என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்துறை"

    • காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
    • பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ராக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் தினேஷ். இவர் புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக தனக்கு சொந்தமான காரில் வந்தார்.

    காரை வேறு ஒரு டிரைவர் ஓட்டினார். தினேஷ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட நிலையில் டிரைவர் அந்த காரை போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் கார் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.

    பொதுமக்கள் சத்தம் போட்டும் அந்த காரில் இருந்த டிரைவர் வாகனத்தை விட்டு இறங்காமல் இருந்ததோடு, வாகனத்தை நகர்த்தாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் கஸ்தூரி அங்கு வந்தார். காரை எடுக்க சொல்லி கஸ்தூரி வற்புறுத்தினார். அதற்கு இது போலீஸ்காரர் கார் என்று டிரைவர் கூறியதாக தெரிகிறது.

    உடனே பெண்போலீஸ் காயத்ரி யார் காராக இருந்தாலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியது தவறு என கூறி 2 பிரிவுகளில் அந்த வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார். அந்த காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் இருந்தபோதிலும் தனது கடமையில், கருத்தாக செயல்பட்டு பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனால் அந்த பெண் போலீஸ் காயத்ரிக்குக்கு பாராட்டுகள் குவிகிறது. விழா முடிந்து வந்த போலீஸ்காரர் தினேஷ் தனது டிரைவரை கண்டித்தார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை, கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
    • பள்ளி துவங்கும்-முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட குழுக்கள் நியமனம்.

    கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை, கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை /புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ / மாணவிகள் தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மாணவ மாணவிகள் கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    அதற்குன்டான கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ / மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2,000 ரூபாய் நோட்டுகளை 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும்.
    • பயணிகள் தவிர வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் ரூ 2,000 நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை

    சென்னை:

    சென்னை, செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

    அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருந்தநிலையில், அரசு பஸ்களில் பயணிகள் தரும் ரூ 2,000 நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பயணிகள் தவிர வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் ரூ 2,000 நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

    • 5 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது. மற்றும் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறியுள்ளது.

    • ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டுள்ளன.
    • ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்றுடன் முடிகிறது. நாளையில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 7-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டதால் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதன் காரணமாக வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது.

    வார இறுதி நாள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    வந்தே பாரத், தேஜாஸ் அதிவிரைவு ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி உள்ளன. அரசு பஸ்களில் முன்பதிவு செய்து காத்து இருக்கின்றனர். தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களில் இடமில்லை. இதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு, பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை (சனிக்கிழமை) 415 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணத்தை தொடரலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டப் பகுதிகள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களும் நிரம்பி விட்டன.

    சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களும் நேற்றிரவு நிரம்பி விட்டன.

    இதனால் ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து சொந் ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று மாலையில் இருந்து பயணத்தை தொடங்குகின்றனர்.

    இதனால் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடங்களை பிடிக்க பயணிகள் முண்டியடித்த னர்.

    3 மணி நேரத்திற்கு முன்னதாக வந்து வரிசையில் நின்றனர். பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் சென்னையிலிருந்து 8.73 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, கடந்த 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, 15.01.2025 முதல் 19.01.2025 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    மேலும், 17.01.2025 அன்று 28,022 பயணிகளும். 18.01.2025 அன்று 29,056 பயணிகளும் மற்றும் 19.01.2025 அன்று 42,917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
    • பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சி.ஐ.டி.யூ. போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சம்மேளன தலைவர் சவுந்தர்ராஜன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும். தமிழ்நாட்டில் 300 பணிமனைகள் உள்ளன. தேவையான கட்டமைப்பு அரசு போக்குவரத்து கழகத்திடம் உள்ளது. எனவே எந்த விதமான பஸ்களாக இருந்தாலும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு போக்குவரத்து கழகமே அதை இயக்க வேண்டும்.

    போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பிற அரசு துறைகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் உடனடியாக அமல் படுத்த வேண்டும். தற்போது இதற்காக குழு அமைக்கப்பட்டு 9 மாத காலம் அவகாசம் என கூறப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை.

    எனவே முதலமைச்சர் உடனடியாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் பதிவு மற்றும் அவர்களுக்கு கேட்பு மனுக்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் குளறுபடி உள்ளது. 75 லட்சம் தொழிலாளர்களின் பதிவு, சர்வரில் அழிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மற்ற துறைகளில் எல்லாம் சர்வர்கள் முறையாக இயங்கும்போது முறைசாரா தொழிலாளர்கள் பதிவில் மட்டும் சர்வர் எப்படி அழிந்தது என்பது தெரிய வில்லை. எனவே உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை.
    • பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி.

    அரசுப் பேருந்துகளில் அதிக மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மேலும், அரசுப் பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் அரசுப்பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு அதிக அளவில் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    ×