search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், திமுகவும் தான்- அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு
    X

    தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், திமுகவும் தான்- அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு

    காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார். #ADMK #CauveryIssue #DMK #congress
    கோவை:

    கோவை குறிச்சி குளத்தில் ஆகாய தாமரையை அகற்றும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்திக்க போவதாக கூறியிருக்கிறாரே?

    பதில்: வருமான வரித்துறை சோதனை பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முதல்-அமைச்சர் விளக்கம் கொடுத்து உள்ளார். ஊழலுக்காக தமிழ்நாட்டில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சிதி.மு.க. தான்.


    கேள்வி: காவிரி பிரச்சனையில் அ.தி.மு.க. எம்.பிக்கள் நீண்ட நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கிறார்கள் என்று முதல்-அமைச்சரே கூறியிருக்கிறார். அவ்வாறு தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காதது ஏன்?

    பதில்: எங்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். காவிரி பிரச்சனையில் முதலில் மத்திய அரசு கர்நாடக தேர்தலுக்காக தாமதம் காட்டியது. ஆனாலும் அதன்பிறகு ஆணையத்தை அமைத்து விட்டார்கள்.

    மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்துக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்சனையில் முழுவதும் துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #CauveryIssue #DMK #congress
    Next Story
    ×