search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic jam"

    • தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து குரூஸ் பர்னாந்து சிலை வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
    • எனவே நெருக்கடியான பகுதிகளில் முறையான போக்குவரத்து மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இதனால் மார்க்கெட் மற்றும் பஸ் நிறுத்தங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    சென்னையில் காவல்துறை சார்பில் தீபாவளி கால நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பஸ் போக்குவரத்து, இருசக்கர வாகன போக்குவரத்துகள் மாற்றம் செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதுபோல தூத்துக்குடி யிலும் ஏற்பட்டுள்ள கடுமை யான போக்குவரத்து நெருக்கடியினை கருத்தில் கொண்டு அதனை முறைப்படுத்தும் வகையில் போக்குவரத்துக்களை மாற்றம் செய்து அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து குரூஸ் பர்னாந்து சிலை வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் அது ஒரு வழி பாதையாக இருப்பினும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலை உள்ளது.

    எனவே இந்தப் பகுதி உட்பட நெருக்கடியான பகுதிகளில் முறையான போக்குவரத்து மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி முள்ளக்காடு பஸ் நிறுத்தத்தை மறைத்து விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதால் தீபாவளி பண்டிகை தினத்தில் பஸ் நிலையத்திற்கு வந்த பெண்கள் பொதுமக்கள் சாலையில் விபத்து ஏற்படும் வகையில் நின்று பஸ் எதிர் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று காலையில் இருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோட்டி ல் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக பன்னீர்செ ல்வம் பார்க் பகுதியில் சாலையின் இருபுறம் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி க்கடைகள் உள்ளன. இன்று காலையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    இதே போல் பேன்சி கடைகள், நகை கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்ப ட்டது. இதனால் இந்த பகுதியில் இன்று காலையிலிருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வழியாக மணிக்கூ ண்டு மூலம் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் சாலையின் இருப்புறம் ஜவுளி கடைகள் உள்ளதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆனது. இதேபோல் ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, கே.வி.என்.ரோடு, பெருந்துறை சாலையிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் இருந்து கலெக்டர் அலுவலகத்தை கடக்க ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆனது. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.

    ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது.
    • மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பரவலாக மழை பெய்தது. காலை 7 மணி வரை விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது. இதேபோல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சுங்குவார் சத்திரம், ஓரகடம், பாலு செட்டி சத்திரம், சாலவாக்கம், என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

    திடீர் மழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    • மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் தத்தளித்தபடியே செல்கின்றன.
    • போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்தாலும் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கடற்கரை நகரமான புதுவை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. புதுவை கடற்கரையின் அழகை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

     சுண்ணம்பாறு படகு குழாம், பாரடைஸ் பீச் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை காண சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதனால் புதுவையின் முக்கிய சாலையான முதலியார் பேட்டை, மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    குறிப்பாக மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் தத்தளித்தபடியே செல்கின்றன.இதனால் பொதுமக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

    ேமலும் புதுவை நகர பகுதிகளிலும் இதே நிலையே உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க வெளி ஊர்களில் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ஏராளமானோர் வருவதால் புதுவை நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இது தொடர்பாக புதுவை போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்தாலும் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    கனரக வாகனங்களை பிரித்து மாற்றுப் பாதையில் அனுப்பினால் புதுவையில் நிலவு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்

    மேலும் முக்கிய சாலைகளை விரிவுபடுத்துதல், மேம்பாலம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வு காணலாம் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ந்தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அருகேயுள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விடுமுறை தினமான நேற்று மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

    இந்தாண்டு தமிழக அரசு 2 மணி நேரம் மட்டுமே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக கர்நாடகவில் விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தவிர, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகளில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால் அதனை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர், பட்டாசுகளை பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுகின்றது என பட்டாசு வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால் அவர்கள் அதிகளவில் தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வந்தனர். இதனால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையோரமும் சர்வீஸ் சாலையிலும் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் அதே போல் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • திருச்செங்கோடு, நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சங்ககிரி ஆர்.எஸ். வழியாக சென்று வருகின்றன.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்செங்கோடு – சங்ககிரி - ஈரோடு செல்லும் சாலையில் பாலத்தில் இருந்து இருபுறமும் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சங்ககிரி:

    சங்ககிரி, எடப்பாடி, மகுடஞ்சாவடியில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சங்ககிரி ஆர்.எஸ். வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிக வாகனங்கள் சென்று வருகின்றன.

    போக்குவரத்து பாதிப்பு

    இந்த நிலையில் ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் ெரயில்வே மேம்பாலத்தில் ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவில் சாலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்செங்கோடு – சங்ககிரி - ஈரோடு செல்லும் சாலையில் பாலத்தில் இருந்து இருபுறமும் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    போலீசார் இல்லாததால் பொதுமக்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வெளியூர் செல்லும் பஸ் பயணிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமித்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • புதிய 6 வழிச் சாலைக்கான டெண்டர்களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் அதிகளவில் புறநகர் பகுதிகளில் இருப்பதால் கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கிறது.

    இதனால் சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நகர எல்லைக்குள் கனரக வாகனமோ, கார், வேன் போன்ற வாகனமோ செல்லாமல் சுற்று வட்டச் சாலையை பயன்படுத்தி கடந்து செல்ல ஏதுவாக தமிழ்நாடு சாலை கட்டமைப்பு முன்னேற்ற கழகம் சார்பாக வெளிவட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை வெளிவட்ட சுற்று சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கை 2017-ல் சமர்பிக்கப்பட்டது. இந்திய ரோடு காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி அது புதுப்பிக்கப்பட வேண்டும்.

    ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் இரண்டு வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையும், ஒரகடம், தொழில்துறை வழித்தடத் திட்டத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    133 கி.மீ. நீளமுள்ள சென்னை வெளிவட்ட சுற்று சாலை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பில் தொடங்கி சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம் தச்சூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகம் வழியாக எண்ணூர் துறைமுகம் வரை ரூ.15,626 கோடியில் அமைகிறது. 5 பிரிவுகளாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான 25.50 கி.மீ. தூரமும், தேசிய நெடுஞ்சாலை 5-ல் உள்ள தச்சசூரில் இருந்து திருவள்ளூர் புறவழிச் சாலை தொடங்கும் வரை 26.25 கி.மீ. மூன்றாவதாக 29.55 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் புறவழிச் சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையும் அமைகிறது. ஸ்ரீபெரும்புதூ ரில் இருந்து சிங்க பெருமாள் கோவில் வரை உள்ள 24.85 கி.மீ. தூரத்திற்கு 4-வது பிரிவு அமைகிறது. 5-வது பிரிவு சிங்க பெருமாள் கோவிலில் இருந்து மகாபலிபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் 27.50 கி.மீ. தூரம் இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் -சிங்க பெருமாள் கோவில் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்க ஒரு ஆலோகரை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் பகுதியில் 6 வழிச்சாலை அமைக்கப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் பிரிவு பணிகளின் ஒரு பகுதியாக திருவள்ளூர் பைபாஸ்- வெங்கத்தூர் மற்றும் வெங்கத்தூர் செங்காடு வரையிலான புதிய 6 வழிச்சாலைக்கான டெண்டர் களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

    முந்தைய டெண்டர் ரத்து செய்யப்பட்ட பின்னர் நீட்டிப்புகளுக்கான புதிய டெண்டர் அமைக்கப்பட்டுள்ளன என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாக னங்கள் வந்து செல்ல தடை விதித்து நேர கட்டுபாடு அறிவிக்கப்பட்டு நகர எல்லைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    சீர்காழி நகரில் பிரதான சாலைகளான பிடாரி வடக்கு வீதி, கடைவீதி காமராஜர்வீதி, கொள்ளிடமுக்கூட்டு, பழைய பேந்து நிலையம், தென்பாதி, புதிய பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.

    பிரதான சாலைகளில் உள்ள பலசரக்கு விற்பனை கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவற்றுக்கு லாரிகளில் பொருட்கள் எடுத்து வரும்போது சாலையின் இருப்புறமும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றா மல் நிறுத்திவைத்து பொருட்களை இறக்குவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு, வாகனஓட்டிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டது.

    பள்ளி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இது குறித்து பொதுமக்கள் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு மீனாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, போக்குவரத்தை சீரமை க்கவும், ஒருவழிப்பாதை, நோபார்கிங் ஆகியவற்றை பின்பற்றாத வாகனஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீஸ்சா ருக்கு அறிவுறுத்தினார்.

    அதன்படி போக்குவரத்து போலீசார் சீர்காழி நகரில் போக்குவரத்து விதிமுறை களை மீறும் வாகனஓட்டிகளை எச்சரித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி நேரங்களில் நகருக்குள் காலை 8மணி முதல் 10மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6மணிவரையிலும் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் போக்குவரத்து போலீசாரால் அமைக்கப்பட்டது.

    • பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • போக்குவரத்து நெரிசலின் போது பசியை போக்க நபர் ஒருவர் டோமினோஸ்-ஐ அழைத்தார்.

    இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் சாதாரண விஷயமாகவே மாறி விட்டது. மக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிட வேண்டியிருப்பதால், அதற்கு ஏற்றார் போல் தங்களது அலுவல்களை திட்டமிட வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில், பெங்களூரு, போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரமாக இருக்கிறது.

    அப்படியாக பெங்களூரு நகரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களை போன்றே போக்குவரத்து நெரிசலில் என்ன செய்வது என்று தெரியாமல், நபர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தார். 30 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ, ஒட்டுமொத்த இணையவாசிகளிடையே வேகமாக பரவி, உடனே வைரல் ஆனது.

    வைரல் வீடியோவில் என்னதான் இருந்தது? என்ற எண்ணத்தில் அதனை பார்த்த அனைவரும், அட இப்படியும் செய்யலாமா? என்றும், பெங்களூருவில் இதெல்லாம் சகஜம் தானப்பா? என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படியாக வீடியோவை வெளியிட்ட நபர், போக்குவரத்து நெரிசலின் போது, தனக்கு ஏற்பட்ட பசியை போக்க, டோமினோஸ்-ஐ அழைத்தார்.

    வாடிக்கையாளரை காக்க வைப்போமா? என்ற நினைப்பில் டோமினோஸ்-ம் தனது வாடிக்கையாளருக்கு சுடச்சுட பீட்சாவை பேக் செய்து, தனது டெலிவரி ஊழியர்களை களத்தில் இறக்கியது. டெலிவரி ஊழியர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் லைவ் லொகேஷனை பார்த்து, அவரின் காரில் வைத்து சூடான பீட்சாவை டெலிவரி செய்தனர்.

    போக்குவரத்து நெரிசலில் பீட்சா பெறும் வீடியோவைத் தான் அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் டெலிவரி செய்த ஊழியர்களை பாராட்டியும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் எப்போ தான் சரியாகுமோ? என்றும் கமெண்ட் செய்தனர்.

    • நகரின் முக்கிய இடங்களுக்கு திருக்கா–ட்டு–ப்பள்ளி வழியாக செல்கிறார்கள்.
    • புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுபள்ளியை சுற்றியுள்ள 50க்குமேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பூண்டி மாதா பேராலயம், அன்பில் மாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்லும் பக்தர்களும் திருக்கா–ட்டு–ப்பள்ளி வழியாக செல்கிறார்கள். திருக்காட்டுப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட திருமண அரங்குகள் உள்ளதால் திருமண நாட்களில் திருக்காட்டுப்பள்ளி நகரில் அதிகமான மக்கள் கூடுவது வழக்கமாக உள்ளது.

    இதனால் பல நேரங்களில் பிரதான சாலையாக திகழும் பழமார்நேரி சாலை சந்திப்பில் இருந்து பேருந்து நிலையம் வரை வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட வரிச யில் நின்றதால் நடந்து செல்வோரும் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

    திருக்காட்டுப்பள்ளி நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெற ப்பட்டு நிலங்கள் கையகப்படுத்த ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் புறவழிச் சாலை பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.

    திருக்காட்டுப்பள்ளியில் 3 மேல் நிலை பள்ளிகள், ஒரு உயர் நிலைப்பள்ளி உள்ளது. காலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் சிக்கி கொண்டு வகுப்பறைக்கு தாமதமாக செல்கின்றனர். எனவே அங்கு போக்குவரத்து போலீசார்நியமித்து போக்கு வரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது. குறிப்பாக 'பீக்அவர்ஸ்' நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகனம் சிக்கும் போது அதில் இருக்கும் பயணிகள் அலுவல் வேலைகளை செய்வது போன்ற காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.

    இந்நிலையில் தற்போதும் அதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் நேரத்தை வீண் செய்யக்கூடாது என திட்டமிட்டு 3 கவர்களில் வைத்திருந்த காய்கறிகளை உறிக்க தொடங்கி உள்ளார். மேலும் அதனை புகைப்படமாக எடுத்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார். அவரது இந்த படம் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • குறைந்த அளவிலான போக்குவரத்து போலீசாரே பணியில் ஈடுபட்டதால் வாகன நெரிசலை சரிசெய்யமுடியவில்லை.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விற்பனையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    போரூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி பூஜை பொருட்கள் விற்பனைக்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நள்ளிரவு முதலே வரத்தொடங்கின.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டி உள்ள காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4மணி முதலே வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க புறநகர் பகுதிகளில் இருந்து வந்த பெரும்பாலான வியாபாரிகள் குறித்த நேரத்திற்குள் திரும்பி செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். இதேபோல் மதுரவாயல் சாலை முழுவதுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுரவாயல் சாலையில் இருந்து மார்க்கெட் நோக்கி செல்லும் வாகனங்களை நேராக செல்ல அனுமதிக்காமல் பூந்தமல்லி சாலையில் திருப்பிவிட்டனர். இதனால் அந்த வாகனங்கள் மேம்பாலத்தில் சுற்றி வந்து 100 அடி சாலைவழியாக வந்தது. ஏற்கனவே கோயம்பேடு 100 அடி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றன.

    கோயம்பேடு சிக்னலில் இருந்த சின்மயாநகர் பாலம் வரை சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதேபோல் வெளியூர்களில் இருந்து வந்த ஆம்னி பஸ்களும் வந்ததால் கோயம்பேடு பகுதி முழுவதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தன். நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து சென்றனர். குறைந்த அளவிலான போக்குவரத்து போலீசாரே பணியில் ஈடுபட்டதால் வாகன நெரிசலை சரிசெய்யமுடியவில்லை. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அருகில் உள்ள சந்து, தெருக்களில் புகுந்து சென்றனர். இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறும்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்காடி நிர்வாக குழு மூலம் பண்டிகை பொருட்கள் விற்பனைக்கு முறையான மாற்று ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. இதன் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விற்பனையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை மார்க்கெட்டுக்கு வர வேண்டிய பொருட்கள் முழுமையாக வந்து சேரவில்லை என்றனர்.

    ×