search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மீது வழக்கு"

    • பெற்றோருக்கு தெரியாமல் 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • சந்தேகமடைந்த அவரது தாயார் விசாரித்த போது திருமணமானது தெரியவந்தது.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே படந் தால் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 2பேரும் பெற்றோ ருக்கு தெரியாமல் அங் குள்ள வீரசின்னம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சிறுமி வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் விசாரித்த போது திருமணமானது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் மகளிர் ஊர் நல அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஊர் நல அலுவலர் மாரியம்மாள் விசாரணை நடத்தியதில் 15 வயது பெண்ணுக்கு திரு மணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் கருப்பசாமி மீது குழந்தைகள் திருமணச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வெடி பொருட்கள் வாங்கி வந்ததாக லட்சுமணன் போலீசாரிடம் தெரிவித்தார்.
    • மொபட்டில் கொண்டு வந்ததற்கு லட்சுமணன் மீது பங்களாப்புதூர் வழக்கு பதிவு செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த புஞ்சை துறையம்பாளையம் பள்ளம் அருகே பங்களா ப்புதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒரு வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் டி.என்.பாளையம் அடுத்த வாணி ப்புத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த லட்சுமணன் (25) என்றும் சாக்கு பையில் 50 ஜெலட்டின் குச்சிகள், 40 மின்சார அல்லாத டெட்டனேட்டர், 22 மின்சார டெட்டனேட்டர் என வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விவசாய சம்ப ந்தப்பட்ட தேவைகளுக்காக சங்ககிரி தனியார் வெடி மருந்து கிடங்கில் இருந்து வெடி பொருட்கள் வாங்கி வந்ததாக லட்சுமணன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    வெடி மருந்து வாங்கியதற்கான ரசீது லட்சுமணன் வைத்திருந்தார்.

    ஆனால் முறையான பாதுகாப்புடன் வெடிமருந்து பொருட்களை கொண்டு வராமல் பொது வழியில் அஜாக்கிரதையாக மொபட்டில் கொண்டு வந்ததற்கு லட்சுமணன் மீது பங்களாப்புதூர் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் லட்சுமணன் மொபட்டில் கொண்டு வந்த வெடிமருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சமூக நலத்துறை அதிகாரி நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரும் பிரேம்குமார் 22 என்ற வாலிபரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமிக்குபுகார் வந்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தனலட்சுமி விசாரணை நடத்தினார். விசாரணையில் மைனர் பெண்ணை பிரேம்குமார் திருமணம் செய்தது தெரியவந்தது.

    இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சியாமளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் கவிதா வழக்கு தொடர்ந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கவிதா. இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்காக 7 பவுன் நகைகள், ரூ.50ஆயிரத்தை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். மேலும் திருமணத்திற்காக ரூ.1லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் ராஜாராம் தினமும் மது குடித்து விட்டு வந்து கவிதாவுடன் தகராறு செய்து வந்தார். அத்துடன் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு மனைவியிடம் வற்புறுத்தி உள்ளார். இதனால் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    மேலும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அழைத்து பேசியபோது மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், அவருக்கு 5 பவுன் நகைகள்,ரூ.1½ லட்சம் தருவதாகவும் ராஜாராம் எழுதி கொடுத்தார். ஆனால் பணம், நகை தரவில்லை. இந்த நிலையில் கவிதாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், பணம் தரமுடியாது என கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் கவிதா வழக்கு தொடர்ந்தார். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் ராஜாராம் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • அந்த மாணவி வீட்டிற்கு தெரிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என அஜித்தை வற்புறுத்தி உள்ளார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ராஜாவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் எம்.எஸ்.சி படித்து முடித்து விட்ட நிலையில் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் அஜித் குமார் (23). இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அஜித் குமார், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை ஏற்காடு உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த மாணவி வீட்டிற்கு தெரிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என அஜித்தை வற்புறுத்தி உள்ளார். அதற்கு அஜித் மறுத்து விட்டதாக கூறப்ப டுகிறது.

    இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த அந்த மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருவாக்கவுண்டனூர் பைாஸில் சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என ரகசிய தகவல் கிடைத்தது.
    • சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தி சூர்யா மீது குழந்தைகள் திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஞ்சாயத்து யூனியன் சமூக நல அலுவலராக பணியாற்றி வருபவர் சாந்தா (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திருவாக்கவுண்டனூர் பைாஸில் சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சாந்தா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் காமராஜர் காலனியை சேர்ந்த ரவி மகன் சூர்யா (22) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

    இது குறித்து சாந்தா கொடுத்த புகாரின்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தி சூர்யா மீது குழந்தைகள் திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

    • பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.
    • சிவன் மீது மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள பள்ளத்து கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சிவன் (வயது 31). இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.

    இது தொடர்பாக அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலித்தபோது சிவன் தனது பிறந்த சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்திருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலி ஆவணம் தாக்கல் செய்தது தொடர்பாக சிவன் மீது மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ஓசூர் அருகே சிறுமி ஏமாற்றி கற்பழிக்கப்பட்டார்.
    • ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பாய்ந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கும், ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த நாகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, நாகா சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நாகா அந்த சிறுமியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

    இது பற்றி அந்த சிறுமி அவரிடம் கேட்ட போது எந்த பதிலும் கூறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் உறவு வைத்ததாக நாகா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள குப்பம்மாள்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் வினித்ராஜா (24).

    இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சின்னக் காளை மகன் முத்துப்பாண்டிக்கும் (28) இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வினித்ராஜாவுக்கு முத்துப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வினித்ராஜா அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டி மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×