search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை
    X

    குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை

    • பாலமோரில் 19.4.மி.மீ. பதிவு
    • குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    இரவும் மழை நீடித்தது.நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், கோழிப்போர் விளை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 19.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1 அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.78 அடியாக உள்ளது. அணைக்கு 776 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 538 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணையின் நீர்மட்டம் 68.77அடியாக உள்ளது.அணைக்கு 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1அணையின் நீர்மட்டம் 8.98 அடியாக உள்ளது. அணைக்கு 121 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 12 பெருஞ்சாணி 16.6 சிற்றாறு-1- 13.4 சிற்றார்- 2 -4.2 நாகர்கோவில் 6 பூதப்பாண்டி 3.2 சுருளோடு 18.4 கன்னிமார் 4.2 பாலமோர் 19.4 ஆணைகிடங்கு 2.4 குருந்தன் கோடு 6.4 அடையாமடை 3.2 கோழி போர் விலை6 முள்ளங்கினாவிளை 5.2 புத்தன் அணை-12.8

    குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.குளச்சல் முட்டம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. சூறைகாற்றும் வீசிவரு வதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகள் வள்ளல்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×