search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் - அமைச்சர் வழங்கினார்
    X

    அமைச்சர் மெய்யநாதன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் - அமைச்சர் வழங்கினார்

    • பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் நடைமுறைப்படுத்தபட்டு உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் அளிக்கும் விழாவானது நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அறிவொளி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீ ர்செல்வம், கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், கல்லூரி செயலாளர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் பேசும்போது, இந்த ஆண்டு உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக த்தில் தான் நடை முறை ப்படுத்தபட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 21 கல்லூரிகளை தொடக்கி வைத்த பெருமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தான் சேரும் என்றார்.இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் ஜோதி தேவேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், பிரபாகரன், நகர செயலா ளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், ஊராட்சி தலைவர் புஷ்ப வல்லி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×