search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauvery draft scheme"

    சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்தது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.#Pannerselvam #Cavery
    மதுரை:

    சென்னைக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு செயல் திட்டத்தை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்வோம். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்.

    தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுக்காத வகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நடக்கின்ற தற்போதைய தமிழக அரசு கடைசி வரை போராடக்கூடிய வகையில் பதில் வரைவுத்திட்டங்களை சுப்ரீம் கோர்ட்டில் வழங்கி போராடி வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை காப்பாற்றும் கடமையிலும் பொறுப்பிலும் தவறாது செயல்படுவோம்.

    ஒரு மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை அந்த மாநில அரசுக்கு உண்டு. காவிரி நதி நீர்பங்கீடு வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. அதாவது தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் இந்த வழக்கில் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

    ஆகவே இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து கவலை இல்லை. எங்களது வெற்றி முயற்சிக்கு அவர்கள் ஆதரவு தந்தால், எதிர்க்கட்சி என்ற பணியை அவர்கள் செய்ய முடியாமல் போய் விடும் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள்.

    திவாகரன், தினகரன் பிரச்சினை என்பது அவர்கள் குடும்ப பிரச்சினை. அந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக பதில் கூற ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #Pannerselvam #Cavery

    காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவை வரைவு செயல் திட்டத்தில் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த குழுவிற்கு தண்ணீர் திறக்க முழு அதிகாரம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #Cauveryissue #cauvermanagementboard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு அரசிதழில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக அந்த அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்துள்ளது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த குழுவில் இடம்பெறுவார். காவிரி தொடர்பான அமைப்பின் தலைவர், 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை இந்த  அமைப்பு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறைந்த அவகாசமே இருப்பதால் இன்றே வரைவு செயல் திட்ட நகல்கள் மாநில அரசுகளிடம் வழங்கப்படும். அதன்பின்னர் மாநில அரசுகள் அதில் உள்ள அம்சங்களால் தங்கள் மாநிலத்திற்கான சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.


    தமிழக அரசு எடுத்த சட்ட நடவடிக்கையால், வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதாகவும், வரைவு செயல் திட்டத்தின் குறை, நிறைகளை ஆராய்ந்து, நாளை மறுநாள் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

    காவிரி விஷயத்தில் நடுநிலையாக செயல்பட்டு நதி நீரை திறந்துவிடுவதற்கு இந்த குழுவிற்கு முழு அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தண்ணீரை திறந்துவிடும் அதிகாரம், மத்திய அரசு பரிந்துரைக்கும் குழுவுக்கு இல்லை என்றால் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

    எனவே, நாளை மறுநாள் நடைபெறும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மத்திய அரசு கேட்டபடி, ஸ்கீம் என்பது வாரியமா? அல்லது குழுவா? என்பதை உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. #Cauveryissue #cauvermanagementboard #CauveryDraftScheme
    ×