search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனர்"

    • பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டத்திற்கு நடைபயணம் வருகிறார். இதனை வரவேற்று பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் ராஜா தியேட்டர் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள நேஷனல் சர்க்கிள் பகுதிகளில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    பா.ஜ.க டிஜிட்டல் பேனர்கள் இன்று காலையில் காட்பாடி சாலை ஓரம் உள்ள கால்வாயில் வீசப்பட்டு கிடந்தன.

    இதனைக் கண்டு பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நள்ளிரவில் வேண்டுமென்றே மர்ம கும்பல் அதனை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க.வினர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே பா.ஜ.க. பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • அனுமதியின்றி பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • அனுமதியின்றி பேனர் அச்சடித்துக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    அனுமதியின்றி பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்தது. அத்துடன், விதிமீறலினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கடலூர் மாவட்ட எல்லையில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மட்டுமின்றி, அச்சடித்துக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அனுமதியின்றி பேனர், செண்டர் மீடியனில் நோட்டீஸ் ஒட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது.
    • பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியின்றி அரசயில்கட்சியினரால் பேனர்கள் வைக்கப்படுகிறது.

    முக்கிய சிக்னல் சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களால் உயிர் பலி ஏற்படுகிறது. இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.

    அதில், எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து வந்து அந்த பேனரை அகற்றினர்.

    மேலும் பேனர் வைத்த அமைப்பின் நிறுவனர் அசோக்ராஜ் உட்பட நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபோல் பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், ஆதரவற்ற, தெருவோர செல்ல பிராணிகளை மீட்டு வளர்த்து வருகிறோம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களை காப்பாற்றியுள்ளோம். நோணாங்குப்பத்தில் 4 ஆண்டுக்கு முன் மிக மோசமான நிலையில் மீட்டெடுக்கப்பட்ட நாய்க்கு பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தோம்.

    கலெக்டர், புதுவையில் பேனர் வைக்க தடையில்லை என கூறியுள்ளதால் ராஜீவ்காந்தி சிக்னலில் யாருக்கும் பாதிப்பின்றி பேனர் வைத்தோம். ஆனால் நாய்க்கு பேனர் வைக்கக் கூடாது என போலீசார் அகற்றிவிட்டனர் என்றார்.

    ராஜீவ்காந்தி சிக்னலில் பெரியளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தியேட்டர்களில் படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
    • லியோ படம் வெளியாகும் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 19 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகி உள்ளது.

    இதனையொட்டி தியேட்டர்களுக்கு முன்பாக ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளதாளம் இசைத்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர். காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கின. முன்னதாக தியேட்டர்களுக்குள் ரசிகர்கள் அனைவரும் ஊழியர்களின் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் பட்டனர். சோதனையின் போது மதுபாட்டில்கள், பட்டாசு, கலர் பொடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திரையரங்குகளுக்குள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தடை விதித்தனர். மேலும் ரசிகர்களை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    ஈரோட்டில் ஒரு தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றில் விஜய்-யை வருங்கால முதல்வர் என்றும், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை வருங்கால அமைச்சர், வருங்கால எம்.எல்.ஏ, வருங்கால கவுன்சிலர் என பேனர் வைத்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    முன்னதாக தியேட்டர்களில் படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. லியோ படம் வெளியாகும் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
    • பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம்- கறம்பக்குடி சாலை மற்றும் தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென அந்த பேனர் சரிந்து கீழே சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் அனுமதி யின்றி பேனர் வைத்திருப்பது தெரிய வந்தது.
    • அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் காமராஜ் நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் அனுமதியின்றி பேனர் வைத்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், சின்ன எலத்தகிரியை சேர்ந்த பிரேம்குமார் (வயது29), முரளி (24) ஆகிய 2பேர் பேனர் வைத்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு வைத்துள்ள பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
    • தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆவடி:

    விதிமுறைகள் மீறி பேனர்கள் வைத்தால் 3 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த மாதம் அரசு எச்சரிக்கை விடுத்தது.

    இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட ஏராளமான பேனர்கள் அகற்றப்பட்டன.

    இந்நிலையில் ஆவடி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்னமும் சில இடங்களில் பேனர் கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. விதிகளை மீறி வைக்கும் பேனர்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட புதிய ராணுவ சாலை, சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு வைத்துள்ள பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

    கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நகரமைப்பு பிரிவில் அதிகாரிகள் இல்லாததால் பேனர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதேபோல் தாம்பரம் பகுதியில் பேனர் கலாச்சாரம் மெல்ல தலைதூக்கத் தொடங்கி உள்ளது. செம்பாக்கம், கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலை, முடிச்சூர் சாலைகளில் விதிமுறை மீறி ஏராளமான பேனர்கள் முளைத்து உள்ளன. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்றி பேனர் கலாச்சா ரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அனுமதியின்றி பேனர் வைத்ததாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • விளம்பரப் பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சுப, துக்க காரியங்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைத்து பிரபலப்படுத்துவது மிகப்பெரிய கலாசாரமாக மாறி வருகிறது.

    சிறிய அளவிலான பேனர் தொடங்கி பிரமாண்ட அளவில் பேனர் அமைப்பதும் பல தரப்பினர் மத்தியிலும் வழக்கமான கலா சாரமாக உரு வெடுத்துள்ளது.

    இதனால் பல்வேறு இடங்களில் பேனர்கள் விழுந்து அவ்வப்போது உயிர்பலிகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் கோவையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் 3 தொழி லாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் பேனர்கள் அமைக்க கடும் கட்டுப்பாடு களை தமிழக அரசு விதித்துள்ளது.

    அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்றும், பேனர் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை கணக்கெடுத்து அவற்றை உடனடியாக அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அந்த வகையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீ சார் வழயக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அனுமதி இன்றியும், கால அவகாசம் முடிந்தும் அகற்றப்படாமல் இருக்கும் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பேனர்களை அகற்றாமல் இருக்கும் நபர்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் வசூலிப்ப துடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் உரிய அனுமதி பெறாமல் இனிமேல் பேனர் வைப்ப வர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை காளவாசல் பகுதியில் நேற்று மாலை அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.

    மதுரை நகர் பகுதிகளில் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து விழாக்க ளுக்கும் உரிய அனுமதி பெற்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் விளம்பர பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே விளம்பர பேனர்கள் விஷயத்தில் தமிழக அரசு தற்போது கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேனர் கலாசாரம் குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும்.
    • பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பல மணி நேரமாக பாதிக்கப்பட்ட நிலையில் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையில் நின்றன.

    இதனால் விபத்து உயிர் இழப்பு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் அவதிப்பட்டனர்.

    இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சாலை ஓர நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சாலையில் குறிக்கப்பட்ட அளவிற்கு கயிறுகள் கட்டி அளவீடு செய்யவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும் எனவும், பள்ளி கல்லூரி நேரங்களில் போலீசார் வாகன நெரிசலை சரிபடுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன எனவும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் அனுமதி பெற்று ஒரு நாள் மட்டும் வைத்துக் கொள்ளவும் மீறினால் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

    பொன்னேரி தேரடி தெருவில் கடைகளில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் அபராததொகை மற்றும் கடைகள் அகற்றப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு மீறினால் நகராட்சி நிர்வாகம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை.
    • பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் பேனர்களை வைக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    சென்னை-மாமல்லபுரம் இடையே கரைகடந்த "மாண்டஸ்" புயலால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கல்லூரி, ரியல் எஸ்டேட், கட்சிகளின் விளம்பர பேனர்கள் என 100 க்கும் மேற்பட்டவை சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தது.

    சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முதல் கட்டமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் சாலையோரம் சரிந்த மின் கம்பங்கள், சுவர் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறோம்.

    பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் அவர்கள் பெரியவகை பேனர்களை வைக்கிறார்கள். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் அது சரிந்து விழுந்தால் அதன் இரும்பு பைப்புகளால் விபத்து, உயிர் சேதம் ஏற்படும். இதை அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    • தேவகோட்டையில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உஞ்சனை அரசு ஆதி திராவிடர் நல தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அருகருகே உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர்.

    அது படிப்படியாக சரிந்து கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளியில் 13 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

    பள்ளிகள் மூடும் நிலையில் இருந்தததால் ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முயன்று வருகின்றனர். மேலும் உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி 6 முதல் 10-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச மாக ஸ்மார்ட் போன், டேப் தருவதாக அறிவித்துள்ளார்.

    அதேபோல் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் தருவதாக தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர் லாசர் அறிவித்துள்ளார். மேலும் மங்கலம் என்ற கிராமத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்களுக்கு ஆட்டோ வாடகையும் ஆசிரியர்களே வழங்குகின்றனர். உயர்நிலைப்பள்ளியில் இணையத்துடன் கணினி வசதி, புரெஜெக்டர் போன்றவற்றையும் ஏற்படுத்தி உள்ளனர்.

    ஆசிரியர்கள் போட்டி போட்டு இலவசங்களை அறிவித்து வருவதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளியில் சேரும் மாணவர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்மனச்செம்மல் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் கிராமமக்கள் மாலை அணிவித்து வர வேற்கின்றனர். தற்போது இரு பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை 30-ஐ கடந்துள்ளது. மேலும் எண்ணிக்கை உயரும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    திண்டிவனத்தில் வக்கீல் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    ரோசனை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 75). இவர் இன்று காலை திருமண விழாவுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கினர்.

    இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    படுகாயமடைந்த மூதாட்டி ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோன்று ராஜாராம் என்பவரது வீட்டை உடைத்து மர்மநபர்கள் புகுந்தனர். அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    திண்டிவனம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரி. இவர் காற்று வாங்க வீட்டு முன்பகுதியில் தூங்கினார். இரவு நேரம் மர்மநபர்கள் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த 500 கிராம் வெள்ளி மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    ஒரே நாளில் திண்டிவனம் பகுதியில் 4 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏறபட்டது. இது தொடர்பாக போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×