search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டர்.
    • கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார்(38). இவரது மனைவி சுமதி(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மதன்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இதனிடையே அதேபகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்த மீனா(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்தவுடன் தாய் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் மீனாவும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மதன்குமார் விஷம்குடித்து மயங்கி கிடந்தார். கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×