என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
- பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- அந்த மாணவி வீட்டிற்கு தெரிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என அஜித்தை வற்புறுத்தி உள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ராஜாவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் எம்.எஸ்.சி படித்து முடித்து விட்ட நிலையில் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் அஜித் குமார் (23). இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித் குமார், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை ஏற்காடு உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி வீட்டிற்கு தெரிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என அஜித்தை வற்புறுத்தி உள்ளார். அதற்கு அஜித் மறுத்து விட்டதாக கூறப்ப டுகிறது.
இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த அந்த மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்