search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
    X

    சேதமடைந்து காணப்படும் பெரிய கண்மாயின் மதகு பகுதிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.

    சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

    • சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய கண்மாய் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மடைகள் மற்றும் அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் சேதமடைந்தி ருப்ப தாகவும், தமிழக அரசு விரைவில் அதனை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இருஞ்சிறை கிராமப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுதொடர்பான செய்தி 'மாலை மலர்' நாளிதழிலும் வெளியானது. இதனைய டுத்து நேற்று இருஞ்சிறை பெரிய கண்மாய் பகுதிக்கு நேரில் வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் இருஞ் சிறை பெரிய கண்மாய் பகுதியிலுள்ள கலுங்கு மடைப்பகுதி, பெரியமடை, தாழிமடை, கருதாமடை, வெள்ளமடை உட்பட அனைத்து மடைகளையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் மடைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் சேதம டைந்த மடைகளையும், ஷட்டர் கதவுகள் இல்லாத மடை பகுதிகளையும் ஆய்வு கள் செய்து அளவீடு கள் மேற்கொண்டனர்.

    இதுகுறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மடைகளின் சேதம், கால்வாய்கள் ஆக்கி ரமிப்பு, உள்பட இருஞ்சிறை கண்மாய் மடைகள் குறித்த அனைத்து குறைகளையும் அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, அதன் மூலம் விவசாயிகளின் கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென தெரிவித் தனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த ஆய் வுப்பணியின் போது இருஞ் சிறை கிராமப்பகுதி விவசா யிகள் ஏராளமானோர் உட னிருந்தனர்.

    Next Story
    ×