search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.29¼ கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு
    X

    ரூ.29¼ கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

    • நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பார்வையிட்டார்
    • விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவில் அமைந்துஉள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வை யிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகா னந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறை களும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளு வர் சிலைக்கு இயக்கப்படு வதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளூர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பு களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தர விட்டு உள்ளது.

    அதன்படி ரூ.29 கோடியே 33 லட்சம் செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த மே மாதம் 24-ந்தேதி தொடங்கி யது.

    இதைத் தொடர்ந்து தற்போது திருவள்ளுவர் சிலை வளாகத்தில் பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேற்று நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கிராம சாலைகள் தலைமை பொறியாளர் நெல்லை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் நாகர்கோவில் கோட்ட பொறியாளர் பாஸ்கரன் உதவி கோட்ட பொறியாளர் ஹெரால்டு கன்னியாகுமரி தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×