search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பை"

    • வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
    • ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரும் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை என்ற பெயரில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சினையில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்க கூடாது.

    ஊட்டி மார்க்கெட்டில் தற்போது கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் இங்கு பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வருபவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அவர்களுக்கு முறையான மாற்று இடம் அளிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு ஒரு நியாயம், வியாபாரிகளுக்கு ஒரு நியாயமா என்று தெரியவில்லை. ஆவின் பாலை மாற்று முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் வியாபாரிகளை அரசு அதிகாரிகள் துன்புறுத்தி வந்தால், மண்டலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    ஊட்டி மார்க்கெட்டில், தற்காலிக கடைகள் கட்டுவதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த நீலகிரி எம்பிக்கு நன்றி. அதேபோல், மார்க்கெட் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தரமான உரம் கிடைக்கும் என்றார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.

    இந்தியா முழுவதும் உள்ள உர நிறுவனங்கள், இனி 'பாரத்' என்ற பொதுப்பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும். உர மானியத் திட்டத்தைக் குறிக்கும் முத்திரை, பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் யூரியாவின் விலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின் உற்பத்திச்செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது.

    உணவு மானியத்திற்கு அடுத்தபடியாக, உரத்திற்குதான் இந்திய அரசு அதிகளவில் பணம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதாவது சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் அந்த மானியம் ஒதுக்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் இனி விவசாயிகளுக்கு மலிவு விலையில் "பாரத் பிராண்டின்" தரமான உரம் கிடைக்கப் போகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் விற்கப்படும் பாரத் யூரியா பையில் மேட் இன் சைனா என்ற வாசகம் இந்தியில் அச்சிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து திரிணாமுல் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    கனடாவில் கடந்த ஆண்டு நடந்த சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி வந்தனர். அந்த தேசியக் கொடிகளில் 'மேட் இன் சைனா' என எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

    • பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

    இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.

    • வியாபாரிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
    • பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழக்கடை, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் இன்று காலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் என்று கூறி அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதற்கு வியாபாரிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக கூறினர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சோதனைநடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினர்.

    • கடைகளில் இருந்து மொத்தம் 9.30 கிலோ பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவங்கள், காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடசேன் மற்றும் ஊழியர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது பல்வேறு கடைகளில் இருந்து மொத்தம் 9.30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.

    வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், மீறி வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • 25 கிலோ சிக்கியது
    • பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

    நெமிலி:

    பனப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான மளிகை, டீ மற்றும் பேக்கரி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் நேற்று பனப் பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரவீன் குமார் மற்றும் பணியாளர்கள் பஸ் நிலையம், அரக்கோணம் ரோடு, அண்ணா நகர், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

    இது போன்று பிளாஸ்டிக் கவர் மற்றும் கப்புகளை பயன்ப டுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர்.
    • வியாபாரி ரஹமத்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பைகள், கவர்களுக்கு தடைவிதித்தது. விழுப்புரம் நகராட்சி சார்பில் நகர சபைத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பா ட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் மஞ்சள் பை என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்தும் வண்ணம் மஞ்சள் துணிப்பையும் பொதுமக்களுக்கு அடிக்கடி இலவசமாக வழங்கி விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள் இதனை மீறியும் ஹோட்டல்கள், சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள், காய்கறி கடைகள் பழக்கடைகளில் பிளாஸ்டிக் பை, கவர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதற்கு மூல காரணமாக செயல்படும் மொத்த பிளாஸ்டிக் கைப்பை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சுரேந்தர் ஷா உத்தரவின்படி விழுப்புரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனகுமார் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அந்த உரிமையாளர் ஹரிதாஸ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து விழுப்புரம் புதுவை சாலை உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாக தெரியவந்தது. வியாபாரி ரஹமத்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் செயல்களில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்க நேரிடும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இரு கடைகளிலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பை, கவர்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் ஆகும்.

    • கோவில் வளாகத்திற்குள் பாலித்தீன் கவர்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
    • பூஜைபொருட்களை கொண்டு வந்து அம்மன் அருள் பெறுங்கள் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்குள் நாளை (ஞாயிறு) முதல் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ஊர் பொதுமக்கள் சார்பாக கோவில் வாசலில் பதாகை(பேனர்) வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் கவர்களில்(கேரிபேக்) தேங்காய், பழம், பூ மற்றும் மாலை போன்ற பூஜை பொருள்களை வாங்கி வர கூடாது.

    நாளை கோவில் வளாகத்திற்குள் பாலித்தீன் கவர்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மீறி பூஜை பொருட்களை பாலித்தீன் கொண்டு வந்தால் கோவில் முன்பாகவே பணியாளர்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும். எனவே பூஜை கூடைகள், துணிபைகள் மூலமாக பூஜைபொருட்களை கொண்டு வந்து அம்மன் அருள் பெறுங்கள் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    • சிறு, குறு உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நெகிழிப் பையில் போட்டு தருகின்றனா்.
    • பன்னாட்டுப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் சண். ராமநாதனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சிறு, குறு உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நெகிழிப் பையில் போட்டு தருகின்றனா். இதுதொடா்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. உற்பத்தி பொருள்களின் கவரிலேயே குறியீட்டு பெயா் இருக்க வேண்டுமானால், குறைந்தது ரூ. 50 லட்சம் முதலீடு செய்தால்தான் தொழில் செய்ய முடியும். இதை மகளிா் சுய உதவிக் குழுவினா், சாதாரண உற்பத்தியாளா்களால் செய்ய முடியாது.

    பெரு நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

    பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு ஆதரவாகவும், உள்ளூா் நிறுவனங்களுக்கு எதிராகவும் செயல்பட்டால், உள்நாட்டு வணிகம் முழுமையாக முடங்கிவிடும். எனவே, இச்சட்டத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்.

    சுழற்சி முறையில் 75 மைக்ரான் நெகிழிக்கு ஸ்டிக்கா் ஒட்டி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அதில், அச்சிட்டுத்தான் விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறினால், எங்களால் இயலாத விஷயம். எங்களுக்கு உத்தரவிடும் அரசு, பன்னாட்டுப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், காா்ப்பரேட் நிறுவனங்களால்தான் வாழ முடியும்;

    சாமானிய வணிகா்களால் வாழ முடியாத நிலை ஏற்படும்.

    தஞ்சை வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடை வியாபாரிகளுக்கு சிறு, சிறு பிரச்னைகள் உள்ளன. இதை சரி செய்து தருவதாக மேயா் கூறியுள்ளாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மேயா் சண். ராமநாதன், பேரமைப்பு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

    ×