search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

    • ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு
    • உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை முகப்பு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள், பங்க் கடைகள், டீக்கடைகள் உள்ளன. இங்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், கதிரவன், ஸ்டாலின், ராஜரத்தினம், அன்பு பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் முண்டியம்பாக்கத்தில் ஓட்டல்கள், பங்க் கடை, டீக்கடை ஆகிய வற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஓட்டல்களில் சுகாதார மற்ற முறையில், காலாவதியான உணவு பண்டங்களையும், பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்த கூடாத உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 5 ஓட்டல்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றாததால் அந்த ஓட்டல்களுக்கு மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அறிவுறு த்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தொட ரும் என ஓட்டல் உரிமையா ளர்களுக்கு எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது ஓட்டல்களில் கெட்டுப்போன வெஜ் பிரியாணி, பால் பாக்கெட், கீரிம் கேக், குளிர் பானங்கள், தேதி குறிப்பிடா மலும், காலாவதியான பிஸ்கட், உணவு பண்டங்கள் சுமார் 150 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அனைத்தையும் கீழே கொட்டி அழித்தனர்.

    Next Story
    ×