search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில், நில அளவை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறையில், நில அளவை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • துணை ஆய்வாளர் ஊதியம் முரண்பாடுகளை கலைய வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் தொடங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்கங்தினர் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திடவும், களப்பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடி க்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    தரம் இறக்கப்பட்ட உருவட்ட அளவர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமித்திட வேண்டும்.

    துணை ஆய்வாளர் ஊதியம் முரண்பாடுகளை கலந்திட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்கிட வேண்டும். களப்பணியாளருக்கு மழை படி வழங்கிட வேண்டும்.

    அனைத்து வட்டங்களிலும் ஒரு டிஜிபி எஸ் கருவி வாங்கி பணிசுமையை போக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 கோரிக்களை வெளியிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் பத்மா மற்றும் அனைத்து நில அளவை ஊழியர்கள் சங்கத்தினர் கலந்துகொன்டனர். முடிவில் நகர அளவை ஆய்வாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×