search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாண்டஸ் புயலால் இ.சி.ஆரில் அனுமதியின்றி வைத்த 100க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகள் விழுந்தன

    • சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை.
    • பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் பேனர்களை வைக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    சென்னை-மாமல்லபுரம் இடையே கரைகடந்த "மாண்டஸ்" புயலால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கல்லூரி, ரியல் எஸ்டேட், கட்சிகளின் விளம்பர பேனர்கள் என 100 க்கும் மேற்பட்டவை சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தது.

    சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முதல் கட்டமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் சாலையோரம் சரிந்த மின் கம்பங்கள், சுவர் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறோம்.

    பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் அவர்கள் பெரியவகை பேனர்களை வைக்கிறார்கள். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் அது சரிந்து விழுந்தால் அதன் இரும்பு பைப்புகளால் விபத்து, உயிர் சேதம் ஏற்படும். இதை அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×