search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man"

    • கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
    • கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சினையில் பேரனை கொன்ற பாட்டியையும் வாலிபர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் அருகே மேக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் கனி. இவரது மனைவி ஜைத்தூன் பீவி (வயது 70).

    இவர்களுடைய மூத்த மகன் முகமது கனியின் மகன் காசிர் அலி (26). கூலி தொழிலாளி. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    கொலை கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கஞ்சா விற்பனை தொடர்பாக காசிர் அலியை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

    அதனை அவரது பாட்டி ஜைத்தூன் பீவி பார்த்து விட்டதால் வெளியே சொல்லி விடுவார் என நினைத்து அவரையும் அந்த வாலிபர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக ரமேஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை தியாகராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 34). இவரது மனைவி சீதாலெட்சுமி(26).

    கடந்த சில நாட்களாக ரமேஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில், ரமேசை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுதொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த வைகுண்ட மணி என்பவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • கணவன்-மனைவியி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    பணகுடி:

    பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பர வடிவு. இவரது மகன் வைகுண்ட மணி. இவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபேகா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவியி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வைகுண்ட மணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில வாரங் களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் தங்கியிருக்கும் சுபேகாவிடம், தன்னுடைய குழந்தையை காட்டும்படி வைகுண்ட மணி கூறி உள்ளார்.

    ஆனால் சுபேகா குழந்தையை காட்ட மறுத்து விட்டதாக கூறப் படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.

    • பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • செந்தில்முருகன் தனது மகனை சத்தம் போட்டுள்ளார்.

    நெல்லை:

    பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூரை சேர்ந்தவர் செந்தில் முருகன். விவசாயி. இவரது மகன் அருள்ராஜ்(வயது 18). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டின் மாடியில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நேற்று வயலில் வெண்டைக்காய் பறிக்க தனது தந்தையுடன் அருள்ராஜ் சென்றுள்ளார்.ஆனால் அங்கு வைத்து செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில்முருகன் தனது மகனை சத்தம் போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அருள்ராஜ் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார்.
    • நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார்

    கோவை:

    கோவை துடியலூர் ஜி.என்.மில் அடுத்த எஸ்.என். பாளையம் பட்டத்தரசி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 24). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். அங்கு தனது நண்பருடன் அமர்ந்து மதுகுடித்தார்.

    அப்போது பரத்குமார் அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்த நபரின் மது பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர்.

    பின்னர் பரத்குமார் தனது நண்பரை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார். இதனை பார்த்த அந்த நபர் அவர்களது பின்னால் வந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.

    பலத்த காயம் அடைந்த பரத்குமாரை அவரது நண்பர் ரமேஷ் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து பரத்குமார் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (42). தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டர்.
    • கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார்(38). இவரது மனைவி சுமதி(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மதன்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இதனிடையே அதேபகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்த மீனா(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்தவுடன் தாய் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் மீனாவும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மதன்குமார் விஷம்குடித்து மயங்கி கிடந்தார். கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழக்கம் இருந்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனவேதனையடைந்த சந்திரன் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள தெற்குமூணான்டிபட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் சந்திரன்(40).

    இவருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

    குடிப்பழக்கம் இருந்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனையடைந்த சந்திரன் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தோடு நால்ரோட்டில் செல்போன் கடையில் நூதன முறையில் பணம் மோசடி செய்த வாலிபர்.
    • இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகே உள்ள சித்தோடு நால் ரோட்டில் அரவிந்தன் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் வந்து செல்வார்.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்தன் கடைக்கு அந்த வாலிபர் தனது வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரம் மணி டிரான்ஸ்பர் செய்ய சொன்னார்.

    இதனைத் தொடர்ந்து அரவிந்தன் ரூ.25 ஆயிரம் வாலிபரின்வங்கி கணக்கில் மணி டிரான்ஸ்பர் செய்தார். பின்னர் அரவிந்தன் போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்க முயன்றார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இது குறித்து அரவிந்தன் சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி, புதுப்பாளையம் மணியன்காரன் வலசு பகுதியைச் சேர்ந்த சண்முகம் (27) என்பதும் இவர் மணி டிரான்ஸ்பர் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சண்முகம் இது போல் யாராரிமாவது பணம் மோசடியில் ஈடுபட்டாரா? என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திண்டுக்கல் அருகே ஆடலூர் செல்லும் சாலையில் இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் இருந்து ஆடலூர் செல்லும் சாலையில் இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டி–ருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்ெகாண்டனர். அவரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து சோதனை நடத்தியதில் இறந்தவர் செம்பட்டி அருகில் உள்ள பச்சமலையான் கோட்டையை சேர்ந்த முனீஸ்வரன் (வயது35) என தெரிய வந்தது.

    கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு 2 திருமணங்கள் நடந்து மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இவர் எதற்காக இங்கே வந்தார்? விபத்தில் இறந்தாரா? அல்லது கொைல செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரது உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள குப்பம்மாள்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் வினித்ராஜா (24).

    இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சின்னக் காளை மகன் முத்துப்பாண்டிக்கும் (28) இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வினித்ராஜாவுக்கு முத்துப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வினித்ராஜா அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டி மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த வாலிபர் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இறந்தவர் யார்?, என விசாரணை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திம்மூர் கிராமத்தில் பச்சமுத்து என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில நேற்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் வாலிபருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
    • சிகிச்சை முடிந்து வெளியே வந்த வாலிபரை காணவில்லை.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள நரிக்குடி வடக்கு காலனியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் வினோத்(வயது 20). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அதற்காக சிகிச்சை அளிப்பதற்கு அவரது தாத்தா தேவராஜ்(62) என்பவர் சமீபத்தில் வினோத்தை நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை முடித்துக்கொண்டு 2 பேரும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தனர். அப்போது திடீரென வினோத் மாயமானார். இதுதொடர்பாக தேவராஜ் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ×