search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லீபுரத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்
    X

    லீபுரத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்

    • அனைத்து துறை அதிகாரிகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
    • ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலம்

    கன்னியாகுமரி :

    ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1-ந்தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த ஆண்டு உள்ளாட்சி தினத்தையொட்டி லீபுரம் பஞ்சாயத்து சிறப்பு கிராம சபை கூட்டம் ஆரோக்கியபுரத்தில் நடந்தது. லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், சுயம்புகனி, லட்சுமிபாய், ஜெகன், மரிய ஜெராபின், ஜெனிபுரூன்ஸ், டெல்சி, சுமதி, ஊராட்சி செயலாளர் ஜெனட் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுற்றுலாத்துறை போன்ற அனைத்து துறை அதிகாரிகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் லீபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதேபோல லீபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் லீபுரம் கடற்கரைக்கு செல்லும் பாதையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலத்தை சிறப்பாக கட்டுவதற்கு உறுதுணை புரிந்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஜெயச்சந்திரனுக்கு லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×