search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்"

    • நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
    • வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கரூர் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பரமசிவம் என்பவர் மேலாளராக உள்ளார்.

    சின்னமனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து அதனை வசூல் செய்வதற்காக பல ஊழியர்களையும் கணேசன் நியமித்துள்ளார். கணேசன் 2 மாதத்துக்கு ஒரு முறை நிதி நிறுவனத்துக்கு வந்து வரவு செலவு கணக்குகளை பார்த்து பணத்தை பெற்றுச் செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று பைனான்ஸ் மேலாளர் பரமசிவம் மற்றும் ஊழியர் கண்ணன் ஆகியோர் வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொண்டு காமயகவுண்டன்பட்டியில் இருந்து நாராயணதேவன் பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    செல்லாயி அம்மன் கோவில் அருகே இவர்கள் நின்று கொண்டு இருந்த போது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் பணம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றனர்.

    மிளகாய் பொடி தூவியதால் நிலை குலைந்து கீழே விழுந்த அவர்கள் அதன் பின்னர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்ணன் தனது நண்பர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு வசூல் செய்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர். பணம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் ரூ.2 லட்சமே கிடைத்ததால் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான கரூரைச் சேர்ந்த அபிஷேக் (36), வேலூரைச் சேர்ந்த பாஸ்கரன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.2 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
    • அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவட்டார்:

    குலசேகரம் அருகே உள்ள ஆனைக்கூட்டுவிளை கிளக்கம்பாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் அஜில் ராஜ் (வயது 38). இவருக்கு அனுஜா (26) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக இவருக்கும், மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதன் காரணமாக அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அஜில் ராஜ் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுவுடன் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை தின்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.
    • மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (வளர்மதி) கிளையின் நியாய விலைக்கடை பணியாளர் செல்வராணி விபத்தில் சிக்கினார்.

    அப்போது மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், அவரது வாகனத்திலேயே ஏற்றி சென்று டி.எம்.எப்.மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். அவரின் இந்த சிறப்பான செயலுக்கு வளர்மதி பண்டக பணியாளர்களின் சார்பாக அவரை பாராட்டி அவருக்கு நன்றி தெரி விக்கப்பட்டது. மேலும் மேயர், செல்வராணியின் உடல்நலத்தை பற்றி விசாரித்ததோடு மட்டும ல்லாமல் அவரே கோவை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு செல்வராணியின் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ததோடு மட்டுமின்றி மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.

    • பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .
    • பதவி உயர்வு வழங்கவேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மண்டலத்தில் , பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் வகையில் பொது சுகாதார துறையில் மேற்கொள்வது போல், மண்டல பேரூராட்சி உதவி இயக்குனரின் மேற்பார்வையில் பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .

    நாகர்கோவில் மண்டலத்தில் உள்ள பேரூராட்சிகளில் 1996 - க்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட அடிப்படை பணியாளர்களுக்கு , பதவி உயர்வு வழங்கவேண்டும் . அரசு பணியாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை பெறுவதில் , மாவட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடினமான சூழ்நிலையை கண்டித்தும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது . போராட்டத்திற்கு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

    மாநில பொதுச்செயலாளர் முத்து , மாநில பொருளாளர் சேகர் , மாநில அமைப்புச் செயலாளர் சதீஷ், துணைப்பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட செயலாளர் தனசேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுபாஷ்சந்திரபோஸ் , இசக்கிமுத்து , ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகி நரேந்திரகுமார் , உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விவசாய தொழிலாளிக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும் தனித்துறையை உருவாக்கக் வேண்டும்.
    • விவசாய தொழிலாளிக்கு இலவச வீட்டு மனை தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்

    அவினாசி :

    அவினாசியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. அதில் கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளிக்கு தினசரி கூலி ரூ. 600 வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:- விவசாய தொழிலாளிக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும் தனித்துறையை உருவாக்கக் வேண்டும். சொந்தமாக இடமோ வீடு இல்லாத விவசாய தொழிலாளிக்கு இலவச வீட்டு மனை தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் சிறு குறு தொழில்கள் செய்திடவும், கால்நடைகள் வளர்ப்பில் கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் சிறு குறு தொழில்கள் செய்திடவும், கால்நடைகள் வளர்ப்பில் கூட்டுறவு வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வழங்க வேண்டும்.

    தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்கள் 200 ஆக உயர்த்தி இதில் பணியாற்றும் தொழிலாளிக்கு கூலி உயர்வு ரூ.600 வழங்க வேண்டும். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வேலை வழங்குவதை கைவிட்டு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பூண்டி நகராட்சி ,அவினாசி பேரூராட்சி பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். சேவூர் பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனை வழங்கிய இடத்தை வகை மாற்றம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும் சரியான அளவில் வழங்க வேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள அரசு தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்ய ரூ.2 லட்சம் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் அவிநாசி ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது.
    • மருத்துவ பணியாளர்கள் தினமும் செல்லும் இடம், நேரம் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அவினாசி :

    அவிநாசி வட்டார சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் அவிநாசி ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இணை இயக்குனர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    இதில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ பணியாளர்கள் தினமும் செல்லும் இடம், நேரம் குறித்து அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். வாத நோயால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கியுள்ளோருக்கும் தொடர் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் யோசனை தெரிவித்தனர்.

    டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக 5 கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தில் கொசு மருந்து தெளிப்பு உபகரணம் வாங்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ் ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் வட்டார அளவில் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் பங்கேற்றனர்.

    • அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
    • 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    அவிநாசி :

    அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 சிறியஅங்கன்வாடிகளில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள இடங்களுக்கு அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கே கூடுதல் பொறுப்பும் வழங்கப்படுகிறது.

    இதனால் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. சில நேரங்களில் அங்கன்வாடியில் உள்ள சமையலர் விடுப்பு எடுத்து விட்டால், அங்கன்வாடி பணியாளர்களே கூடுதலாக சமையல் வேலையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கான கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்படுகிறது.குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்து அங்கன்வாடி மையங்கள் செயல்பட வேண்டிய நிலையில் இது அரசின் முதன்மை திட்டமாக பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் தேவைக்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் திட்டத்தின் நோக்கம் எதிர்பார்த்த பலன் தருவதில் சிக்கல் உள்ளது.இது குறித்து அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுக்க அங்கன்வாடி பணியாளர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம், முழு அளவில் பலன் தரும் என்றனர்.

    • பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
    • பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் யூனியன் சார்பில் 3-ம் பேரவை கூட்டம் திருப்பூர் தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். திருப்பூர் கூட்டுறவு கட்டிட சங்க செயலாளர் செல்வி வெங்கடாசலம் வரவேற்றார். பொதுச்செயலாளர் சக்திவேல் கனகரத்தினம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் நாகராஜ் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

    பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி தமிழ்நாடு அரசு பணியா–ளர்–கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளம், பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால நிதிப்பயன்கள் வழங்க வேண்டும். புதிய கடன்களை வழங்க வேண்டும். மாற்றுப்பணி, ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு தள்ளுபடி திட்டங்களால் சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொகையை வழங்க வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி தர வேண்டும். வீட்டுவசதி சங்கங்கள் மூலமாக பொது இ-சேவை மையம் அமைக்க அனுமதிக்க வேண்டும். அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீட்டுவசதி சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் திருப்பூர் - அவிநாசி ரோட்டில் நடந்தது.
    • பல்வேறு காரணங்களால் பணியாளர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள், கருத்து மோதல்கள் உருவாகிவிடுகின்றன.

    திருப்பூர் :

    தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் திருப்பூர் - அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்.கே., ரெசிடென்ஸியில் நடந்தது.இதில், என்.ஐ.பி.எம்., திருப்பூர் கிளை தலைவர் மோகன் பேசியதாவது:-

    ஆடை உற்பத்தி நிறுவனங்களில், அமைதியான பணிச்சூழல் நிலவுவது மிகவும் அவசியம். பல்வேறு காரணங்களால் பணியாளர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள், கருத்து மோதல்கள் உருவாகிவிடுகின்றன.இதனால் வீண் குழப்பங்கள், பிரச்சினைகள் உருவாகின்றன. ஆடை உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. உரிமையாளர்களுக்கும் கடை நிலை தொழிலாளர்களுக்கும் இடையே பொது மேலாளர், உதவி மேலாளர், மனிதவளம், உற்பத்தி மேலாளர், உற்பத்தி மேற்பார்வையாளர், நிறுவன உரிமையாளர் என பல்வேறுவகை இரண்டாம் கட்ட பணியாளர் உள்ளனர். நிறுவனங்களை திறம்பட நடத்திச்செல்வதில் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது.மனிதர் ஒவ்வொருவரும் வெவ்வேறு குணம் கொண்டவராக உள்ளனர். குணத்தில் அடிப்படையில், மனிதர்களை 10 வண்ணங்களால் வகைப்படுத்தமுடியும்.ஒரு நிறுவனம், தங்கள் பணியாளர்களின் குணம், திறன் சார்ந்த பலம், பலவீனங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.

    அதனடிப்படையில் எந்த இடத்தில் யாரை அமர்த்தவேண்டும் என ஆராய்ந்து பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும்.தவறான இடத்தில் பணி அமர்த்தினால் எத்தகைய திறன் மிக்கவர்களானாலும், அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், நிறுவன பணிச் சூழலும், உற்பத்தியும் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்வுகளை எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே வந்தனர்.
    • தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு இன்று நடந்தது. தேர்வுக்காக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இதற்கென சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களுக்குட்பட்ட 291 தேர்வு மையங்களில் 394 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் 96,207 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வுகளை எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே வந்தனர். முதலில் தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்பட்டன. அதற்கு முன் வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    சேலம் சாரதா மகளிர் கல்லூரியில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எழுதுபவர் உதவியுடன் தேர்வு எழுதுவதை  மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.

    சேலம் சாரதா மகளிர் கல்லூரியில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எழுதுபவர் உதவியுடன் தேர்வு எழுதுவதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.

    தமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வினை கண்காணிப்பதற்காக 394 தேர்வு கூட கண்காணிப்பாளர்கள், 24 பறக்கும் படைகளும், 96 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டது. மேலும் இதனை கண்காணித்திடவும், தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    • இந்த தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை 56,223 தேர்வர்கள் எழுத உள்ளனர். அறை ஒன்றுக்கு 20 தேர்வர்கள் வீதம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக நாமக்கல் வட்டத்தில் 43 தேர்வு மையங்களில் 13,722 தேர்வர்களும், ராசிபுரம் வட்டத்தில் 47 தேர்வு மையங்களில் 13,978 தேர்வர்களும், மோகனூர் வட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 2,239 தேர்வர்களும், சேந்தமங்கலம் வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4,318 தேர்வர்களும், திருச்செங்கோடு வட்டத்தில் 42 தேர்வு மையங்களில் 12,048 தேர்வர்களும், பரமத்திவேலூர் வட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 6,612 தேர்வர்களும், குமாரபாளையம் வட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3,306 தேர்வர்களும் என மொத்தம் 132 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 191 தேர்வு மையங்களில் 56,223 தேர்வர்களும் போட்டித்தேர்வினை எழுதுகின்றனர்.

    இந்த தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கு தவறாமல் வந்து விடவேண்டும். தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வின்போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த குறும்பட விளக்க காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    ×