search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகரிப்பு"

    • ராமேசுவரத்தில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் விவசாயம் பணி என்பது இல்லாத நிலையில் வீடுகளில் உள்ள காலி இடங்களில் முருங்கைக்காய் மரம் வளர்ப்பது வழக்கமான ஒன்று. அதில் விளையும் முருங்கைக்காய்களை வீட்டு தேவைக்கு பயன்படுத்தி விட்டு மற்ற காய்களை விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் முருங்கைக்காய் மரங்களில் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மரங்களிலும் 500-க்கும் மேற்பட்ட முருங்கைக்காய் காய்ந்துள்ள தால் மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.10 முதல் 15 வரை மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துள்ளதாக மரம் வளர்ப்பில் ஈடுபடு பவர்கள் தெரிவித்தனர்.

    • இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும்.
    • புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மாறிவரும் வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் வருகின்றன. தற்போதைய வாழ்க்கை சூழலில் உணவு உள்ளிட்ட பல விஷயங்களை மக்கள் முறையாக பின்பற்ற முடிவதில்லை.

    இதனால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. மிகக்குறைந்த வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைவதை பார்க்க முடிகிறது. சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் சமீப காலமாக இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பு உள்ளிட்ட பல இதயநோய் பாதிப்பு களுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கேரளாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

    திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்சையளிப்பதில் நாட்டில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த ஆஸ்பத்திரியில் 4 மாத காலத்தில் 40 ஆயிரம் பேர் இதய நோய்க்கு சிகிச்சை பெறறுள்ளனர் என்ற அதிரச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி உள்ளிட்ட இதய நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை அளிப்பதில் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய்பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது. இது கேரள மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. நாளை இதய நோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

    • தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது.
    • டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. தண்ணீரை திறக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 16ந்தேதி (புதன்கிழமை) கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 11 ஆயிரத்து 602 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 25 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து நேற்று (17ந்தேதி) கிருஷ்ணராஜ சாகர் அணையில் 15 ஆயிரத்து 184 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 825 கன அடி தண்ணீரும் என மொத்தம் 22 ஆயிரத்து 9 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 13 ஆயிரத்து 145 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 18 ஆயிரத்து 145 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 552 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக உயர்ந்தது. பின்னர் நேற்று மாலை 9 ஆயிரத்து 394 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 938 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி உள்ளது. நேற்று காலை 53.15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 53.50 அடியாக உயர்ந்தது. அணையில் நீர் இருப்பு 20.08.டி.எம்.சி ஆக உள்ளது

    மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளதால் பண்ணவாடியில் மூழ்கியிருந்த நிலப்பரப்பு பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்ட பகுதியாக மாறி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

    தண்ணீர் வற்றிப்போன நீர் தேக்க பகுதிகள் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன. இந்த நிலப்பரப்புகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் புற்கள் அதிகளவில் முளைத்து பார்ப்பதற்கு பசுமையான மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை இந்த பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

    • தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
    • மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு விளையும் தக்காளியை உடுமலை நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் சென்னை, மதுரை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு கோடை மழை குறைந்ததோடு, தக்காளி விலை கிலோ 5 ரூபாய் என்ற அளவில் சரிந்ததால் தக்காளி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

    வழக்கமாக ஏப்ரல்- மே மாதங்களில் நடவு செய்து, ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.நடப்பாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதிக பட்சமாக 14 கிலோ கொண்ட பெட்டி 2,400 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்த விலையில் கிலோ 180 ரூபாய் வரை விற்றது.

    இந்நிலையில் தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது இயல்பை விட கூடுதல் பரப்பளவில் தக்காளி சாகுபடியாகி வருகிறது. மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகப்பட்சமாக ஒரு பெட்டி 1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய் வரை விலை நிலவியது.

    • கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
    • ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்காரணமாக குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகர் மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து அணைக்கு நேற்று 44ஆயிரத்து 436 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 48 ஆயிரத்து 25 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து இன்று 2688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.

    இதேபோல் நீர்வரத்து தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஒரு சிலதினங்களுக்குள் அணை முழு கொள்ளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 80.51 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கபினிஅணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீராக 11250 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

    இந்த உபரி நீரானது நாளை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்டுள்ள 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தற்போது மெல்ல மெல்ல பிலிக்குண்டுலுவுக்கு வர தொடங்கியுள்ளது.

    ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். இதன் காரணமாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் பரிசலில் சென்று நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை.
    • மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள்தோறும் 5 ஆயிரம் மூட்டை வரை மஞ்சள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயித்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. வடமாநிலங்களில் அதிக மழையால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டு தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தரம் குறைந்த மஞ்சளே அதிகம் கிடைப்பதால் வியாபாரிகள் ஈரோடு பகுதி மஞ்சளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர்.

    தமிழகத்தில், ஈரோடு, சேலம் பகுதி மஞ்சள் தரமாக உள்ளதால் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 8,500 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் ரூ. 10 ஆயிரத்தை எட்டியது. கடந்த வெள்ளியன்று 10,500 ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, முதல் தர மஞ்சள் அதிகபட்சமாக 12,600 ரூபாய்க்கு விற்பனையானது.

    கடந்த 6 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சளின் அளவு 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வட மாநிலங்களில் பெய்த மழையினாலும் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வணிகர்கள், இன்னும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் மஞ்சளை இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மராட்டியத்தில் மஞ்சள் மொத்த சாகுபடி பரப்பு அடுத்த மாதம் தெரியவரும் என்றும், அப்போது விலையில் மாற்றம் ஏற்படலாம், அதுவரை இதே விலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மஞ்சள் விலை 3 மாதங்களில் குவிண்டாலுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருப்பது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மஞ்சளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    • நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 50 சதவீதம் பிரசவங்கள் அதிகரித்துள்ளது.
    • தடுப்பூசிகள் போடப்படு–கின்றன.

    மதுரை

    தமிழகத்தில் சுகாதாரத் துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மருத்துவ பரிசோதனை மையங்களை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மூலம் விழிப்பு–ணர்வு பிரசாரங்கள் ஏற்ப–டுத்துவதோடு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க–வும் வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன.

    மதுரை மாநகராட்சியின் கீழ் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிக–ளுக்கான மருத்துவ சேவை–கள், தாய் மற்றும் குழந்தை நலம், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய–வற்றை சிறந்த முறையில் வழங்கி வழங்குகின்றன.

    இதன் மூலம் மதுரை நகர மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ள–தாக தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த 10 நாட்க–ளுக்கு முன்பு இரண்டு ஆரம்ப சுகாதார மையங்க–ளில் தாய்மார்களுக்கான புதிய வார்டுகள் திறக்கப் பட்டு அதில் 2 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுள்ளனர்.

    கடுமையான நோய்கள், சமூகம் சார்ந்த மற்றும் குழந்தை மருத்துவ சேவை–கள் அளிக்கும் திறன் கொண்டவையாக இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரை மாநக–ராட்சி நகர்ப்புற மருத்துவம–னைகளுக்கு வரும் கர்ப்பி–ணித் தாய்மார்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படு–கிறது.

    பாலூட்டும் தாய்மார்க–ளுக்கு பாதுகாப்பான மற் றும் கவனமாக சிகிச்சை அளிக்கப்படும் போது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உள் ளிட்ட பல்வேறு சோத–னை–கள் மற்றும் தடுப்பூசி–கள் போடப்படு–கின்றன.

    மகப்பேறுக்கு முந்தைய பராம–ரிப்பு திட்டம் உட்பட கர்ப்பிணிப் பெண்களை செவிலியர்கள் முறையான பரிசோதனைகளுக்கு உட்ப–டுத்துகிறார்கள். மேலும் இதன் விளைவாக, சராசரி மாதத்திற்கு 70 முதல் 80 பிரச–வங்கள் என்று இருந் தது தற்போது 120 ஆக அதி–கரித்துள்ளது. இது எங்க–ளுக்கு பெருமைக்குரிய விஷயம்.

    தற்போது, மதுரை மாநக–ராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மகப் பேறு மற்றும் பிரசவத் திற்கு பின்னர் கவனிக்க வேண் டிய, வசதிகளை ஏற்படுத்த தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் மூலம் நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

    மாநகராட்சியில் மேலும் ஆறு நகர்ப்புற ஆரம்ப சுகதார மையங்களில் கூடு–தல் கட்டிடங்கள் கட்டப் பட்டு, மகப்பேறு சிகிச்சை அளிக்க தேவையான வச–திகள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. இந்த வசதிகளை சுகா–தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மாதம் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அரசு மருத்துவமனை–களை நம்பியிருக்கும் கர்ப்பி–ணிப் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக பயனடைந்து வருகின்றனர் என்றார்.

    • நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், சுசீந்திரம், தக்கலை, இரணியல், குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 29.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வந்த நிலையில் தற்பொழுது உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் 5¾ அடி உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 2¾ அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 25.95 அடியாக உள்ளது. அணைக்கு 301 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.71 அடியாக உள்ளது.

    அணைக்கு 826 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 14.6, சிற்றாறு 1-12, சிற்றார் 2-16.8, களியல் 6, கன்னிமார் 3.6, கொட்டாரம் 1.2, குழித்துறை 4, மயிலாடி 5.4, நாகர்கோவில் 2.2, சுருளோடு 9.6, தக்கலை 5.3, குளச்சல் 4.6, இரணியல் 6.2, திற்பரப்பு 14.2, கோழிப்போர்விளை 10.2, அடையாமடை 2, முள்ளங்கி னாவிளை 9.6, ஆணைக்கிடங்கு 4.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குலசேகரம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்க ளில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது.
    • ஈரோடு மீன் மார்க்கெட்டு க்கு இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டி னம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது.

    இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடை ந்ததால் கடந்த வாரத்தில் இருந்து மீன்கள் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இன்று மீன் மார்க்கெட்டுக்கு மேலும் மீன்கள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு மீன் மார்க்கெட்டு க்கு இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டி னம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது . மீன்கள் வரத்து அதிகரிப்பு எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக வஞ்சரம் ஒரு கிலோ ரூ.1200 வரை விற்கப்பட்டது. இன்று விலை குறைந்து ஒரு கிலோ வஞ்சரம் ரூ.900-க்கு விற்க ப்படுகிறது.

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    அயிலை-300, மத்தி- 250, வஞ்சரம்- 900, விளா மீன்- 350, தேங்காய் பாறை - 500, முரல் -350, நண்டு -400, ப்ளூ நண்டு -750, இறால் -700, சீலா -600, வெள்ளை வாவல் - 900, கருப்பு வாவல் - 850, பாறை - 500, மயில் மீன்- 800, பொட்டு நண்டு - 450, கிளி மீன் - 600, மதன மீன்- 500, மஞ்சள் கிளி- 600, கடல் விலாங்கு- 300, திருக்கை- 400. பெரிய திருக்கை-500, நகர மீன்-450, கடல் வாவல்-60.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.44 அடியாக சரிந்து உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 1,138 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதேநேரம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.44 அடியாக சரிந்து உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 171 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,138 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதையடுத்து மதியம் 3 மணிக்கு மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சத்தியமங்கலம், பண்ணாரி, அரியப்பம் பாளையம், ஓட்டை குட்டை, புளியம் கோம்பை, வட வள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை மழை தூறி கொண்டே இருந்தது.

    இதனால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றன. பரவலாக மழை பெய்ததால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சி அளித்தது.

    இதே போல் திம்பம், தாளவாடி, ஆசனூர், தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    மேலும் பவானிசாகர், புளியம்பட்டி, புங்கர்பள்ளி, நல்லூர், காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி- மின்னலுடன் பரவ லாக மழை பெய்தது.

    பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

    பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலுக்கு 950 கனஅடியும், ஆற்றுக்கு குடிநீருக்கு 100 கனஅடியும், எல்.பி.பி. வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1055 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
    • கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர் .

    திருப்பூர்:

    தமிழகத்துக்கு வேலைவாய்ப்புக்களை தேடி, பீகார், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வடமாநிலத்தினர் ரெயில் மூலம் வருகின்றனர்.தமிழகத்தில் இயங்கும் சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ெரயில்களில் பெரும்பாலும் பயணிப்பவராக வட மாநிலத்தவரே உள்ளனர். நாட்டில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்த ஒரு நாள் தொற்று, மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    குறிப்பாக மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 93 நாட்களில் இல்லாத அளவாகும்.இருப்பினும் ரெயில்களில் வடமாநிலத்தினர் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. நேற்று முன்தினம் திருப்பூர் ரெயில் நிலையம் வந்த ரப்திசாகர், ஆலப்புழா, கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1,500க்கும் அதிகமான வடமாநிலத்தினர் வந்திறங்கினர்.

    ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலத்தினர் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கிருந்து முன்பதிவு செய்து தினமும் பலர் பயணிக்கின்றனர்.கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த பின் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்த நிலை தற்போதும் தொடர்கிறது. வடமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால், ரெயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறையவில்லை. வழக்கம்போல் உள்ளது என்றனர். இதனிடையே கொரோனா பரவலை தடுக்க திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×