search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wages"

    • துணை ஆய்வாளர் ஊதியம் முரண்பாடுகளை கலைய வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் தொடங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்கங்தினர் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திடவும், களப்பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடி க்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    தரம் இறக்கப்பட்ட உருவட்ட அளவர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமித்திட வேண்டும்.

    துணை ஆய்வாளர் ஊதியம் முரண்பாடுகளை கலந்திட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்கிட வேண்டும். களப்பணியாளருக்கு மழை படி வழங்கிட வேண்டும்.

    அனைத்து வட்டங்களிலும் ஒரு டிஜிபி எஸ் கருவி வாங்கி பணிசுமையை போக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 கோரிக்களை வெளியிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் பத்மா மற்றும் அனைத்து நில அளவை ஊழியர்கள் சங்கத்தினர் கலந்துகொன்டனர். முடிவில் நகர அளவை ஆய்வாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    • கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரி கிராம ஊராட்சி செயலர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.
    • மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதற்கட்டமாக அரசுக்கு 1 லட்சம் கடிதங்கள் அனுப்பும் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 1 லட்சம் கடிதம் அனுப்பும் இயக்கம் தபால் அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சேகுஜலாலுதீன் முன்னிலை யில் நடந்தது.

    அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் கஜேந்திரன், செயலாளர் மங்களசாமி, ஊராட்சி செயலர்கள் வாணி, நாகராஜ், பாலகிருஷ்ணன், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் சேகு ஜலாலுதீன் கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுநிலை. சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டும்.

    ஒய்வு பெற்ற ஊராட்சி செயலருக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த பணிக்கொடை ரூ.2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்குவதுடன், மாத ஊதியத்தை ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி அவர்களின் ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கவும், ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலகம் நேரம் தாண்டி பணிகளை செய்ய நிர்ப்பந்தித்தல், இரவு நேரங்கள், விடுமுறை நாட்கள் அவசரப் பணி என்று சொல்லி காலநேரம் வழங்காமல் சாத்தியமற்ற பணிகளை உடனே செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிப்பதையும், பணியில் நெருக்கடி நிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
    • ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது.

    திருப்பூர் :

    உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    இது குறித்து தூய்மை பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) செயலாளர் ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணி, குடிநீர் வழங்கல், வாகன ஓட்டுநர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு ஆகிய பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் ரூ. 330 மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரூ. 300 வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை பணியில் தனியார் நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் போது, தினக்கூலியை நிர்ணயித்து வழங்க வேண்டும் என பட்டியல் வழங்கியுள்ளது. ஆனால் அது வழங்கப்படுவதில்லை. ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது. இதில் இ.எஸ்.ஐ., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 16.21. பணியாளர் பங்களிப்பு ரூ. 3.74 பிடித்தம் செய்ய வேண்டும். அதேபோல் தொழிலாளர் பி.எப்., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 64.87. பணியாளர் பங்களிப்பு ரூ. 59.88 பிடித்தம் செய்ய வேண்டும்.

    சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ. 12.88 இதில் ஒதுக்கப்படுகிறது. இதற்கு சேவைக்கட்டணம் 10 சதவீதம், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் பிடித்தம் போக தினமும், ரூ. 435.43 வழங்க வேண்டும். அதன்படி மாதம், 26 நாளுக்கு ஒருவருக்கு ரூ. 11,321.18 வழங்க வேண்டும். பிடித்தங்களுக்கு உரிய ஆவணம் வழங்க வேண்டும்.

    இதிலும் ஒப்பந்த தாரர் பங்களிப்புத் தொகை, பணியாளர்கள் கணக்கில் இருந்தே செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு பணியாளரிடம் இருந்தும் ஏறத்தாழ 3 ஆயிரம் வரை குறைகிறது.ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளப்படும் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் வழங்கும் கூலியை ஒப்பிடுகையில் திருப்பூரில் மிகவும் மோசமான நிலை உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் ரூ. 707 வழங்கி, பி.எப்., பிடித்தம் போக ரூ. 622 , திருச்சியில் 1,344 பேருக்கு தினக்கூலி ரூ. 575 , பிடித்தம் போக ரூ. 506 வழங்குகின்றனர்.கலெக்டர் நிர்ணயித்த அடிப்படையில் கூலி உயர்த்தி வழங்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்க வேண்டும். ஒப்பந்த முறை கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்.
    • விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவருமான சீனிவாசராவ் 61 -வது நினைவு நாள் இன்று தஞ்சையில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் , இத்திட்டத்தை நகரங்கள், தினக் கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாநகர செயலாளர் பிரபாகர், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் துரை, ராமலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர மோகன், ஏ .ஐ .டி. யூ. சி மாநிலச் செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட தலைவர் சேவையா, அரசு போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன், நுகர்பொருள் வாணிப கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் மருத்துவர் சுதந்திர பாரதி , கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் சீனிவாசராவ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    • விவசாய தொழிலாளிக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும் தனித்துறையை உருவாக்கக் வேண்டும்.
    • விவசாய தொழிலாளிக்கு இலவச வீட்டு மனை தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்

    அவினாசி :

    அவினாசியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. அதில் கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளிக்கு தினசரி கூலி ரூ. 600 வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:- விவசாய தொழிலாளிக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும் தனித்துறையை உருவாக்கக் வேண்டும். சொந்தமாக இடமோ வீடு இல்லாத விவசாய தொழிலாளிக்கு இலவச வீட்டு மனை தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் சிறு குறு தொழில்கள் செய்திடவும், கால்நடைகள் வளர்ப்பில் கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் சிறு குறு தொழில்கள் செய்திடவும், கால்நடைகள் வளர்ப்பில் கூட்டுறவு வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வழங்க வேண்டும்.

    தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்கள் 200 ஆக உயர்த்தி இதில் பணியாற்றும் தொழிலாளிக்கு கூலி உயர்வு ரூ.600 வழங்க வேண்டும். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வேலை வழங்குவதை கைவிட்டு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பூண்டி நகராட்சி ,அவினாசி பேரூராட்சி பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். சேவூர் பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனை வழங்கிய இடத்தை வகை மாற்றம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும் சரியான அளவில் வழங்க வேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள அரசு தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்ய ரூ.2 லட்சம் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தாமணி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவியே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

    இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார். உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சாந்தாமணி பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். போரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
    • கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம் சுமை சங்க மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு, தொழிலாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிவானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எடுத்து வரும் தனியார் மயமாக்க நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் குறிக்கும் விளக்கிப் பேசினார்.

    இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த கொள்முதல் பணியாளர்கள் நிரந்தரப்படுத்துவதில் மிகுந்த கால தாமதப்படுத்துகிறது. உடனே இவர்களை நிரந்தரபடுத்த வேண்டும், கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், செயலாளர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணியன், முருகேசன், கலியபெருமாள், ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், சுமை சங்க மாவட்ட செயலாளர்புஸ்பநாதன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை மாவட்ட செயலாளர்ஆனந்தன், மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கி ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்திட வேண்டும் என்று கோஷமிட்டனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு சார்பில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். முன்னதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பெருமாள், மாவட்ட தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மோகன் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.

    அப்போது வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கி ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்திட வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவசாய தொழிலாளிகளுக்கு கூலியை உயர்த்திட வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 200 நாள் வேலை, நாள் ஒன்றுக்கு ரூ. 600 ஊதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டும், தனை நகர்புறத்திலும் விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

    மேலும் கல்வி, சுகாதாரத் துறை உள்ளிட்டவற்றை தனியார்களிடம் ஒப் படைக்க கூடாது எனவும், கிராமங்களில் கூடுதலான சுகாதார மையங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி அளித்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் கந்துவட்டி கொடுமை மற்றும் சாதிய வன்கொடுமை அதிகரித்து வருவதாகவும், உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து கந்து வட்டியை முற்றிலுமாக ஒழித்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    • மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா்.
    • பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளா் சம்மேளனத்தின்(சிஐடியூ) 8வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா். வரவேற்புக் குழுத் தலைவா் மூா்த்தி வரவேற்றாா். சிஐடியூ. மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:- பஞ்சாலைகளில் பயிற்சியாளா்களின் குறைந்தபட்ச தினசரி கூலியை ரூ.493 ஆக அமல்படுத்த வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்க வேண்டும். ஏப்ரல் மாதம் பேசி முடிவு செய்யப்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகளின் ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். கொரோனா காலத்தில் 2020 மாா்ச் மாதத்தில் நிறுத்தப்பட்ட தேசிய பஞ்சாலைகளை இயக்கி தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

    புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்கள் பணியாற்றும் ஆலைகளில் விசாகா பாலியல் புகாா் கமிட்டி அமைக்க வேண்டும். பஞ்சாலை தொழிலாளா்களுக்கு பென்சன் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×