என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![உடுமலையில் விதிகளை மீறும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி உடுமலையில் விதிகளை மீறும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி](https://media.maalaimalar.com/h-upload/2023/09/11/1947829-01udumalai.webp)
போக்குவரத்து இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் காட்சி.
உடுமலையில் விதிகளை மீறும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
- ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது.
உடுமலை
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற கனரக லாரிகள் பிரதான மற்றும் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகமும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்து நெருக்கம் மிகுந்த பகல் வேளையில் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை பின்பற்றாமல் வாகனங்களை கொண்டு வந்து சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் அவசர கால உதவியை பெறுவதில் கூட தடங்கல்கள் ஏற்படுகிறது.
ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது. மேலும் சாலையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாற்று வழியை தேடி செல்ல வேண்டிய சூழலும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் காலநேர விரையம் ,எரிபொருள் செலவும் கூடுதலாக ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் கனரக வாகனங்கள் பகல் வேளையில் நகரப்பகுதியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)