search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராட்டு"

    • இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.
    • படக்குழுவினருடன் ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    கொடைக்கானல் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ''மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற பெயரில் மலையாள திரைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

    இப்படத்தில் " நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றியதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப் படுத்தி உள்ளனர்.

    இப்படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கினார். கடந்த பிப்ரவரி 22-ந் தேதி இப்படம் வெளியானது. அனைத்து மாநில தியேட்டர்களிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ.200 கோடி வசூலை குவித்து உள்ளது.மேலும் இப்படம் அனைத்து தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.




    தமிழக ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படக்குழுவினர், 'குணா' படத்தின் கதாநாயகன் கமலை சந்தித்து சமீபத்தில் வாழ்த்துகள் பெற்றனர்.

    இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.

    மேலும் இப்படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.

    இது குறித்து 'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழு தங்களது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். அதில் ''சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.
    • வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

    பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் மேடைகளில் பேசுபவர்களுக்கு பலத்த கை தட்டல்கள் பாராட்டாக கிடைக்கும். அப்படி கை தட்டுவது கூட ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்காக மருத்துவ உலகில் `கிளாப்பிங் தெரபி' என்னும் சிகிச்சை முறையே இருக்கிறது. தினமும் கை தட்டுவதற்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு அந்த சிகிச்சை பரிந்துரைக்கிறது. சரி, கை தட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

     * இரண்டு உள்ளங்கைகளிலும், 30-க்கும் மேற்பட்ட அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவைகள் தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.

    * மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.

    * மகிழ்ச்சிக்கான சமிக்ஜைகள் பரவி, மனச்சோர்வை தடுக்க உதவும்.

    * குழுவாக சேர்ந்து கை தட்டும் வழக்கத்தை பின்பற்றுபவர்களிடத்தில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * ரத்த அழுத்த அளவை ஒழுங்கு படுத்த உதவும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கும் வித்திடும்.

    * வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

    * குழந்தைகள் கை தட்டுதல் பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும்போது அறிவாற்றல் திறன் மேம்படும். ஞாபக சக்தியும் கூடும். கவனச்சிதறலும் கட்டுப்படும்.

    * உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை, தலைவலி, ஜலதோஷம், கண் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றின் வீரியத்தைகுறைப்பதற்கும் உதவும்.

    * உள்ளங்கைகளில் சிறிதளவு கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்தும் கை தட்டலாம். காலைவேளையில் இந்த வழக்கத்தை தொடர்வது நல்ல பலனை கொடுக்கும்.

    • ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது
    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் மகளிர் தின விழாவையொட்டி சிறந்த மகளிருக்கான விருது வழங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது :-

    கடந்த 2013-ஆம் ஆண்டு கபடி போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் பெற்றேன். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதால் கபடி விளையாட்டை தொடராமல் விட்டு விட்டேன். தொலைக்காட்சியில் கூட விளையாட்டை

    பார்க்க மாட்டேன்., எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். 2019- ல் வெளிவந்த 'பிகில்' படத்தை ஒரு தியேட்டரில் பார்த்த போது ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.

    அந்த பாடல் வரிகள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. மீண்டும் கபடி விளையாட்டுக்கு சென்று சாதிக்க வேண்டும்., எனது திறமைகளை கபடி உலகில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.

    அதனை எனது கணவர், மாமியாரிடம் சொன்னேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் பதவி கிடைத்தது. அதன் மூலம் மகளிர் கபடி குழுவினருக்கு பயிற்சியளித்து வருகிறேன்.

    எனது பயிற்சி மூலம் மகளிர் கபடி குழுவுக்கு பல பரிசுகள் கிடைத்தன. இதற்கு காரணம் 'சிங்கப்பெண்ணே' பாடல் தான். அந்த பாடல் எனக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்தது. இந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிக்க நன்றி. இந்த தகவல் ஏ.ஆர் ரகுமானை சென்றடைய வேண்டும் என்று கூறினார்.





     


    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை பார்த்தஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் 'உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா.. நீங்கள் உயர்வடைந்து கொண்டே இருங்கள் என அவர் பதிலளித்து உள்ளார்.

    • நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள்.
    • மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுக்குரியது. குறிப்பாக மத்திய அரசு மகளிர் தினத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்திருப்பதால் நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள். மேலும் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300 - ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன் மூலம் 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தினால் பெரும் பயனடைவார்கள். பிரதமர் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் நலன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
    • குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும்.

    இது தேர்வுக்கான காலகட்டம். மற்ற சமயங்களை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருசில பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு வாழ்நாள் மூலம் கற்றல் மீதான நாட்டத்தை மெருகூட்ட செய்யலாம். அதற்கான வழிமுறைகள்...

    தேர்வு சமயங்களை தவிர்த்து தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. `இது படிப்புக்கான நேரம்' என்பது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து படிப்பதன் மூலம் கற்றலை வலுப்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

     அமைதியான இடம்

    கவனச்சிதறல்கள் மாணவர்களை தடம் புரளச் செய்யும். எனவே இடையூறு ஏதும் இல்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய அமைதியான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அமைதியான சூழல் கவனத்தை ஒன்றிணைக்கும் திறனை வலுப்படுத்தும். புரிதலை மேம்படுத்தும்.

    கற்றல் நுட்பங்கள்

    எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. ஒரு பாடத்தை படிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை குறிப்பெடுக்க பழக வேண்டும். பின்பு அந்த குறிப்புகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கி எழுத வேண்டும்.

    அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடமோ, சக மாணவர்களிடமோ கேள்வி எழுப்பி தெளிவு பெற வேண்டும். இத்தகைய செயல்முறை கற்றல் நுட்பங்களை பின்பற்றுவது பாடம் மீது ஆழமான புரிதலை ஏற்படுத்தும். சிந்தனை திறனை வளர்க்கும். திறம்பட தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.

    சிறிது நேர ஓய்வு

    தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கி, தொடர்ந்து படிக்கும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். படிப்புக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மீண்டும் படிப்பை தொடர்வது மன ரீதியாக புத்துணர்ச்சி பெற உதவும். படிப்பின் மீது முழு கவனத்தையும் திருப்புவதற்கு வித்திடும்.

    ஊட்டச்சத்து உணவு

    நாள் முழுவதும் இடை இடையே போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும். படிப்புக்கு இடையே சத்தான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அவை மூளைக்கு ஊட்டமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும். அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும்.

    போதுமான தூக்கம்

    நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. மாணவர்கள் தினமும் போதுமான நேரம் தூங்கி எழ வேண்டும். நன்கு ஓய்வு எடுக்கும் மனம் கற்றல் விஷயங்களை மறக்காமல் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும்.

    பாராட்டு

    நேர்மறை எண்ணங்கள் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் உருவாக்கும். எனவே பிள்ளைகளின் முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுங்கள். அவர்கள் படிப்பில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை சாதனையாக கருதி பாராட்டுங்கள்.

    யாரும் நிர்பந்திக்காமலேயே சுயமாக படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தெடுக்க அது உதவும். அவர்களாகவே குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்கு ஒதுக்கி விடுவார்கள். நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

     பாடங்களை பிரித்தல்

    முழு ஆண்டுத்தேர்வுக்கு பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதிகளாக படித்து முடிப்பதை பெரிய பணியாக உணரலாம். அதில் கடினமான பகுதிகளை படிப்பது சிரமமானதாக, சவாலானதாக சில மாணவர்களுக்கு அமையலாம். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் எளிமையான பகுதிகளை முதலில் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    கடினமான பகுதிகளை அதிகாலை வேளையில் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி தரம் பிரிப்பதன் மூலம் விருப்பமான பாடங்களை விரைவாக படித்து முடித்துவிட முடியும். அதனால் படிப்பது பெரும் சுமையாக தோன்றாது. இந்த அணுகுமுறை மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். தினமும் படிக்க தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே படித்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை வாசிப்பது நினைவில் ஆழமாக பதிய உதவும். தேர்வை எளிமையாக எழுதுவதற்கு வழிவகுக்கும்.

    • அன்னை பாத்திமா கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது.

    மதுரை

    நாடு முழுவதும் கிராமப்புறங்களை மேம்படுத்த, 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், பின்தங்கிய கிராமங்களில் கல்வி நிறுவனங்கள் மூலம் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இதில் நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய, மக்கள் தொகை, 30 ஆயிரத்துக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட கிராமங்களை தேர்வு செய்து அக்கிராமத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

    இதன்படி திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரையூர் வட்டத்தைச் சேர்ந்த ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு மத்திய அரசு நிதி உதவியுடன் நடந்தது. இதில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ் துறை தலைவர் முனியாண்டி கலந்துகொண்டு பயிற்சி பெற்றார். அவரை கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், சக பேராசிரியர்கள் ராமுத்தாய், ஜோதி, ஆறுமுக ஜோதி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • ராமநாதபுரத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது.
    • சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கமும், சிறந்த கூட்டுறவு நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கியும் தேர்வு செய்யப்பட்டது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த விற்பனை சங்கமாக கமுதி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் வேல்முருகன், மேளாளர் கண்ணன், பொது மேலாளர் போஸ் உள்ளிட்டோரிடம் கூட்டுறவு சங்கங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், இணைப்பதிவாளர் மனோகரன் ஆகியோர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் சிறந்த நகர வங்கியாக அபிராமம் கூட்டுறவு நகர வங்கி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேடையத்தை அச்சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகன் மற்றும் செயலாளர் முகமது யூசுப் பெற்றுக்கொண்டனர்.

    • அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிட மிருந்து 434 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகத்தின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டிலான தேய்ப்பு பெட்டியும், மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.15 ஆயிரத்து 30 மதிப்பீட்டில் பல்வேறு வகையான உபகரணங் களையும் கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் அரசு குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கான வானவில் கொண்டாட்ட போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட காரைக்குடி அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சிவகங்கை அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தங்கி படிக்கும் 4 மாண வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஆஷா அஜித் அவர்கள் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார்
    • போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

    புதுச்சேரி:

    காரைக்காலில் சாலை யில் கிடந்த ரூபாய் 2000 பணத்தை பள்ளி சிறுமி உரியவரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா (வயது7) தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரம் 2000 ரூபாய் (4-500 நோட்டு கள்) கிடந்ததை கண்ணெடுத் துள்ளார். அச்சமயம் அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி குமாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.

    பணத்தை தவறவிட்டவர் அங்கு தேடி கொண்டு வந்த போது, அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்து அவரது பணம் தான் என்பதை உறுதி செய்த பின்னர், அந்தப் பணத்தை கொண்டு வந்து கொடுத்த சிறுமியிடம் கொடுத்து பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் செலவுக்கு அதிக மாக பணம் உள்ள சூழ்நிலை யில், பணத்திற்கு ஆசைப் படாமல் அப்பணத்தை உரியவரிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிறுமிக்கு விதைத்த பெற்றோர்க ளையும், சிறுமியையும் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

    • கல்வியுடன் பல்வேறு கலைகளையும் கற்றுத்தர பெற்றோர் கோரிக்கை
    • பிரத்யேக ஆசிரியர்களை நியமித்து பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் கலைதிருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.

    தொடர்ந்து கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஊட்டியில் நடத்தப்பட்டது. இதில் தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் மு. அருணா, ஊட்டி எம்.எல்.ஏ ஆர்.கணேஷ், ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால், ஊட்டி நகர மன்றதலைவர் வானீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    முன்னதாக நீலகிரி கலை திருவிழாவுக்கு வந்திருந்த மாணவ-மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:-

    மாணவ-மாணவியர் மத்தியில் புதைந்துள்ள திறமையை வெளிப்படுத்த, இந்த கலைவிழா சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மாணவ மாணவியர் மத்தியில் புதைந்துள்ள பல்வேறு திறமைகளை அடையாளம் காண முடியும்.

    மேலும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க, பள்ளிகளில் பிரத்யேக ஆசிரியர்களை நியமித்து பயிற்சி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் திறமை மேலும் வளரும்; சாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

    தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் பிள்ளைகளுக்கு திறமைக்குறைவு என்ற மேலோட்டமான பார்வையை இந்த கலைவிழா தவிடுபொடி ஆக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வியுடன் பல்வேறு கலைகளையும் பள்ளி நிர்வாகம் கற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி தொழிலாளர்களும் சங்கத்தின் சார்பிலும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் மற்றும் கட்டுமான அமைப்பு மாநில தலைவருமான வி.என். கண்ணன் மற்றும் அமைப்பாளர் எழில் சம்பத் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.1000 பென்சன் தொகை வழங்கப்பட்டு வந்தது.

    இந்த பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி தொழிலாளர்களும் சங்கத்தின் சார்பிலும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.

    இந்நிலையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பென்சன் தொகையை ரூ.1000த்தில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தொழிலாளர்கள் நலனின் கருத்தில் கொண்டு பென்சன் தொகையை உயர்த்தி வழங்கிய இந்தியா போற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு விருதுநகர் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குருதி பரிமாற்று குழுமம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததான தின நிகழ்ச்சி நடந்தது. இதில் 140 ரத்ததான முகாம் அமைப்பா ளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ரத்த தானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து, தமிழ்நாட்டில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

    சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) ரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம்.எனவே, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) யசோதாமணி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மாவட்ட திட்ட மேலாளர் வேலய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×