரி சோதனைக்கு பயந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது தமிழகத்துக்கு செய்த துரோகம் என ஸ்டாலின் கூறி உள்ளாரே என கேட்டதற்கு வருமான வரித்துறை சோதனை வழக்கமான நிகழ்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்ட போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி உரிமையை மீட்டு எடுத்தனர்.

    எம்.பி.க்கள் இல்லாத தி.மு.க.வின் ஸ்டாலின் இது குறித்து பேசுவதற்கான அவசியம் என்ன என புரியவில்லை. மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க. தமிழர்களின் நலனுக்காகவோ, ஈழத்தமிழர்களின் நலனுக்காகவோ என்ன நடவடிக்கை எடுத்தது? என்றார்.

    ஆய்வின் போது கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி,எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #ministerspvelumani #admk

    ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுடன் சென்றவர்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #dinakaran #spvelumani

    கோவை:

    தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்தில் வெளியூர்களில் இருந்து ஆட்கள் திரட்டி வந்துள்ளார். தினகரன் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் குறிப்பிட்ட கும்பல் சென்று வருகிறது. ஒரே முகங்களைத்தான் இந்த கூட்டங்களில் காண முடிகிறது. கோவையில் கூட்டத்தை கூட்டி வந்து பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும் இந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

    ஜெயலலிதாவினால் 10 ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் டி.டி.வி.தினகரன். வீட்டு பக்கமோ, நாடாளுமன்றத்துக்கோ செல்லக்கூடாது என்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்தான் இவர். இப்போது நான்தான் தலைவர் என்று கூறி வரும் அவருடன் சிலர் சென்று வருகிறார்கள். மீண்டும் அவர்கள் எங்களிடம் வந்து விடுவார்கள்.

    நாங்கள் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது கஷ்டப்பட்டு உள்ளோம். ஒவ்வொருவரும் கட்சிக்காக கஷ்டப்பட்டு உள்ளனர். சிறைக்கும் சென்றுள்ளனர். பாடுபட்டு கட்சியை பல்வேறு தேர்தல்களில் வெற்றிபெற வைத்துள்ளனர். இதில் டி.டி.வி. தினகரனின் பங்கு என்ன?. ஜெயலலிதா இருக்கும்வரை அவரை பக்கத்திலேயே விடவில்லை. இப்போது நான்தான் வாரிசு என்கிறார். அது நடக்காது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட பலரும் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு உள்ளனர். எனவே இப்போது கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. காவிரி பிரச்சினையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதால் இப்போது பெய்த மழையில் ஆறு, குளங்கள் நிரம்பி வருகின்றன. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுய விளம்பரத்துக்காக கூட்டங்கள் நடத்தி குறுகிய கும்பலை வைத்து செயல்பட்டு வரும் டி.டி.வி. தினகரனின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது.

    தனக்கு பிறகு இந்த இயக்கம் 100 ஆண்டுகாலம் நிலைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. எனவே இந்த கட்சி 100 ஆண்டுகாலம் நிலைக்கும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எவராலும் அ.தி.மு.க.வை நெருங்கி பிடிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #spvelumani

    ×