search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த உறுதிமொழி ஏற்பு
    X

    உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த உறுதிமொழி ஏற்பு

    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்.
    • விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவருமான சீனிவாசராவ் 61 -வது நினைவு நாள் இன்று தஞ்சையில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் , இத்திட்டத்தை நகரங்கள், தினக் கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாநகர செயலாளர் பிரபாகர், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் துரை, ராமலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர மோகன், ஏ .ஐ .டி. யூ. சி மாநிலச் செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட தலைவர் சேவையா, அரசு போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன், நுகர்பொருள் வாணிப கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் மருத்துவர் சுதந்திர பாரதி , கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் சீனிவாசராவ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    Next Story
    ×