search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் அருகே ரூ.9 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்ட அதிகாரிகள்
    X

    குன்னூர் அருகே ரூ.9 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்ட அதிகாரிகள்

    • மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
    • பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள மவுண்ட் பிளசண்ட பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமாா் ஒரு ஏக்கா் நிலம் இருந்தது. அதனை அங்கு உள்ள தனியாா் டென்னிஸ் கிளப் நிா்வாகம் ஆக்கிரமித்து விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி தலைமையில் வருவாய்த் துறையினா் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் விளையாட்டு மைதானத்துக்காக ஆக்கிரமித்து வைத்திருந்த 1 ஏக்கா் நிலத்தை மீட்டனா். அதன் தற்போதைய மதிப்பு ரூ.9 கோடியாகும்.

    இந்த மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

    Next Story
    ×