முருங்கைக்காய் விளைச்சல் அதிகரிப்பு

ராமேசுவரத்தில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேசுவரம் பாரதி நகரில் வீடுகளில் வளர்க்கப்படும் முருங்கை மரத்தில் 500-க்கும் மேற்பட்ட முருங்கைக்காய்கள் விளைந்துள்ளது.
ராமேசுவரம் பாரதி நகரில் வீடுகளில் வளர்க்கப்படும் முருங்கை மரத்தில் 500-க்கும் மேற்பட்ட முருங்கைக்காய்கள் விளைந்துள்ளது.
Published on

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் விவசாயம் பணி என்பது இல்லாத நிலையில் வீடுகளில் உள்ள காலி இடங்களில் முருங்கைக்காய் மரம் வளர்ப்பது வழக்கமான ஒன்று. அதில் விளையும் முருங்கைக்காய்களை வீட்டு தேவைக்கு பயன்படுத்தி விட்டு மற்ற காய்களை விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் முருங்கைக்காய் மரங்களில் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மரங்களிலும் 500-க்கும் மேற்பட்ட முருங்கைக்காய் காய்ந்துள்ள தால் மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.10 முதல் 15 வரை மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துள்ளதாக மரம் வளர்ப்பில் ஈடுபடு பவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com