search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.ஐ.டி.யூ."

    • சி.ஐ.டி.யூ. சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    நெல்லை:

    புதிய வாகன மோட்டார் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், 15 ஆண்டுகளான வாகனங்களை அழிக்கும் உத்தரவை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் சி.ஐ.டி.யூ. சார்பில் இன்று வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. நெல்லை வண்ணார் பேட்டையில் சி.ஐ.டி.யூ. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார்.

    இதில் ஏராளமான தொழி லாளர்கள் வாகனங்களுடன் பங்கேற்று சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதேபோல அம்பை, பாப்பாக்குடி, திசை யன்விளை உள்ளிட்ட இடங்களிலும் சி.ஐ.டி.யூ. சார்பில் போராட்டம் நடந்தது.

    • கன்னியாகுமரியில் 3 நாள் நடைபெறுகிறது
    • தோழர் ரோகிணி பங்கேற்பு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் நவம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சி.ஐ.டி.யூ. 15-வது மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 750 சி.ஐ.டி.யூ. பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அகில இந்திய தலைவர் ஹேமலதா, துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த மாநாட்டையொட்டி நவம்பர் 3-ந் தேதி மாலை 3 மணிக்கு கன்னியாகுமரியில் தியாகிகளின் தீப சங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்டத்தில் இருந்து சுமார் 100 தியாகிகளின் தீபங்கள் ஏந்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தியாகிகளின் தீப சங்கம நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் தோழர் ரோகிணி கலந்து கொள்கிறார். கன்னியா குமரியில் 3 நாட்கள் நடக்கும் மாநாட்டை தொடர்ந்து 6-ந் தேதி மாலை நாகராஜா கோவில் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இந்த பொதுக் கூட்டத்தையொட்டி அன்றைய தினம் வெட்டூர்ணிமடத்தில் இருந்து நாகராஜா கோவில் திடல் வரை ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பேரணியும் நடக்கிறது.

    சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு நடப்பதையொட்டி மாநாட்டு வரவேற்பு குழு அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று பார்வதிபுரம் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வரவேற்பு குழு தலைவர் வக்கீல் செலஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சிங்காரம் வரவேற்றார். மேயர் மகேஷ் வரவேற்பு குழு அலுவ லகத்தை திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, மண்டல தலைவர் ஜவகர், சி.ஐ.டி.யூ. பொருளாளர் சித்ரா, நிர்வாகிகள் அகமது உசேன், கண்ணன், பெருமாள், மரிய ஸ்டீபன், சுரேஷ், மோகன், லட்சுமணன், சந்திரபோஸ், பேராசிரி யர்கள் நாகராஜன், மனோகர் ஜெஸ்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா்.
    • பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளா் சம்மேளனத்தின்(சிஐடியூ) 8வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா். வரவேற்புக் குழுத் தலைவா் மூா்த்தி வரவேற்றாா். சிஐடியூ. மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:- பஞ்சாலைகளில் பயிற்சியாளா்களின் குறைந்தபட்ச தினசரி கூலியை ரூ.493 ஆக அமல்படுத்த வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்க வேண்டும். ஏப்ரல் மாதம் பேசி முடிவு செய்யப்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகளின் ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். கொரோனா காலத்தில் 2020 மாா்ச் மாதத்தில் நிறுத்தப்பட்ட தேசிய பஞ்சாலைகளை இயக்கி தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

    புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்கள் பணியாற்றும் ஆலைகளில் விசாகா பாலியல் புகாா் கமிட்டி அமைக்க வேண்டும். பஞ்சாலை தொழிலாளா்களுக்கு பென்சன் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×