search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரல்"

    • நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், சுசீந்திரம், தக்கலை, இரணியல், குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 29.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வந்த நிலையில் தற்பொழுது உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் 5¾ அடி உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 2¾ அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 25.95 அடியாக உள்ளது. அணைக்கு 301 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.71 அடியாக உள்ளது.

    அணைக்கு 826 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 14.6, சிற்றாறு 1-12, சிற்றார் 2-16.8, களியல் 6, கன்னிமார் 3.6, கொட்டாரம் 1.2, குழித்துறை 4, மயிலாடி 5.4, நாகர்கோவில் 2.2, சுருளோடு 9.6, தக்கலை 5.3, குளச்சல் 4.6, இரணியல் 6.2, திற்பரப்பு 14.2, கோழிப்போர்விளை 10.2, அடையாமடை 2, முள்ளங்கி னாவிளை 9.6, ஆணைக்கிடங்கு 4.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குலசேகரம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்க ளில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • சிற்றார் 2- 32.4 மில்லி மீட்டர் பதிவு
    • பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்தது. இதையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு சென்றனர்.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் குளுகுளு சீசன் நிலவுகிறது. பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, மயிலாடி, குளச்சல், அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு 2 அதிகபட்சமாக 32.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.10 அடியாக உள்ளது. அணைக்கு 603 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 641 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 17.45 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை யின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 10.76 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 23.4, பெருஞ்சாணி 9.6, சிற்றாறு 1-26, சிற்றார் 2-32.4, மயிலாடி 1.6, இரணியல் 2, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 7.2, முள்ளங்கினாவிளை 4.6, நாகர்கோ வில் 1.2, பூதப்பாண்டி 7.2, சுருளோடு 9.2, கன்னிமார் 9.6, பாலமோர் 18.6, புத்தன் அணை 8.8, திற்பரப்பு 9.6.

    சாரல் மழையுடன் சூறைக் காற்றும் வீசி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

    நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தென்னை மரம் முடிந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. பார்வதிபுரம், கன்னியாகுமரி, சுங்கான்கடை பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அதை சரி செய்தனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வீரகனூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி, மேட்டூர் சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு - 18, கெங்கவல்லி - 10, வீரகனூர் - 10, ஆணைமடுவு - 10, தம்மம்பட்டி - 7.2, எடப்பாடி- 6.6, ஆத்தூர் -4.8, ஓமலூர்- 4, கரிய கோவில் - 4, மேட்டூர் - 1.8, சங்ககிரி - 1.1, கடையாம்பட்டி - 1, சேலம்- 0.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 79.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • பாலமோரில் 19.4.மி.மீ. பதிவு
    • குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    இரவும் மழை நீடித்தது.நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், கோழிப்போர் விளை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 19.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1 அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.78 அடியாக உள்ளது. அணைக்கு 776 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 538 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணையின் நீர்மட்டம் 68.77அடியாக உள்ளது.அணைக்கு 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1அணையின் நீர்மட்டம் 8.98 அடியாக உள்ளது. அணைக்கு 121 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 12 பெருஞ்சாணி 16.6 சிற்றாறு-1- 13.4 சிற்றார்- 2 -4.2 நாகர்கோவில் 6 பூதப்பாண்டி 3.2 சுருளோடு 18.4 கன்னிமார் 4.2 பாலமோர் 19.4 ஆணைகிடங்கு 2.4 குருந்தன் கோடு 6.4 அடையாமடை 3.2 கோழி போர் விலை6 முள்ளங்கினாவிளை 5.2 புத்தன் அணை-12.8

    குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.குளச்சல் முட்டம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. சூறைகாற்றும் வீசிவரு வதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகள் வள்ளல்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • பெருஞ்சாணியில் 7.8 மி.மீ. பதிவு
    • திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று திடீரென சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    மலையோர பகுதிகளி லும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. லேசான சாரல் மழை காலையில் பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு சென்றனர்.

    தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதி களிலும் மலையோர பகுதி யான பாலமோர் பகுதி யிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 7.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.10 அடியாக உள்ளது.

    அணைக்கு 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.03 அடியாக உள்ளது. அணைக்கு 269 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 12.92 அடியாகவும், சிற்றார்-2அணையின் நீர்மட்டம் 13.02 அடியாக வும், பொய்கை அணை நீர்மட்டம் 17.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.06 அடியாகவும், உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    • பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டியது
    • திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே சாரல் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலையில் நாகர்கோவிலில் சாரல் மழை பெய்தது. இதே போல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணை, சுருளோடு பகுதி களிலும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருக் கிறது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதி யில் அதிகபட்சமாக 5.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

    மலையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணைக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 257 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.80 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 535 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றார்-1 அணை யின் நீர்மட்டம் 13.32 அடியாகவும், சிற்றார்-2-அணையின் நீர்மட்டம் 13.41 அடியாகவும் உள்ளது. பொய்கை அணைநீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத் துறையாறு நீர்மட்டம் 36.58 அடியாகவும் உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணி கள் வந்திருந்தனர். அவர் கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளக மழை பெய்து வருகிறது. இதைதொடர்ந்து ஏற்காட்டில் சாரல் மழையால் பொதுமக்கள் குளிரால் அவதி பட்டு வருகின்றனர்.
    • ஏற்காடு மலைப்பாதையில் பனி சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்சியாக நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    ஏற்காட்டில் குளிர்

    குறிப்பாக தம்மம்பட்டி, காடையாம்பட்டி, ஏற்காடு உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காட்டில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இரவில் பனிப்புபொழிவும் இருந்ததால் கடும் குளிர் நிலவி வருகிறது.

    காலையிலும் பனி பொழிவு நீடித்ததால் சூரியன் தலை காட்டவில்லை. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் வீடுகளிலே முடங்கினர். மேலும் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏற்காடு மலைப்பாதையில் பனி சூழ்ந்துள்ளதால் அதில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன.

    சேலம் மாவட்டம் முழுவதும் இன்றும் காலையும் மேக மூட்டமாக காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவியது. மாவட்டத்தல் அதிக பட்சமாக தம்மம்பட்டி 10, காடையாம்பட்டி 7.2, ஏற்காடு, அனைமடுவு தலா 5 , கரியகோவில் 3, ஆத்தூர் 2.4, சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 32.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    பரமத்திவேலூரில் விடிய விடிய லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோளசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது. விடிய விடிய லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

    தொடர்ந்து2 நாட்களாக மழை பெய்து வருவதால் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. தற்போது பெய்த மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. மழையின் காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இரவில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×