search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாட சென்ற வாலிபர் மர்மச்சாவு
    X

    பலியான சந்தோஷ்குமார்.

    கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாட சென்ற வாலிபர் மர்மச்சாவு

    • பிறந்த நாளை கொண்டாட நண்பர்களுடன் பியர் சோலா பகுதிக்குச் சென்ற வாலிபர் 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
    • கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என்று கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(19). சுற்றுலா வழிகாட்டி யாக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்குமுன் தனது பிறந்த நாளை கொண்டாட நண்ப ர்களுடன் பியர் சோலா பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாயமான தன் மகனை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

    இந்நிலையில் பியர் சோலா பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்ட கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். இதனை யடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை யினர் அங்கு விரைந்து வந்தனர்.

    கிணற்றில் கிடந்த வாலி பர் உடலை போராடி மீட்டனர். அது சந்தோஷ்கு மார் என தெரியவந்தது. பிறந்தநாள் கொண்டாடச் சென்ற சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தி ல்கொடை க்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்ப வம் கொடைக்கானல் பகுதி யில் அதிர்ச்சி ஏற்படுத்தியு ள்ளது.

    Next Story
    ×