search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மர்மச்சாவு"

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் வாலிபர் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
    • பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் ஆலமரத்தெருவை சேர்ந்த இருளப்பன் மகன் பிரபாகரன்(30). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்ததால் மீனா கோவித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரபாகரன் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் அருகே பூச்சிமருந்து பாட்டிலும் இருந்துள்ளது. இதுகுறித்து பிரபாகரனின் தாய் போதுமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் வீட்டின் அருகே ராேஜஷ் இறந்து கிடந்தார்.
    • இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை யில் உள்ள பசும்ெபான் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ராேஜஷ் (வயது23). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே ராேஜஷ் இறந்து கிடந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ராேஜஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி-பெரியகுளம் சாலையில் ரத்தினம் நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்தார்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது42). இவர் தேனி-பெரியகுளம் சாலையில் ரத்தினம் நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பிறந்த நாளை கொண்டாட நண்பர்களுடன் பியர் சோலா பகுதிக்குச் சென்ற வாலிபர் 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
    • கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என்று கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(19). சுற்றுலா வழிகாட்டி யாக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்குமுன் தனது பிறந்த நாளை கொண்டாட நண்ப ர்களுடன் பியர் சோலா பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாயமான தன் மகனை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

    இந்நிலையில் பியர் சோலா பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்ட கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். இதனை யடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை யினர் அங்கு விரைந்து வந்தனர்.

    கிணற்றில் கிடந்த வாலி பர் உடலை போராடி மீட்டனர். அது சந்தோஷ்கு மார் என தெரியவந்தது. பிறந்தநாள் கொண்டாடச் சென்ற சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தி ல்கொடை க்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்ப வம் கொடைக்கானல் பகுதி யில் அதிர்ச்சி ஏற்படுத்தியு ள்ளது.

    • திண்டுக்கல் அருகே ஆடலூர் செல்லும் சாலையில் இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் இருந்து ஆடலூர் செல்லும் சாலையில் இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டி–ருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்ெகாண்டனர். அவரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து சோதனை நடத்தியதில் இறந்தவர் செம்பட்டி அருகில் உள்ள பச்சமலையான் கோட்டையை சேர்ந்த முனீஸ்வரன் (வயது35) என தெரிய வந்தது.

    கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு 2 திருமணங்கள் நடந்து மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இவர் எதற்காக இங்கே வந்தார்? விபத்தில் இறந்தாரா? அல்லது கொைல செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரது உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×