என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் பேரூராட்சி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
- பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .
- பதவி உயர்வு வழங்கவேண்டும்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மண்டலத்தில் , பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் வகையில் பொது சுகாதார துறையில் மேற்கொள்வது போல், மண்டல பேரூராட்சி உதவி இயக்குனரின் மேற்பார்வையில் பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .
நாகர்கோவில் மண்டலத்தில் உள்ள பேரூராட்சிகளில் 1996 - க்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட அடிப்படை பணியாளர்களுக்கு , பதவி உயர்வு வழங்கவேண்டும் . அரசு பணியாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை பெறுவதில் , மாவட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடினமான சூழ்நிலையை கண்டித்தும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது . போராட்டத்திற்கு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் முத்து , மாநில பொருளாளர் சேகர் , மாநில அமைப்புச் செயலாளர் சதீஷ், துணைப்பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட செயலாளர் தனசேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுபாஷ்சந்திரபோஸ் , இசக்கிமுத்து , ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகி நரேந்திரகுமார் , உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்