search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case against teenager"

    • மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் கவிதா வழக்கு தொடர்ந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கவிதா. இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்காக 7 பவுன் நகைகள், ரூ.50ஆயிரத்தை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். மேலும் திருமணத்திற்காக ரூ.1லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் ராஜாராம் தினமும் மது குடித்து விட்டு வந்து கவிதாவுடன் தகராறு செய்து வந்தார். அத்துடன் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு மனைவியிடம் வற்புறுத்தி உள்ளார். இதனால் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    மேலும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அழைத்து பேசியபோது மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், அவருக்கு 5 பவுன் நகைகள்,ரூ.1½ லட்சம் தருவதாகவும் ராஜாராம் எழுதி கொடுத்தார். ஆனால் பணம், நகை தரவில்லை. இந்த நிலையில் கவிதாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், பணம் தரமுடியாது என கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் கவிதா வழக்கு தொடர்ந்தார். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் ராஜாராம் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ×