search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "compliment"

    • மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர்.
    • இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதை கண்ட இரட்டையர்கள்.திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்,

    விழுப்புரம்:

    ஏ. டி. எம்., இயந்திரத்தில் கூடுதலாக வந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை திண்டிவனம் புறவழிச்சாலை அருகே, தனியார் ஓட்டல் எதிரே உள்ள ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர். யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார்.

    ஆனால் யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார். ஆனால், 500 ரூபாய்க்கு பதில் ரூ. 10 ஆயிரம் வந்துள்ளதுயுவராஜ் மொபைல் போனுக்கு ரூ. 500 எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதாக கருதிய சகோதரர்கள், திண்டிவனம் போலீசில் 9 ஆயிரத்து 500 ரூபாயை ஒப்படைத்தனர். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்.

    • ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 4 அணிகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    • வீரர், வீராங்கனைகளை தமிழக போல்ரிங் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    தேசிய அளவிலான 9-வது போல்ரிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் சர்தூல்கர் மாநிலத்தில் நடைபெற்ற நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இதில் மினி சப் -ஜூனியர், சப்- ஜூனியர், ஜுனியர்,சீனியர், சூப்பர் சீனியர் என 4 பிரிவுகளின் அடிப்படையில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன.

    இந்த போட்டியில் தமிழ்நாட்டி னைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் 9 வீரர், வீராங்கனைகள் என தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆண்கள்பிரிவில் 36 வீரர்களும், பெண்கள் பிரிவில் 36 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் அனைத்து பிரிவிலும் சிறப்பாக பங்கேற்று விளையாடினர். இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 4 அணிகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    பெண்கள் பிரிவில் பங்கேற்ற அணிகளில் 4-ல் 3 பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    இந்த வீரர் , வீராங்கனைகள் தமிழ்நாடு போல்ரிங் கழகத்தின் செயலாளரும், தென்னந்திய போல் ரிங் கழகத்தின் செயலாளருமான செந்தில்நாதன் (காஞ்சீபுரம்), தலைவர் புவேனஸ்வரி (தஞ்சை), தலைமை பயிற்சியாளர் சுந்தரமூர்த்தி (சென்னை) ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு பங்கேற்றனர்.

    மேலும் சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை, தமிழக போல் ரிங் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

    தமிழக அணி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மேலும் மார்ச் மாதம் நடைபெறக்கூடிய சர்வதேச போட்டி தமிழகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி பகுதியிலுள்ள அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.எஸ்.பி. ஷபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மேற்பார்வையில் பயிற்சி சப்.இன்ஸ்பெக்டர் விஜய் பள்ளி வளாகத்திற்கு இன்று நேரில்சென்று பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். பின்னர்ஒழுங்கீனமாகவும்,தாறுமாறாகவும்சிகை அலங்காரம்செய்து வந்தமாணவர்களைஅழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார். போலீசாரின் செயலை பொதுமக்கள் பாராட்டினார்.

    • சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • போட்டி–யில் கலந்து கொண்ட மயிலாடுதுறை வாலிபால் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

    சீர்காழி:

    தமிழ்நாடு ஸ்டேட் வாலிபால் அசோசியேஷன் நடத்திய கிழக்கு மண்டலங்களுக்கான சீனியர் ஸ்டேட் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.

    மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டு முதல்முறையாக போட்டி–யில் கலந்து கொண்ட வாலிபால் விளையாட்டு வீரர்கள் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற அணியினரை மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் பொன்செந்தில், எடின்.ராகுல், ரவீந்திரபாரதி, வாஞ்சிநாதன், சரவணன், வளவன், பழனிவேல், முரளிதரன், பாரி, அணிமேலாளர் சுகுமார் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு விளையாட மயிலாடுதுறை அணி தேர்வாகியுள்ளது.

    • பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் நடைமுறைப்படுத்தபட்டு உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் அளிக்கும் விழாவானது நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அறிவொளி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீ ர்செல்வம், கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், கல்லூரி செயலாளர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் பேசும்போது, இந்த ஆண்டு உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக த்தில் தான் நடை முறை ப்படுத்தபட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 21 கல்லூரிகளை தொடக்கி வைத்த பெருமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தான் சேரும் என்றார்.இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் ஜோதி தேவேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், பிரபாகரன், நகர செயலா ளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், ஊராட்சி தலைவர் புஷ்ப வல்லி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • வாசிப்பு மாரத்தான் போட்டியில் அதிக அளவில் நட்சத்திரங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், மாணவர்கள் வாசிக்கும் வேகம் அதிகரித்ததையும் பாராட்டி ்பேசினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் தேசிங்குராஜபுரம் கிராமத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது. இதில், தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் வே.ரேவதி வரவேற்றார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தலைவர் மதிப்புறு முனைவர் நா.துரைராயப்பன் தலைமை வகித்தார்.

    வட்டார கல்வி அலுவலர்.பா அறிவழகன், வட்டார கல்வி அலுவலர்இரா. பாலசுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ப. வரதராஜன் ஆகியோர் மையத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டு, வட்டார அளவில் வாசிப்பு மாரத்தான் போட்டியில் தேசிங்குராஜபுரம் மையத்தில் அதிக அளவில் நட்சத்திரங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், மாணவர்கள் வாசிக்கும் வேகம் அதிகரித்ததையும் பாராட்டி ்பேசினர். பரிசுப்பொருட்களை தனது பிறந்தநாளை முன்னிட்டு மு.துரைமுருகன் மற்றும் நா.துரைராயப்பன் ஆகியோர் வழங்கினர். கோவி.வேதகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×