search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி பேனர் வைத்ததாக 50 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    அனுமதியின்றி பேனர் வைத்ததாக 50 பேர் மீது வழக்குப்பதிவு

    • அனுமதியின்றி பேனர் வைத்ததாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • விளம்பரப் பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சுப, துக்க காரியங்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைத்து பிரபலப்படுத்துவது மிகப்பெரிய கலாசாரமாக மாறி வருகிறது.

    சிறிய அளவிலான பேனர் தொடங்கி பிரமாண்ட அளவில் பேனர் அமைப்பதும் பல தரப்பினர் மத்தியிலும் வழக்கமான கலா சாரமாக உரு வெடுத்துள்ளது.

    இதனால் பல்வேறு இடங்களில் பேனர்கள் விழுந்து அவ்வப்போது உயிர்பலிகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் கோவையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் 3 தொழி லாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் பேனர்கள் அமைக்க கடும் கட்டுப்பாடு களை தமிழக அரசு விதித்துள்ளது.

    அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்றும், பேனர் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை கணக்கெடுத்து அவற்றை உடனடியாக அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அந்த வகையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீ சார் வழயக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அனுமதி இன்றியும், கால அவகாசம் முடிந்தும் அகற்றப்படாமல் இருக்கும் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பேனர்களை அகற்றாமல் இருக்கும் நபர்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் வசூலிப்ப துடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் உரிய அனுமதி பெறாமல் இனிமேல் பேனர் வைப்ப வர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை காளவாசல் பகுதியில் நேற்று மாலை அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.

    மதுரை நகர் பகுதிகளில் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து விழாக்க ளுக்கும் உரிய அனுமதி பெற்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் விளம்பர பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே விளம்பர பேனர்கள் விஷயத்தில் தமிழக அரசு தற்போது கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேனர் கலாசாரம் குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×