search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள்"

    • அனைத்து துறை அதிகாரிகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
    • ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலம்

    கன்னியாகுமரி :

    ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1-ந்தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த ஆண்டு உள்ளாட்சி தினத்தையொட்டி லீபுரம் பஞ்சாயத்து சிறப்பு கிராம சபை கூட்டம் ஆரோக்கியபுரத்தில் நடந்தது. லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், சுயம்புகனி, லட்சுமிபாய், ஜெகன், மரிய ஜெராபின், ஜெனிபுரூன்ஸ், டெல்சி, சுமதி, ஊராட்சி செயலாளர் ஜெனட் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுற்றுலாத்துறை போன்ற அனைத்து துறை அதிகாரிகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் லீபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதேபோல லீபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் லீபுரம் கடற்கரைக்கு செல்லும் பாதையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலத்தை சிறப்பாக கட்டுவதற்கு உறுதுணை புரிந்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஜெயச்சந்திரனுக்கு லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

    • ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர்.
    • துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைகட்டினை வடகிழக்கு பருவ மழை வருவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையி னை முன்னிட்டு, எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பிரியும் இடதுபக்க வாய்க்கா ல்களான கண்டம்பாக்கம் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால் மற்றும் ஆழங்கால் வாய்க்கால், தெளிமேடு என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் இடது கரையில் பிரியும் நேரடி பாசன வாய்க்கா ல்களான பெரும்பக்கம் வாய்க்கால், விழுப்புரம் வாய்க்கால், கோலியனூர் வாய்க்கால், கப்பூர் வாய்க்கால், வழுதரெட்டி வாய்க்கால் மற்றும் கண்டம்பாக்கம் வாய்க்கால் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    தற்போது, எல்லீஸ் அணை க்கட்டு சேதம் அடைந்து உள்ளதால் ஆழங்கால் வாய்க்கால் மூலம் பயன் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக கண்டம்பா க்கம் வாய்க்கால் தூர்வாரி ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர். ஆய்வின்போது, செய ற்பொறியாளர், பொதுப்ப ணித்துறை (நீ.வ.ஆ) ஷோ பனா, திருவெண்ணைநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம் சிவசக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • வருமான வரியை கட்டவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    சென்னை ேவப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம், பூங்கா நகரில் உள்ள இன்னொரு நிறுவனம் மற்றும் மாதவரம் பூங்காநகர் ஆகிய இடங்களில் உள்ள மேலும் 2 தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை குறிவைத்து வருமான வரித்துைற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரும்பு பொருட்கள் மற்றும் மருந்து ரசாயனம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் இந்த 4 நிறுவனங்களிலும் முறை யாக வருமான வரியை கட்ட வில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்கு மாடி வணிக வளாகம் ஒன்றில் 5-வது மாடியில செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வரு மான வரித்துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை யில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. இதுபோன்று சவுகார் பேட்டையில் உள்ள வணிக வளாகத்திலும், மாதவரம் நடராஜன் சாலையில் உள்ள குடோன் மற்றும் அலுவலகத் திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். சவுகார் பேட்டை பகுதியில் மட்டும் மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான தொழிற்சாலை கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். கடலூர் குடிகாடு பகுதியில் சிப்காட்டில் உள்ள இந்த மருந்து தொழிற்சாலைக்கு சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் அதிரடி இன்று காலையில் வந்தனர். தொழிற்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் அங்குள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் முடிவில் தான் ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றபட்டதா என்பது தெரிய வரும். தனியார் மருந்து கம்பெனியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் கடலூர் சிப்காட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26 -ந் தேதி மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
    • மேலும் சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதனை சந்தித்தும் மனு கொடுத்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்வதாக கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26 -ந் தேதி மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.

    சஸ்பெண்டு

    இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அதிகமானோர் ஏறியதால் மேடை சரிந்து விழுந்தது .இதையடுத்து அந்த கிராமத்தின் பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியான கண்ணன் என்பவரை கோட்டாட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து முறையிட முயன்றனர். அப்போது கலெக்டர், அவர்களை சந்திக்க மறுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    மேலும் சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதனை சந்தித்தும் மனு கொடுத்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்வதாக கூறினார் . ஆனால் இதுவரை அந்த சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யவில்லை.

    ஆர்ப்பாட்டம்

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் சூரமங்கலம் தர்மா நகரில் உள்ள சேலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியான கண்ணனை மேடை சரிந்ததற்காக சஸ்பெண்டு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் . மேலும் அவர் வகித்த கொத்தனூர் கிராம நிர்வாக பதவிக்கு வேறு ஒருவரை கூடுதல் பொறுப்பு வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே உடனடியாக அவரது சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய கண்மாய் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மடைகள் மற்றும் அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் சேதமடைந்தி ருப்ப தாகவும், தமிழக அரசு விரைவில் அதனை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இருஞ்சிறை கிராமப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுதொடர்பான செய்தி 'மாலை மலர்' நாளிதழிலும் வெளியானது. இதனைய டுத்து நேற்று இருஞ்சிறை பெரிய கண்மாய் பகுதிக்கு நேரில் வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் இருஞ் சிறை பெரிய கண்மாய் பகுதியிலுள்ள கலுங்கு மடைப்பகுதி, பெரியமடை, தாழிமடை, கருதாமடை, வெள்ளமடை உட்பட அனைத்து மடைகளையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் மடைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் சேதம டைந்த மடைகளையும், ஷட்டர் கதவுகள் இல்லாத மடை பகுதிகளையும் ஆய்வு கள் செய்து அளவீடு கள் மேற்கொண்டனர்.

    இதுகுறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மடைகளின் சேதம், கால்வாய்கள் ஆக்கி ரமிப்பு, உள்பட இருஞ்சிறை கண்மாய் மடைகள் குறித்த அனைத்து குறைகளையும் அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, அதன் மூலம் விவசாயிகளின் கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென தெரிவித் தனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த ஆய் வுப்பணியின் போது இருஞ் சிறை கிராமப்பகுதி விவசா யிகள் ஏராளமானோர் உட னிருந்தனர்.

    • பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

    இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.

    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
    • கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ நெல்லுக்கு ரூ. 2265 வழங்கப்படும்

    ஆரல்வாய்மொழி :

    ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், கேசவன் புதூர், அரும நல்லூர், தெரிசனங்கோப்பு, பூதப்பாண்டி, இறச்சகுளம், திட்டுவிளை உள்ளிட்ட இடங்களில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்களை விவசாயிகள் தோவாளை கொள்முதல் நிலையம் கொண்டு வந்து கொடுப்பார்கள். சமீப காலமாக அங்கு நெல்களை கொண்டு வந்தால், அதிகாரிகள் நெல்கள் ஈரமாக இருப்பதால் எடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ நெல்லுக்கு ரூ. 2265 வழங்கப்படும். ஆனால் தனியார் ரைஸ்மிலில் 87 கிலோவுக்கு ரூ. 1750 கிடைக்கும். இதில் வண்டி வாடகை செலவுகள் அதிகம். ஏற்கனவே கஷ்டத்தில் உள்ள விவசாயி களிடம் நெல்களை கொள்மு]தல் செய்ய கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பார்வையிட்டார்
    • விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவில் அமைந்துஉள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வை யிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகா னந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறை களும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளு வர் சிலைக்கு இயக்கப்படு வதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளூர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பு களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தர விட்டு உள்ளது.

    அதன்படி ரூ.29 கோடியே 33 லட்சம் செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த மே மாதம் 24-ந்தேதி தொடங்கி யது.

    இதைத் தொடர்ந்து தற்போது திருவள்ளுவர் சிலை வளாகத்தில் பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேற்று நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கிராம சாலைகள் தலைமை பொறியாளர் நெல்லை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் நாகர்கோவில் கோட்ட பொறியாளர் பாஸ்கரன் உதவி கோட்ட பொறியாளர் ஹெரால்டு கன்னியாகுமரி தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
    • பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள மவுண்ட் பிளசண்ட பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமாா் ஒரு ஏக்கா் நிலம் இருந்தது. அதனை அங்கு உள்ள தனியாா் டென்னிஸ் கிளப் நிா்வாகம் ஆக்கிரமித்து விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி தலைமையில் வருவாய்த் துறையினா் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் விளையாட்டு மைதானத்துக்காக ஆக்கிரமித்து வைத்திருந்த 1 ஏக்கா் நிலத்தை மீட்டனா். அதன் தற்போதைய மதிப்பு ரூ.9 கோடியாகும்.

    இந்த மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

    • ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு
    • உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை முகப்பு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள், பங்க் கடைகள், டீக்கடைகள் உள்ளன. இங்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், கதிரவன், ஸ்டாலின், ராஜரத்தினம், அன்பு பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் முண்டியம்பாக்கத்தில் ஓட்டல்கள், பங்க் கடை, டீக்கடை ஆகிய வற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஓட்டல்களில் சுகாதார மற்ற முறையில், காலாவதியான உணவு பண்டங்களையும், பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்த கூடாத உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 5 ஓட்டல்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றாததால் அந்த ஓட்டல்களுக்கு மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அறிவுறு த்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தொட ரும் என ஓட்டல் உரிமையா ளர்களுக்கு எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது ஓட்டல்களில் கெட்டுப்போன வெஜ் பிரியாணி, பால் பாக்கெட், கீரிம் கேக், குளிர் பானங்கள், தேதி குறிப்பிடா மலும், காலாவதியான பிஸ்கட், உணவு பண்டங்கள் சுமார் 150 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அனைத்தையும் கீழே கொட்டி அழித்தனர்.

    • சரபோஜிராஜபுரம் -வடக்குமாங்குடி சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பு பொறியாளர் கவிதா வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சக்கராப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் சிமெண்ட் சாலை பணிகள், பாய் நெசவு பணி கட்டிடம், வழுத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டம், ஆதி திராவிட நல பள்ளி கட்டிடம், சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம், காளான் வளர்ப்பு மையம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம், சரபோஜிராஜபுரம் வடக்குமாங்குடி சாலை பணிகள், கல்வெட்டு பணிகள்,

    ஆதனூர் ஊராட்சியில் சோழங்கநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம், குழந்தை நேய பள்ளி கட்டிடம் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு பொறியாளர் கவிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது உடன் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வாக்குவாதம்

    கரப்பான் பூச்சியை கோழிக்கறியுடன் சேர்த்து பொறித்தது தெரிய வந்தது. இது குறித்து வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து தகவல்அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அந்த கடைக்கு சென்றனர். அப்போது அந்த சில்லி சிக்கன் கடையை பூட்டி விட்டு அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இன்று கடையை திறக்குமாறு கூறி உள்ளனர். மேலும் இன்று கடைக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தனர்.    

    ×