search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicles"

    • கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.
    • அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற வாகனங்களுக்கு அபராதம்.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பள்ளி நேரங்களான காலை 8மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 4மணி முதல் 6மணி வரையிலும் கனரக வாகனங்கள் வந்து செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இந்நிலையில் போலீசாரின் அறிவிப்பை மீறி நகரில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமையில் போலீ சார்வாகனதணிக்கை செய்தனர்.

    அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற கனரக வாகனங்கள் நிறுத்தி அபராதம் விதித்து ஓட்டுனரை எச்சரித்தனர்.

    • விதிமுறைகளின் படி அனைவருக்கும் பொது வான வகையில் நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும்.
    • விபத்துக்கள் ஏற்படுத்திவிட்டு தப்புவதை வாகனங்களின் எண்களைக் கொண்டு போலீசாரும், பொது மக்களும் அடையாளம் காண்கின்றனர்.

    ராமநாதபுரம்

    மக்கள் தொகை அதிகரிப்பால் வாகனங்கள் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகின்றனர். வாகன நெருக்கடி அதிகரித் தாலும் சாலைகளின் அளவு அதிகரிக்க முடியாத நிலை யில் அடிக்கடி விபத்துகளும், இதன் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் நடைபெறு கிறது.

    இது போன்ற குற்றச்சம்ப வங்கள் விபத்துக்கள் ஏற் படுத்திவிட்டு தப்புவதை வாகனங்களின் எண்களைக் கொண்டு போலீசாரும், பொது மக்களும் அடையா ளம் காண்கின்றனர்.

    வாகன எண்களை நம்பர் பிளேட்டுகளில் எழுதுவ தற்கு ஒவ்வொரு எண் ணிற்கும் இடைவெளி, உய ரம், நிறம் என்ற விதிமுறை கள் உள்ள நிலையில் பல் வேறு தரப்பினரும் தங்கள் இஷ்டமான வடிவங்களில் வாகன பதிவு எண்களை எழுதி வலம் வருகின்றனர்.

    ஹெல்மெட், லைசென்ஸ் போன்ற கண்காணிப்புகளில் காட்டும் ஈடுபாட்டை போலீ சார் முறையற்ற நம்பர் பிளேட்டுகளில் காட்டாத தால் அதிகாரத்தை பொறுத்து கட்சி வண்ணங் களில், மிரட்டல் எழுத்துக் கள் வருவது போன்றும், தங் கள் பதவியையும், வாகன எண்களுக்கு பதில் அரசியல், ஜாதி கட்சி தலைவர்களின் உருவங்களை பொறித்தும், ஆங்கில எழுத்துக்களுக்கு பதில் தமிழில் மாற்றியும் வைத்துள்ளனர். இது போன்ற செயல்களால் முக்கியமான நேரங்களில் நழுவி செல்லும் வாகனங் களை அடையாளம் காண முடிவதில்லை.

    எனவே விதிமுறைகளின் படி அனைவருக்கும் பொது வான வகையில் நம்பர் பிளேட்டுகளில் எண்களை எழுத வாகன உரிமையாளர் களுக்கும், இவற்றை எழுதும் ஸ்டிக்கர் கடைகளுக்கும் அறிவுறுத்துவதுடன் மீறு பவர்களுக்கு அபராதம் விதித்து கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

    • கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டுபிடித்து அவைகளை ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்தது.
    • சென்னை வடக்கு மண்டலத்தில் 271 வாகனங்கள் கேட்பாரற்று இருந்தன.

    சென்னை:

    சென்னை மாநகர சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டுபிடித்து அவைகளை ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்தது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் சென்னை மாநகரம் முழுவதும் சாலையோரமாக நீண்ட நாட்களாக 1308 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சாலை யோரமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து அவைகளை ஏலத்தில் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 16 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோக்கள், 95 நான்கு சக்கர வாகனங்கள் என 132 வாகனங்கள் அப்புறப்ப டுத்தப்பட்டுள்ளன. சென்னை வடக்கு மண்டலத்தில் 271 வாகனங்கள் கேட்பாரற்று இருந்தன.

    இதில் 14 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மத்திய மண்டலத்தில் 644 வாகனங்களில் 101 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தெற்கு மண்டலத்தில் 393 வாகனங்களில் 17 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலை ஓரமாக நிறுத்தப்ப ட்டுள்ள வாகனங்கள் வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களா? என்பது பற்றி போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அது போன்ற வாகனங்களின் வழக்குகளை விரைந்து முடித்து அவைகளையும் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பல தெருக்களில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நெரிசலும் நெருக்கடியும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது.
    • வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

    வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.

    • நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது.

    உடுமலை

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற கனரக லாரிகள் பிரதான மற்றும் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகமும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்து நெருக்கம் மிகுந்த பகல் வேளையில் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை பின்பற்றாமல் வாகனங்களை கொண்டு வந்து சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் அவசர கால உதவியை பெறுவதில் கூட தடங்கல்கள் ஏற்படுகிறது.

    ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது. மேலும் சாலையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாற்று வழியை தேடி செல்ல வேண்டிய சூழலும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் காலநேர விரையம் ,எரிபொருள் செலவும் கூடுதலாக ஏற்படுகிறது.

    எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் கனரக வாகனங்கள் பகல் வேளையில் நகரப்பகுதியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

    • சென்டர் மீடியனில் மோதி தினமும் விபத்தில் வாகனங்கள் சிக்குகின்றன.
    • எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் எதுவுமி இல்லா ததால் தினந்தோறும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி, மதுரை, தேனி, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேரமும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நூற்பாலை உள்ளிட்ட ஆலைகளுக்கு மூலப்பொ–ருட்கள் மற்றும் உற்பத்தி பொருட் களை கொண்டு செல்ல தினசரி நூற்றுக்கணக் கான கனரக வாகனங்களும் இவ்வழியே செல்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு அருகே வளைவு பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. உயரம் குறைவாக உள்ள சென்டர் மீடியனில் பேருந்து கள், கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    வளைவு பகுதி யில் எச்சரிக்கை பலகைகள் இல்லாதது மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் கள் இல்லாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சா லையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.

    இந்தநிலையில் கோயம் புத்தூரில் இருந்து ராஜபா ளையம் பகுதியில் உள்ள ஆலைக்கு மூலப்பொருட் களை ஏற்றி வந்த சரக்கு லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. லாரியில் சரக்குகள் அதிக அளவில் இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் மதுரை-கொல் லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு லாரியில் இருந்த சரக்குகள் இறக்கப் பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத் தப்பட்ட பின் போக்குவ ரத்து சீரானது.

    அதே போல் நேற்று இரவு அதே சென்டர் மீடியனில் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. சென்டர் மீடியன் உயரத்தை அதிகரித்து எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ட பொம் மன் சிலை முன்பு உரிமையா ளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்ப டுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், விதி மீறும் வாகனங்களை கண்கா ணித்து அவர்களுக்கு உரிய தண்டனையும், அபராதமும் விதித்து வருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் இல்லாமல் குற்றச்செயல்க ளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந் தது. இந்த நிலையில் மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை துணை ஆணையர் குமார் தலைமையில், மாநகர பகுதிகள் முழுவதும் தீவிர வாகன சோதனை இன்று மேற் கொண்டனர். இதில் இரண்டு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகன பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை கூறினர்.

    மேலும் முறையாக நம்பர் பிளேட் பொருத்தி மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் அகற்றப்பட்டு புதிய நம்பர் பிளேட் வைத்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் 

    • பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி, சுற்றுவட்டாரங்களில் உள்ள சுமார் 300 மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது.

    இங்கு தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, அரசு கருவூலம், போலீஸ் நிலையம், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், பத்திரப் பதிவு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளதால் கோத்தகிரி நகர் பகுதி போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    மேலும் கோத்தகிரி பகுதியில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்படவில்லை.

    எனவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.

    எனவே நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

    • குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
    • நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கவும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

    நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவ ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

    இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர் மன்ற துணைத் தலைவர், நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல், நகர துணை செயலாளர் ராஜவேல், நகர்மன்ற உறுப்பி னர்கள் செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல், சண்முக வடிவு, திவ்யா வெங்கடேசன், தாமரைச்செல்வி மணிகண்டன், டி.என்.ரமேஷ், முருகேசன், டபிள்யூ.டி.ராஜா, அண்ணாமலை, அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது.

    சேலம் மாநகரில் 5 ரோட்டில் ஈரடுக்கு மேம்பாலம், நான்கு ரோட்டில் மேம்பாலம், லீ பஜார் மேம்பாலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம், புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்கு சாவடி, குரங்கு சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரை, சேலம் பெங்களூர் பைபாஸில் இரும்பாலை பிரிவு ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலை, ஏ. வி.ஆர்.ரவுண்டானாவில் மேம்பாலம் என மாநகரில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சி அளிக்கிறது.

    மேம்பால நகரம்

    மாம்பழ நகரான சேலம் தற்போது மேம்பால நகராகவும் காட்சியளிக்கிறது. இந்த பாலப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர்.

    ஆனால் இதற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்ட முள்ளுவாடி கேட் ரெயில்வே மேம்பாலம் தான் தற்போது வரை பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    முள்ளுவாடி ரெயில்வே கேட்

    சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் அமைந்துள்ளது.

    இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

    குறிப்பாக அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி ,ஏற்காடு, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி ,காரிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி, கடைவீதி பழைய பஸ் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் வரும் வாகனங்களும் முள்ளுவாடி ரெயில்வே கேட்டை கடந்து பழைய பஸ் நிலையம் செல்கின்றன.

    இதே போல அஸ்தம்பட்டி ஏற்காடு, கன்னங்குறிச்சி, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம் செல்லும் பஸ்களும் தனியார் வாகனங்களும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முள்ளுவாடி கேட்டை கடந்து தான் செல்கின்றன. போக்குவரத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த முள்ளுவாடி கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று செல்லும் நிலை தினமும் பலமுறை ஏற்படும். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேம்பாலம்

    கட்டும் பணி தொடக்கம்

    இதை அடுத்து முள்ளுவாடி கேட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து அதற்கான பணிகள் ரூ.83 கோடி திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

    இந்த பாலம் மூன்று ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரச்சனை களால் பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமானது.

    தாமதம்

    3 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிய வேண்டிய பணி 8 ஆண்டுகளாகியும் தற்போது வரை 80 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது. தற்போது மத்திய கூட்டுறவு வங்கி அருகே பில்லர்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    அந்த பணிகள் நிறைவடைந்து சிலாப் பொருத்தும் பணிகள் இன்னும் ஆறு மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் முள்ளுவாடி கேட் மேம்பாலம் இன்னும் பயன்பாட்டிற்கு வர 8 மாதங்கள் வரை ஆகும் என தெரிகிறது.

    இந்த பாலப்பணி கட்டுமான தாமதத்தால் ஒவ்வொரு நாளும் ரெயில்வே கேட் பூட்டப்படும் போதும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் தவிக்கும் வாகன பிரச்சினை சொல்லி மாளாத வகையில் உள்ளது.

    அணை மேடு பாலம்

    இதேபோல சேலத்திலிருந்து அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சென்னை, பெரம்பலூர், அரியலூர், என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அணை மேடு ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்வே கேட்டும் மூடப்பட்டால் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் பொன்னம்மாப்பேட்டை ரெயில்வே கேட் மூடப்படும் போது மீண்டும் போக்குவரத்து சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் .

    குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையும் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் அனைமேடு ரெயில்வே கேட் மற்றும் பொன்னமாபேட்டை ரெயில்வே கேட்டை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதனை தீர்க்கும் வகையில் அணைமேடு மேம்பாலம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இதற்காக ரூ.92.4 கோடி திட்ட மதிப்பிடும் தயாரிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

    நீண்ட நாள் எதிர்பார்பு

    ஆனாலும் 3 ஆண்டுகளாகியும் இன்னும் 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. ஆனால் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படும் போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    எனவே இந்த ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    திருவாரூர்:

    குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்கள் ஏலம் என உதவி ஆணையர் (கலால்) அழகர்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு-ஆயத்தீர்வை விதிகளின்படி பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து அரசுக்கு ஆதாயம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பொது ஏலமானது திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு, திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமல்பிரிவு), தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

    பொது ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள் ஏலம் கோராதபட்சத்தில் பொது ஏலம் விடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவர்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் முன்பணத்தொகையாக ரூ.1000 வருகிற 30-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் நேரில் செலுத்த வேண்டும்.

    வாகனங்களை பொது ஏல அடிப்படையில் ஏலம் எடுத்து கொள்ளலாம்.

    அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் ஏலத்தில் கலந்து கொள்ள செலுத்தப்பட்ட முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    அதிக விலை கோருபவர்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்களுக்கு புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ரூ1 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் சிரமத்தை போக்க நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவுரிதிடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து ரூ1 கோடியே 67, லட்சம் ரூபாய் மதிப்பிலான 23, இலகுரக வாகனத்தின் சாவியினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நகராட்சி ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தனர்.

    ×