search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
    X

    பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

    • பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • அந்த மாணவி வீட்டிற்கு தெரிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என அஜித்தை வற்புறுத்தி உள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ராஜாவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர் எம்.எஸ்.சி படித்து முடித்து விட்ட நிலையில் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் அஜித் குமார் (23). இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அஜித் குமார், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை ஏற்காடு உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த மாணவி வீட்டிற்கு தெரிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என அஜித்தை வற்புறுத்தி உள்ளார். அதற்கு அஜித் மறுத்து விட்டதாக கூறப்ப டுகிறது.

    இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த அந்த மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×