என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குப்பைகளை அகற்ற 23 புதிய வாகனங்கள்
Byமாலை மலர்18 Aug 2023 9:23 AM GMT (Updated: 18 Aug 2023 9:49 AM GMT)
- தூய்மை பணியாளர்களுக்கு புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ரூ1 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் சிரமத்தை போக்க நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவுரிதிடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ரூ1 கோடியே 67, லட்சம் ரூபாய் மதிப்பிலான 23, இலகுரக வாகனத்தின் சாவியினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நகராட்சி ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X