search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டிகள்"

    • சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது.

    சேலம் மாநகரில் 5 ரோட்டில் ஈரடுக்கு மேம்பாலம், நான்கு ரோட்டில் மேம்பாலம், லீ பஜார் மேம்பாலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம், புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்கு சாவடி, குரங்கு சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரை, சேலம் பெங்களூர் பைபாஸில் இரும்பாலை பிரிவு ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலை, ஏ. வி.ஆர்.ரவுண்டானாவில் மேம்பாலம் என மாநகரில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சி அளிக்கிறது.

    மேம்பால நகரம்

    மாம்பழ நகரான சேலம் தற்போது மேம்பால நகராகவும் காட்சியளிக்கிறது. இந்த பாலப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர்.

    ஆனால் இதற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட முள்ளுவாடி கேட் ரெயில்வே மேம்பாலம் தான் தற்போது வரை பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    முள்ளுவாடி ரெயில்வே கேட்

    சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது.

    இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

    குறிப்பாக அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி ,ஏற்காடு, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி ,காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி, கடைவீதி பழைய பஸ் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் வரும் வாகனங்களும் முள்ளுவாடி ரெயில்வே கேட்டை கடந்து பழைய பஸ் நிலையம் செல்கின்றன.

    இதே போல அஸ்தம்பட்டி ஏற்காடு, கன்னங்குறிச்சி, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் செல்லும் பஸ்களும் தனியார் வாகனங்களும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முள்ளுவாடி கேட்டை கடந்து தான் செல்கின்றன. போக்குவரத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த முள்ளுவாடி கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று செல்லும் நிலை தினமும் பலமுறை ஏற்படும். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேம்பாலம்

    கட்டும் பணி தொடக்கம்

    இதை அடுத்து முள்ளுவாடி கேட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து அதற்கான பணிகள் ரூ.83 கோடி திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

    இந்த பாலம் மூன்று ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரச்சனை களால் பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமானது.

    தாமதம்

    3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது. தற்போது மத்திய கூட்டுறவு வங்கி அருகே பில்லர்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    அந்த பணிகள் நிறைவடைந்து சிலாப் பொருத்தும் பணிகள் இன்னும் ஆறு மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் முள்ளுவாடி கேட் மேம்பாலம் இன்னும் பயன்பாட்டிற்கு வர 8 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது.

    இந்த பாலப்பணி கட்டுமான தாமதத்தால் ஒவ்வொரு நாளும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் தவிக்கும் வாகன பிரச்சினை சொல்லி மாளாத வகையில் உள்ளது.

    அணை மேடு பாலம்

    இதேபோல சேலத்திலிருந்து அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னை, பெரம்பலூர், அரியலூர், என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அணை மேடு ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்வே கேட்டும் மூடப்பட்டால் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் பொன்னம்மாப்பேட்டை ரெயில்வே கேட் மூடப்படும் போது மீண்டும் போக்குவரத்து சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் .

    குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையும் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் அனைமேடு ரெயில்வே கேட் மற்றும் பொன்னமாபேட்டை ரெயில்வே கேட்டை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதனை தீர்க்கும் வகையில் அணைமேடு மேம்பாலம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இதற்காக ரூ.92.4 கோடி திட்ட மதிப்பிடும் தயாரிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

    நீண்ட நாள் எதிர்பார்பு

    ஆனாலும் 3 ஆண்டுகளாகியும் இன்னும் 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. ஆனால் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படும் போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    எனவே இந்த ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் விரிவடைந்து வருகிறது .இதனால் வாகன போக்குவரத்தும் பல மடங்கு பெருகி உள்ளது.
    • பல சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் விரிவடைந்து வருகிறது .இதனால் வாகன போக்குவரத்தும் பல மடங்கு பெருகி உள்ளது.

    பாதாள சாக்கடை பணிகள்

    ஆனால் சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் கியாஸ் குழாய் பதிப்பு போன்ற பல்வேறு பணிகளால் பல சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    ஓமலூர் மெயின் ரோடு

    சேலம் ஓமலூர் மெயின் ரோட்டில் டி.வி.எஸ்.பஸ் ஸ்டாப் அருகே இருந்து அங்கம்மாள் காலனி செல்லும் சாலை கடந்த மூன்று மாதங்களாக ஜல்லி கொட்டி ரோடுகள் போடாமல் அப்படியே உள்ளது.

    இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருவோர் இறங்கி தள்ளி செல்லும் நிலை நீடிக்கிறது. அங்குள்ள அ.தி.மு.க. அலுவலகம் அருகே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பணி முடியாமல் உள்ளது . இதனால் அந்த சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நகர மலை அடிவாரம்

    குரங்கு சாவடியில் இருந்து நகரமலை அடிவாரம் செல்லும் சாலை கடந்த மூன்று ஆண்டு களாக சீர மைக்கப்படாமலே உள்ளது. இதனால் அந்த சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் புலம்பி தவிக்கிறார்கள்.

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கல்லாங்குத்து பகுதியில் சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெறு வதால் அந்த சாலை கடந்த சில மாதங்களாக போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    அதேபோல சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து களரம்பட்டி செல்லும் மெயின் ரோடு, எருமா பாளையம் மற்றும் சன்னியாசிகுண்டு செல்லும் பிரதான சாலைகள் சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது .இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

    அம்மாபேட்டை

    சேலம் அம்மாபேட்டை ஜெயா தியேட்டர் முன்புள்ள ரோடு கான்கிரீட் ரோடாக போடும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது . அந்த பணிகளும் இன்னும் நிறைவு பெறாததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் பல ரோடுகளை சுற்றி செல்லும் நிலை இன்றும் நீடிக்கிறது.தாதகாப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் ரோடு சீரமைப்பு பணி தொடங்கியும் பணிகள் நிறைவு பெறாதால் அந்த சாலையும் மிக மோசமாக காட்சியளிக்கிறது .

    ரெட்டியூர் மெயின் ரோடு

    இதேபோல சேலம் ரெட்டியூர் மெயின் ரோடு பணிகள் முடியாமல் அரைகுறையாக கடந்த 6 மாதமாக இருப்பதால் அந்த சாலையிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.

    குகை காளியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. ஆனால் அந்த கோவில் அருகே உள்ள சாலைகள் பல மாதங்களாகியும் இன்னும் பணி முடியாத நிலையே நீடிக்கிறது. இதனால் அந்த வழியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்லவும் குகை பெரியார் வளைவு செல்லவும் முடியாததால் திருச்சி குகை மெயின் ரோட்டில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.இந்த சாலையில் ஆம்புலன்ஸ் கூட வெகு நேரம் காத்து நின்று செல்லும் நிலை ஒவ்வொரு நாளும் பலமுறை ஏற்படுகிறது.

    முள்ளுவாடி கேட்

    சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பாலப்பணி நடைபெற்று வருகிறது.இதனால் ெரயில் செல்லும் நேரங்களில் ெரயில்வே கேட் மூடப்பட்டு பின்னர் திறந்து விடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஒவ்வொரு முறையும் ரெயில்கள் செல்லும்போது அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.

    இதே போல சேலம் மாநகரின் பல்வேறு சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மோசமான நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டும் என்பது சேலம் மாநகர பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
    • இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது.

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. குட்டையாக நிற்கும் மழைநீரில் குப்பை, மண் சேர்ந்து சகதியாக மாறியதால், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேங்கி கிடக்கும் சேறும், சகதியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் சதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.
    • இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம்– உளுந்துார்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், வாழப்பாடி பேரூராட்சிக்கு முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., துாரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

    இச்சாலையில் இருந்து, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த வாழப்பாடி– தம்மம்பட்டி சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளையும் இணைக்கும் வகையில், சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து புதுப்பாளையம் வரை, புறவழிச்சாலையின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது.

    தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் இச்சாலை வழியாகவே சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. இதுமட்டுமின்றி, சிங்கிபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்களும், வாழப்பாடி நகர்ப்புற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அனைத்து ரக வானங்களும் இந்த இணைப்புச் சாலையிலேயே சென்று வருகின்றன.

    இந்நிலையில், புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் வசதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.

    இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி இப்பகுதியில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. எனவே, பழுதடைந்து கிடக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    ×