search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Victory"

    பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். #BJP #Congress #ElectionResult2018 #SoniaGandhi
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங் கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.



    இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தல் வெற்றி குறித்து சோனியாகாந்தி மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், ‘பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. இதற்காக உழைத்த கட்சியினருக்கும் பாராட்டுக்கள்’ என்று தெரிவித்தார். #BJP #Congress #AssemblyElection2018 #SoniaGandhi 
    பார்முலா1 கார்பந்தயத்தில் ரஷிய கிராண்ட்பிரியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன், சக வீரரின் உதவியுடன் முதலிடத்தை பிடித்தார். #LewisHamilton #ValtteriBottas #FormulaOne
    சோச்சி:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் இயக்கினர்.

    இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 70-வது வெற்றியாக இது அமைந்தது.



    தகுதி சுற்றில் வெற்றி பெற்று முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2.545 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் போட்டாஸ், ஹாமில்டனை விட முந்திதான் சென்று கொண்டிருந்தார். இருவரும் ஒரே அணி என்பதாலும், ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கியுள்ளதாலும் அவருக்கு வழிவிடும்படி அணி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் அதற்கு கட்டுப்பட்டு ஒதுங்கினார். இல்லாவிட்டால் போட்டாஸ் தான் முதலிடத்தை பிடித்திருப்பார். அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.

    முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (பெராரி அணி) 4-வதாக வந்து 12 புள்ளிகளையும் மற்றும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 5-வதாக வந்து 10 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணி வீரர்களான ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்), செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) முறையே 9-வது, 10-வது இடங்களை பிடித்தனர். இந்த போட்டியை கடைசி கட்டத்தில் நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    16 சுற்று முடிவில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரெய்க்கோனன் 186 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த போட்டி வருகிற 7-ந்தேதி ஜப்பானில் நடக்கிறது. #LewisHamilton #ValtteriBottas #FormulaOne
    அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. #Hockey #IndianArmy
    சென்னை:

    92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்-மத்திய செயலகம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி. அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ரெயில்வே அணியை சாய்த்து 2-வது வெற்றியை தனதாக்கியது.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய கடற்படை-இந்தியன் ஆயில் (மாலை 4.15 மணி), பஞ்சாப் சிந்து வங்கி-பெங்களூரு ஆக்கி சங்கம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. 
    பாகிஸ்தான் தேர்தலில் வரும் புதன்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் உறுதியுடன் உள்ளார். #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தேர்தலில் வரும் புதன்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் உறுதியுடன் உள்ளார். #ImranKhan

    342 இடங்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் புதன்கிழமை (25-ந் தேதி) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

    இந்த தேர்தலில் பல கட்சிகள் களத்தில் குதித்து இருந்தாலும் கூட, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு இம்ரான்கான் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள், அங்கு ஆட்சியைப் பிடித்து விட முடியும் என்ற அவரது உறுதியை காட்டுகிறது.

    இதுபற்றி அவர் கூறும்போது, “பாகிஸ்தானை மீண்டும் உயர்த்திக்காட்டுவதுதான் எங்கள் இலக்கு. அதை நோக்கியே பிரசாரம் செய்கிறோம். எங்கள் முக்கிய கொள்கை, ஊழலை ஒழிப்பதாகும்” என்று குறிப்பிட்டார்.

    இம்ரான்கான் தொடர்ந்து பேசும்போது, “இதுவரை பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகள் திடீரென தேர்தல்கள் நேர்மையாக நடைபெறாது என கவலை வெளியிட்டு வருகின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகள் எங்கள் ஆதரவு பெருகி வருவதை காட்டுவதே இதற்கு காரணம். எனவே இப்போதே அவர்கள் கதை கட்டத் தொடங்கி விட்டனர்” என்று கூறினார்.

    “நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கு விசாரணை, மக்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது, இந்த ஊழல்களால்தான் நாட்டில் பணம் இல்லாமல் போய் விட்டது. மனித வள மேம்பாட்டுக்கு பணம் இல்லாத நிலை வந்து விட்டது” என்றும் இம்ரான்கான் சாடினார்.

    ஆனால் நவாஸ் ஷெரீப் தண்டிக்கப்படுவதற்கு உண்மையான காரணம், அவர் ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்பு கொள்கையிலும், வெளியுறவு கொள்கையிலும் ராணுவத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததுதான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இப்போதும் தேர்தலில் நேரடியாக ராணுவத்தின் தலையீடு இருக்காது என்று கூறப்பட்டாலும், அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி விட்டதாக புகார் எழுந்து வருகிறது.

    நவாஸ் ஷெரீப் கட்சி வேட்பாளர்கள் பலரும், தாங்கள் கட்சி தாவுமாறு ராணுவ உளவுப்பிரிவினரால் மிரட்டப்படுவதாகவும், நவாஸ் ஷெரீப்புக்கு அனுதாப அலை இருப்பது போல செய்திகளை வெளியிடக்கூடாது என ஊடகத்தினர் அறிவுறுத்தப் படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    தேர்தலை சீர்குலைக்க சதி நடப்பதாக நவாஸ் ஷெரீப் கட்சியினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் இம்ரான்கான் கட்சியினரோ ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்குத்தான் நவாஸ் ஷெரீப் தரப்பினர் குற்றம்சாட்டுவதாக கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போதைய நிலவரப்படி நவாஸ் ஷெரீப் கட்சிக்கு சாதகமாக உள்ளது. அவரது கட்சிக்கு 32 சதவீதத்தினரின் ஆதரவும், இம்ரான்கான் கட்சிக்கு 29 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறுகின்றன. இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் 3 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  #ImranKhan #PakistanGeneralElection
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogerFederer #MarinCilic
    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  #RogerFederer #MarinCilic #tamilnews
    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. #AgniV #AbdulKalamisland
    புவனேஸ்வர்:

    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

    இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி–5' ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று காலை 9.48 மணியளவில் 'அக்னி–5' ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் 'அக்னி–5' பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. #AgniV #AbdulKalamisland
    ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்றியதை தொடர்ந்து தனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.



    இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மா சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். சிறப்பாக விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்று 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வீரர்கள் அனைவரும் கொண்டாடினர்.



    வெற்றி குறித்து டுவிட் செய்த ஹர்பஜன் சிங், 'தோட்டாவென கிளம்பிய பந்துகள். கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், 'கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம். வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePodu  கோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம்'

    என தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK

    சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்தது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.#Pannerselvam #Cavery
    மதுரை:

    சென்னைக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு செயல் திட்டத்தை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்வோம். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்.

    தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுக்காத வகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நடக்கின்ற தற்போதைய தமிழக அரசு கடைசி வரை போராடக்கூடிய வகையில் பதில் வரைவுத்திட்டங்களை சுப்ரீம் கோர்ட்டில் வழங்கி போராடி வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை காப்பாற்றும் கடமையிலும் பொறுப்பிலும் தவறாது செயல்படுவோம்.

    ஒரு மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை அந்த மாநில அரசுக்கு உண்டு. காவிரி நதி நீர்பங்கீடு வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. அதாவது தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் இந்த வழக்கில் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

    ஆகவே இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து கவலை இல்லை. எங்களது வெற்றி முயற்சிக்கு அவர்கள் ஆதரவு தந்தால், எதிர்க்கட்சி என்ற பணியை அவர்கள் செய்ய முடியாமல் போய் விடும் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள்.

    திவாகரன், தினகரன் பிரச்சினை என்பது அவர்கள் குடும்ப பிரச்சினை. அந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக பதில் கூற ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #Pannerselvam #Cavery

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித்திருப்பது நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி என வைகோ, சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடப் போவதாகவும், மாற்று இடம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

    ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். மக்களைத் திரட்டி கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன். நெடுவாசல் வெற்றிக்கு மக்கள் போராட்டமே காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேறு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என ஜெம் நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதாலும், தமிழக அரசின் காலதாமதத்தால் இழப்பு ஏற்பட்டதாலும் ஜெம் நிறுவனம் இத்தகைய முடிவு எடுத்திருப்பது பலவிதமான போராட்டங்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் கிடைத்த முதல் வெற்றி” என்று தெரிவித்துள்ளார். 
    ×