search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
    X

    நாளை முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

    • கோவில் வளாகத்திற்குள் பாலித்தீன் கவர்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
    • பூஜைபொருட்களை கொண்டு வந்து அம்மன் அருள் பெறுங்கள் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்குள் நாளை (ஞாயிறு) முதல் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ஊர் பொதுமக்கள் சார்பாக கோவில் வாசலில் பதாகை(பேனர்) வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் கவர்களில்(கேரிபேக்) தேங்காய், பழம், பூ மற்றும் மாலை போன்ற பூஜை பொருள்களை வாங்கி வர கூடாது.

    நாளை கோவில் வளாகத்திற்குள் பாலித்தீன் கவர்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மீறி பூஜை பொருட்களை பாலித்தீன் கொண்டு வந்தால் கோவில் முன்பாகவே பணியாளர்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும். எனவே பூஜை கூடைகள், துணிபைகள் மூலமாக பூஜைபொருட்களை கொண்டு வந்து அம்மன் அருள் பெறுங்கள் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×