search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicles"

    • ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    திருவாரூர்:

    குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்கள் ஏலம் என உதவி ஆணையர் (கலால்) அழகர்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு-ஆயத்தீர்வை விதிகளின்படி பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து அரசுக்கு ஆதாயம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பொது ஏலமானது திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு, திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமல்பிரிவு), தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

    பொது ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள் ஏலம் கோராதபட்சத்தில் பொது ஏலம் விடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவர்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் முன்பணத்தொகையாக ரூ.1000 வருகிற 30-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் நேரில் செலுத்த வேண்டும்.

    வாகனங்களை பொது ஏல அடிப்படையில் ஏலம் எடுத்து கொள்ளலாம்.

    அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் ஏலத்தில் கலந்து கொள்ள செலுத்தப்பட்ட முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    அதிக விலை கோருபவர்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்களுக்கு புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ரூ1 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் சிரமத்தை போக்க நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவுரிதிடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து ரூ1 கோடியே 67, லட்சம் ரூபாய் மதிப்பிலான 23, இலகுரக வாகனத்தின் சாவியினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நகராட்சி ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தனர்.

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
    • இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது.

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. குட்டையாக நிற்கும் மழைநீரில் குப்பை, மண் சேர்ந்து சகதியாக மாறியதால், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேங்கி கிடக்கும் சேறும், சகதியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • குளக்கரை பகுதி ஓரமாக இருப்பதால் அங்கு மக்களை விட காதல் ஜோடிகளே உள்ளனர்.

    கோவை,

    கோவையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கோவையில் உள்ள குளங்கள் எல்லாம் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.

    விடுமுைற நாட்களில் பூங்கா போன்ற பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் தற்போது மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளுக்கும் சென்று வருகின்றனர். அந்தளவுக்கு மாநகரில் உள்ள உக்கடம் குளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய குளங்கள் மின் விளக்குகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு, அழகுபட காட்சியளிப்பதால் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முதன்மையானதாக திகழ்கிறது.

    விடுமுறை தினங்களில் இந்த குளங்களில் பொதுமக்க ளின் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் காணப்படும். குறிப்பாக முத்தண்ணன் குளத்தின் பொலிவை காண பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வார த்தின் இறுதி நாட்களில் குவிந்து வருகிறார்கள்.

    பகல் முழுவதும் வேலை வேலை என்று தனது தொழிலில் கவனம் செலுத்தி விட்டு , மாலையில் வீடு திரும்பும் குடும்பத் தலைவ ர்கள், மாலை நேரத்தில் தனது குடும்ப த்தோடு எங்காவது சென்று பொழுதை கழிக்க விரும்புவது வழக்கம் தான். அப்படி தினமும் முத்தண்ணன் குளக்கரையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தினமும் காலை 5.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயங்களில் நடைபயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகிக் கொண்டு வருகிறது. முத்தண்ணன் குளக்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்கு என ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இங்கு குடும்பத்தோடு வரும் குழந்தைகள் அதில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் தரைகள் பச்சை பசேர் என்று புல்வெளியுடன் காட்சி அளிக்கிறது. மாலைநேரத்தில் இங்கு குவியும் பொதுமக்கள் அங்கு தங்கள் குடும்பத்தினருடன் புல்தரையில் அமர்ந்து பேசி தங்கள் மாலைபொழுதை அழகாக கழித்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் பொதுமக்களுக்கு என்று முறையான பார்க்கிங் வசதி கிடையாது. இதனால் இங்கு வருபர்கள் தங்கள் வாகனங்கள் குளத்தின் முன்பாக நிறுத்தி விட்டு செல்லும் நிலைமையை காணப்படுகிறது.

    அப்படி நிறுத்தப்படும் வாகனங்களால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு உள்ளே செல்பவர்கள் திரும்பி வெளியே வந்து பார்க்கும்போது, இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு என பார்கிங் பெருகி விடுகிறது.

    இதனால் வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் அவர்கள் அவதியடைந்து வருகி ன்றனர். ஒரு சிலர் தனது இருசக்கர வாகனத்தை எப்படியாவது எடுத்திட வேண்டும் என்று கருதி, பின்னால் இருக்கும் வாகனத்தை உருட்டி தாறுமாறாக நடுரோட்டில் விட்டு விடுகின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் தினமும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக உள்ளே செல்போர்களுக்கும் இது இடையூறாக உள்ளது.

    இதுகுறித்து குளக்கரைக்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி இந்த குளக்கரையை மிகவும் அழகுபடுத்தி பொலிவு பெற செய்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. எங்களுக்கு இந்த குளக்கரை மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது. ஆனாலும் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

    எனவே இந்த பகுதியில் பார்க்கிங் வசதி செய்து கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அவ்வாறு ஏற்பாடு செய்து கொடுக்கும்போது, வாகனத்தை நிறுத்தும் போதும் அல்லது வாகனத்தை எடுக்கும் போதும் ஏற்படும் கூச்சல் குழப்பத்தை தவிர்க்க முடியும்.மேலும் இங்கு வரும் காதல் ஜோடிகள் ஆங்காங்கே ஓரமாக உட்கார்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். இது இங்கு குழந்தைகளுடன் வரக்கூடிய பொதுமக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

    பரந்து விரிந்த முத்தண்ணன் குளத்தின் ஒரு பகுதியானது கோவை தடாகம் ரோட்டிலும், மற்றொரு பகுதியானது சொக்கம்புதூர் செல்லும் சாலையிலும் உள்ளது. தடாகம் சாலையில் உள்ள குளக்கரையின் பகுதியில் பொது மக்களின் கூட்டம் நிரம்பி வழியும். பெரியவர்கள் குடும்பம் குடும்பமாக சின்ன குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆங்காங்கே திரியும் காட்சியை காண முடியும். ஆனால் சொக்கம்புதூர் செல்லும் சாலையில் உள்ள குளக்கரை பகுதி ஓரமாக இருப்பதால் அங்கு மக்களை விட காதல் ஜோடிகளே அதிகளவில் குவிகின்றனர்.

    அந்த பகுதி சற்று இருள் நிறைந்த பகுதி என்பதால் காதல் ஜோடிகளுக்கும் அது ஏற்ற இடமாக மாறி விட்டது. இதனால் தினமும் அங்கு காதல் ஜோடிகளை பார்க்க முடியும். அவர்கள் காவலாளி நேரம் ஆகி விட்டது வெளியே செல்லுங்கள் என்று கூறினாலும் செல்வதே கிடையாது.

    அவர்களை வெளியே அனுப்புவதற்குள் அவர்களுக்கு போதும், போதும் என்றாகி விடும். அப்படியும் சிலர் மறைந்து இருந்து விட்டு, கதவை மூடிய பின்னர் வெளியில் வந்து திறந்து விட்டு செல்வதையும் காண முடிகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாநகராட்சியின் இந்த அரிய முயற்சி மிகவும் வெற்றிகரமானதாகும்.

    இக்குளக்கரையானது கோவை வாழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமன்றி, மனம் மகிழ்ந்து உறவுகளை மேம்படுத்தும் ஒரு பாலமாக இது அமைகிறது. இங்கு பார்க்கிங் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால், இங்கு வருகை தரும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
    • பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம்- கறம்பக்குடி சாலை மற்றும் தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென அந்த பேனர் சரிந்து கீழே சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றன.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பழுது அடைந்த வாகனங்கள் துருபிடித்த நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன.

    சென்னையில் மாநகர சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தேவையற்ற வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் காலை, மாலை என எப்போதும் முக்கிய சாலைபகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதற்கு சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமல்ல சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு காரணம் ஆகும்.

    சென்னையில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 2000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    சென்னையில் சுமார் 50 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் பெரும் பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக் களிலும் நிறுத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றன. கால் டாக்சிகள், ஆட்டோக்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இட நெருக்கடியால் வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாமல் போய்விட்டன.

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசல், சாலையோர,தெருவோர ஆக்கிரமிப்புகள் தற்போது பெருகி வருகின்றன.எழும்பூர், ஓட்டேரி, புளியந் தோப்பு, பெரம்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றன. இந்தபகுதியில் உள்ள சாலையோரங்களில் பழுதடைந்த உபயோகமற்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிடக்கின்றன.

    சென்னை மாநகரம் முழு வதும் நூற்றுக்கணக்கான பழுதடைந்த கார், ஆட்டோக்கள்,மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரங்களில் பழுதான, கேட்பாராற்று கிடந்த வாகனங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை மாநகரம் முழுவதும் கேட்பாரற்ற பழுதான வாகனங்கள் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிடக்கின்றன. சரி செய்ய முடியாத பழுதடைந்த வாகனங்களை பொதுமக்கள் ரோட்டோர பகுதிகளில் விட்டு சென்று உள்ளனர்.

    இந்த வாகனங்களால் பொதுமக்கள், மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடை யூறு ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த மாநகரம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, வேப்பேரி, கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் என அனைத்து இடங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்கள் குறித்து அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு சம்பந்தப்பட்ட வாகனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பொது மக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களின் பதிவு எண்களை வைத்து அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்தது.

    மேலும் உரிமை கோராத, முறையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லாத கார், வேன், ஆட்டோ வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தோப்பு, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அசோக்நகர், வடபழனி, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, மூலக்கடை, பெரம்பூர், செம்பியம், வியாசர்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலையோரங்களில் கார் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பழுது அடைந்த வாகனங்கள் துருபிடித்த நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன.

    மயிலாப்பூர் பகுதியில் கேட்பாரற்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலையில் வாகனங்களை விட்டுச் சென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும். "மோட்டார் வாகன ஒர்க் ஷாப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் 'ரெய்டு' செய்ய வேண்டும். இதில் பல ஒர்க் ஷாப் கடைகளில் இடவசதி இல்லை.இதனால் வாகனங்கள் ரோட்டோரத்திலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை அகற்ற மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    • இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் வாகன உரிமை யாளர்கள் வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.

    இதனால் இந்த 93 வாகனங்கள் வருகின்ற 25-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சேலம் மேற்கு வட்டம், சர்கார் கொல்லப்பட்டி மருத்துவ கல்லூரி எதிரில் அமைந்துள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவல கத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

    வாகனங்களை பார்வையிட சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருத்தியை எடுத்து வந்து காத்திருக்கின்றனர்.
    • பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடியாக இந்த ஆண்டு 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆரம்பம் முதலே மழை காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாக பருத்தி சாகுபடி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள பருத்தி எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனையடுத்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை எடுத்துக்கொண்டு திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்திற்கு செல்கின்றனர். அங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்கின்றனர்.

    இதற்காக பருத்தியை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேற்று இரவு முதல் மாங்குடி, மாவூர், கொரடாச்சேரி, கமலாபுரம், அத்திப்புலியூர், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனத்தின் மூலமாக பருத்தியை எடுத்து வந்து காத்திருக்கின்றனர்.

    திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கதவை திறக்காததன் காரணமாக விவசாயிகள் திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரிலிருந்து புலிவலம் வாளவாக்கால் ரவுண்டானா வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்களது வாகனங்களில் பருத்தியை வைத்து கொண்டு இரவிலிருந்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக வாகனத்திற்கு இரட்டை வாடகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு மீண்டும் பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளை காக்க வைக்காமல் முன்கூட்டியே ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறந்து வைத்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளான கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகளில் இருக்கும் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை நிறுத்தக்கூடாது.
    • மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு நகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளான கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகளில் இருக்கும் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை நிறுத்தக்கூடாது.

    மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு நகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், திருச்செங்கோடு நகரில் முக்கிய வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூ றாக வாகனங்கள் நிறுத்து வதை தவிர்த்து, போக்குவ ரத்திற்கு உதவு மாறு, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் வழங்கினர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
    • இதில் 120 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் இயக்கப்பட்ட 3 கார்கள், 1 மேக்சி கேப், 3 கனரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    இதில் 120 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் இயக்கப்பட்ட 3 கார்கள், 1 மேக்சி கேப், 3 கனரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் அதிக வேகம், அதிக பாரம் ஏற்றி வந்தது, ஹெல்மெட் அணியாதது, செல்போன் டிரைவிங், சீட் பெல்ட் அணியாதது, சிக்னல்களை முந்துதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக 57 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம் தற்காலிக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

    இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவ்வாறு இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனம் சிறை பிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் எச்சரித்துள்ளார்.

    இதனிடையே கடந்த ஜூன் மாதத்தில் தொடர் வாகனத் தணிக்கை மேற்கொண்டதில் சுமார் 630 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 121 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.

    வரி மற்றும் இணக்க கட்டணமாக ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

    • தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி களுக்கு அனுமதி பெறாத தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வருவதை கண்காணித்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.
    • ஆர்.டி.ஓ. கவிதா ஓமலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த 3 கார்களை பிடித்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி களுக்கு அனுமதி பெறாத தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வருவதை கண்காணித்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.

    அதன்படி நேற்று தாரமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஓமலூர் ஆர்.டி.ஓ. கவிதா ஓமலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த 3 கார்களை பிடித்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

    மேலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வாகன பதிவு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

    • புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது.
    • தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தால் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூ கருகி நாசமாகும் நிலை உள்ளது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக காற்றாலை கனரக வாகனங்கள் சென்று வருதவால் பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் ெதாடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை பகுதி வழியாக சென்ற கனரக வாகனங்களை அப்பகுதியினர் சிறைபிடித்து இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறும்போது, எங்களது ஊரின் வழியாகவும், விவசாயம், வாகன தடங்கள் வழியாகவும் 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தாலும் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம், வெண்டை, கத்தரி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூ கருகி நாசமாகும் நிலை உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

    ×