என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
- பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு,
கோத்தகிரி, சுற்றுவட்டாரங்களில் உள்ள சுமார் 300 மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது.
இங்கு தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, அரசு கருவூலம், போலீஸ் நிலையம், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், பத்திரப் பதிவு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளதால் கோத்தகிரி நகர் பகுதி போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
மேலும் கோத்தகிரி பகுதியில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்படவில்லை.
எனவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.
எனவே நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்