search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Victory"

    • 19 வயதுடையவருக்கான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம்.
    • 17 வயது பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் இன்பன் கார்த்தி, பாபநாசத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடையவருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார்.

    இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் இப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சோலை, முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
    • தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் 240 டிஎம்சி காவிரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

    காவிரி நீர் வீணாவதைத் தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மதுரவாயல் பகுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டது வேதனை அறிக்கிறது.

    மாணவர்களின் தற்கொலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களின் அழுத்தத்தால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். மத்திய அரசு உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    அதேசமயம் தமிழகத்தில்தான் நீட் தேர்வால் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.

    அப்போது, பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் மற்றும் விமல், காமராஜ், லண்டன் அன்பழகன் உட்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான சிலம்ப போட்டிகள் தென்காசியில் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 9 மாணவ -மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

    அதில் முதலிடத்தில் 6-ம் வகுப்பு மாணவி பாக்கியவதி, 7-ம் வகுப்பு மாணவன் கிஷோர்குமார், 8-ம் வகுப்பு மாணவன் ராகுல் ராகவன், 2-ம் இடத்தில் 6-ம் வகுப்பு மாணவன் சங்கர் சர்மா, 7-ம் வகுப்பு மாணவன் யோகேஷ், மாணவி பிரவீணா, 3-ம் இடத்தில் 9-ம் வகுப்பு மாணவன் நரேஷ் ஆகிய மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்றோருக்கு சிலம்பம் கிரான்ட் மாஸ்டர் அருணாசலம் பரிசுகள் வழங்கினார். மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் அப்புவிளையில் கபடி போட்டி நடக்கிறது.
    • இதில் குஜராத் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி. எஸ்.ஆர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 80 அணிகள் பங்கேற்க உள்ளனர் நேற்று இரவு ஆண்கள் பிரிவில் நடந்த விளையாட்டு போட்டியில் கூடங்குளம் அணியும், குஜராத் அணியும் விளையாடியது.

    இதில் குஜராத் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. கூடங்குளம் அணி 29 புள்ளிகள் பெற்றது.பெண்கள் அணியில் குஜராத் அணியும், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும் விளையாடியது.

    இதில் குஜராத் அணி 27 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது. அமெரிக்க கல்லூரி அணி 26 புள்ளிகள் பெற்றது. நேற்று மாலையில் வீரர்கள்- வீராங்கனைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

    மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று விளையாட்டு மைதானத்தை அடைந்தது.

    குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நவ்வலடி சரவணகுமார், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு போட்டிகளை அப்துல்வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், நெல்லை மேயர் சரவணன், ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகள் நாளை 14-ந் தேதி ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது.தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.

    • சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.
    • சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

    பேராவூரணி :

    பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் சோலை ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக ஆசிரியர் சோழப்பாண்டியன் அனை வரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவரும், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர் ஒலிம்பியான் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது, நான் இந்த பேராவூரணி அரசு பள்ளியில் கல்வி பயின்று இதே மைதானத்தில் பயிற்சி பெற்றேன். உடற்கல்வி ஆசிரியர்கள் கிட்டப்பா, அப்பாத்துரை ஆகியோர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நீங்களும் சர்வதேச அளவில் வெற்றி பெற படிப்பில் கவனம் செலுத்துவதுடன், உடற்கல்வியில் சிறப்பு பெற பயிற்சியும் விடா முயற்சியும் அவசியம் என்றார்.

    விழாவில்முன்னாள் உடற்கல்வி ஆசிரிய ர்கள் கிட்டப்பா அப்பா த்துரை ஆகியோர் கவுரப்படு த்தப்பட்டனர். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் 1500 மீட்டர், 500 மீட்டர், 300 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பரிசு பொருட்களை சமூக ஆர்வலர் சுப.நற்கிள்ளி நன்கொடையாக வழங்கினார்.

    • புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை
    • ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தமிழக முதல்- அமைச்சர் ஆதரித்த மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளருக்கு புதுவையில் கூடுதலாக ஒரு வாக்கு கிடைத்திருப்பது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • இறுதி போட்டியில் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதியதில் சீர்காழி அணி வெற்றி பெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லை வாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவுபகலாக மின்னொளியில் நடை பெற்று வந்தது.

    போட்டி க்கு பள்ளி தாளாளர் ராதாகிரு ஷ்ண ன்தலைமை வகித்தார். திருமுல்லை வாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார்.போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில்தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர். சி.பி.எஸ்.இ பள்ளி செய்தி தொடர்பாளர் பிரேம் நன்றி கூறினார்.

    • 16 பதவியிடங்களுக்கு தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.
    • வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாமக்கல்:

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 16 பதவியிடங்களுக்கு தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    20-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 16 பதவிகளுக்கு 50 மனுக்கள் பெறப்பட்டதில் 11 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதில் 5 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

    எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இளநகர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக சுப்பிரமணியம், மாவுரெட்டிப்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக பூங்கொடி கந்தசாமி, கபிலர்மலை ஒன்றியம் சிறுநெல்லிக்கோவில் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக ஜெய்பிரவின், பரமத்தி ஒன்றியம் செருக்கலை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக சுதா சக்திவேல், திருச்செங்கோடு ஒன்றியம் சிறுமொளசி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக கவுரி பிரபாகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

    மீதமுள்ள 11 காலிப்பதவியிடங்களில் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று நடந்தது.

    மாவட்டத்தில் உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினராக தி.மு.க. சார்பாக போட்டியிட்ட உஷாராணி ஜனார்த்தனன் 389 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகம் 3108 ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றார்.

    நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தங்கமணி செல்வகுமார் 1407 ஓட்டுகள் வாங்கி பெற்றார். எருமப்பட்டி வடவத்தூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சகுந்தலா ராமர் 128 ஓட்டுகளுடனும், நாமகிரிபேட்டை மத்துருட்டு ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அங்கமுத்து 182 ஓட்டுகளுடனும், பள்ளிபாளையம் ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெகதீஷ் 190 ஓட்டுகளுடனும், தட்டாங்குட்டை ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நாகராஜ் 648 ஓட்டுகளுடனும் வெற்றி பெற்றனர்.

    இதேபோல் புதுச்சத்திரம் ஒன்றியம் கதிராநல்லூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சண்முகம் 174 ஓட்டுகளுடனும், ராசிபுரம் ஒன்றியம் மேளப்பாளையம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக தாமரைச்செல்வி 138 ஓட்டுகளுடனும், சேந்தமங்கலம் ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக சர்மிளா தமிழ்செல்வனும் வெற்றிபெற்றுள்ளார்கள். வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்ட தெரிவிக்கப்பட்டது.
    • பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வார்டு உறுப்பினர் ஐஸ்வர்யா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம் புலம் பி.வி தேவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக நாதன் தலைமை வகித்தார் தேர்தல் அதிகாரியாக ஆசிரியர் சுப்ரமணியன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தினார் இதில் தலைவராக சத்தியா துணை தலைவராக தமிழ்ச்செல்வி பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வார்டு உறுப்பினர்ஐஸ்வர்யா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேர்வு செய்யபட்ட சத்யா பள்ளிக்கு தனது சொந்த செலவில் ரூ.75 ஆயிரம் மதிப்பில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா மற்றும் இன்வெர்ட்டர் வைக்கும் பணியை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்ட தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைகுழு தேர்தலுக்கு வேதார ண்யம் டிஎஸ்பி முருகவேல்இ ன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 50 ஆண்டுக்கு பின் பல கோடி சொத்தை ஜமாபந்தி மூலம் முதியவர் மீட்டார்.
    • பண்ருட்டி திருவதிகை உள்ள இவருக்குசொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு சொத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஐகோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு 3 சகோதரர்கள். இவருக்கு பாத்திமான இவரது குடும்ப சொத்தை இவருக்கு தெரியாமல் இவரது சகோதரர் மூலமாக வேறு ஒருவர் வாங்கியுள்ளார். இவருக்கு அப்போது வயது17. இவருக்கு சொந்தமான இந்த சொத்தை மீட்க 17 வயதில் போராட்டத்தை தொடங்கினார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.

    இவரது தொடர் முயற்சியால் பண்ருட்டி திருவதிகை உள்ள இவருக்குசொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு சொத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஐகோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியில் தாசில்தார் சிவா கார்த்திகேயனிடம் முறையிட்டார். தாசில்தார் சிவா.கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இவருக்கு பட்டா வழங்கலாம்என்று ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதினார். ஐகோர்ட்டு நீதிபதிகள் இவருக்கு பட்டாவழங்கஉத்தரவுபிறப்பித்தனர். இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா நகல் தாசில்தாரிடம் இருந்து பெற்ற முதியவர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இது பற்றி அவர் கூறுகையில் 50 ஆண்டுகால போராட்டத்தில்எனது தம்பி ,எனது மகன் ஆகியோரை இழந்தேன் என்றார்.

    பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். #BJP #Congress #ElectionResult2018 #SoniaGandhi
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங் கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.



    இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தல் வெற்றி குறித்து சோனியாகாந்தி மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், ‘பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. இதற்காக உழைத்த கட்சியினருக்கும் பாராட்டுக்கள்’ என்று தெரிவித்தார். #BJP #Congress #AssemblyElection2018 #SoniaGandhi 
    பார்முலா1 கார்பந்தயத்தில் ரஷிய கிராண்ட்பிரியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன், சக வீரரின் உதவியுடன் முதலிடத்தை பிடித்தார். #LewisHamilton #ValtteriBottas #FormulaOne
    சோச்சி:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் இயக்கினர்.

    இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 70-வது வெற்றியாக இது அமைந்தது.



    தகுதி சுற்றில் வெற்றி பெற்று முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2.545 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் போட்டாஸ், ஹாமில்டனை விட முந்திதான் சென்று கொண்டிருந்தார். இருவரும் ஒரே அணி என்பதாலும், ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கியுள்ளதாலும் அவருக்கு வழிவிடும்படி அணி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் அதற்கு கட்டுப்பட்டு ஒதுங்கினார். இல்லாவிட்டால் போட்டாஸ் தான் முதலிடத்தை பிடித்திருப்பார். அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.

    முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (பெராரி அணி) 4-வதாக வந்து 12 புள்ளிகளையும் மற்றும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 5-வதாக வந்து 10 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணி வீரர்களான ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்), செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) முறையே 9-வது, 10-வது இடங்களை பிடித்தனர். இந்த போட்டியை கடைசி கட்டத்தில் நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    16 சுற்று முடிவில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரெய்க்கோனன் 186 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த போட்டி வருகிற 7-ந்தேதி ஜப்பானில் நடக்கிறது. #LewisHamilton #ValtteriBottas #FormulaOne
    ×