search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் திடீரென சரிந்து விழுந்த பேனர்
    X

    சாலையில் சரிந்து கிடக்கும் பேனர்.

    சாலையில் திடீரென சரிந்து விழுந்த பேனர்

    • மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
    • பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம்- கறம்பக்குடி சாலை மற்றும் தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென அந்த பேனர் சரிந்து கீழே சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×