search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bypass"

    • நகரின் முக்கிய இடங்களுக்கு திருக்கா–ட்டு–ப்பள்ளி வழியாக செல்கிறார்கள்.
    • புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுபள்ளியை சுற்றியுள்ள 50க்குமேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பூண்டி மாதா பேராலயம், அன்பில் மாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்லும் பக்தர்களும் திருக்கா–ட்டு–ப்பள்ளி வழியாக செல்கிறார்கள். திருக்காட்டுப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட திருமண அரங்குகள் உள்ளதால் திருமண நாட்களில் திருக்காட்டுப்பள்ளி நகரில் அதிகமான மக்கள் கூடுவது வழக்கமாக உள்ளது.

    இதனால் பல நேரங்களில் பிரதான சாலையாக திகழும் பழமார்நேரி சாலை சந்திப்பில் இருந்து பேருந்து நிலையம் வரை வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட வரிச யில் நின்றதால் நடந்து செல்வோரும் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

    திருக்காட்டுப்பள்ளி நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெற ப்பட்டு நிலங்கள் கையகப்படுத்த ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் புறவழிச் சாலை பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.

    திருக்காட்டுப்பள்ளியில் 3 மேல் நிலை பள்ளிகள், ஒரு உயர் நிலைப்பள்ளி உள்ளது. காலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் சிக்கி கொண்டு வகுப்பறைக்கு தாமதமாக செல்கின்றனர். எனவே அங்கு போக்குவரத்து போலீசார்நியமித்து போக்கு வரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவு நீர் வாய்க்கால் குறுக்கே இருப்பதால் நேரடியாக நெடுஞ்சாலைக்கு செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
    • விரிவாக்க பணி திட்ட மேலாளர் குமார் ஆகியோரை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேரில் வர வழைத்து அங்காளன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதகடிப்பட்டியில் இருந்து திருவண்டார்கோவில் வரை உள்ள பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் கட்டப்பட்டு பின்னர் 4 வழி சாலை போடப்படுகிறது.

    இந்த உட்புற சாலையிலிருந்து 4 வழி சாலைக்கு பொதுமக்கள் வாகனத்தில் வரும் பொழுது கழிவு நீர் வாய்க்கால் குறுக்கே இருப்பதால் நேரடியாக நெடுஞ்சாலைக்கு செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் முறையிட்டனர். இதனை யடுத்து அங்காளன் எம்.எல்.ஏ. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

    மதகடிப்பட்டியில் இருந்து திருவண்டார்கோ வில் வரை உள்ள பகுதியில் நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் திட்ட இயக்குனர் சக்திவேல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி திட்ட மேலாளர் குமார் ஆகியோரை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேரில் வர வழைத்து அங்காளன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று மதகடிப்பட்டில் இருந்து திருவண்டார் கோவில் பகுதி வரை உள்ள உட்புற சாலைகளை சீரமைப்பது குறித்து பொறியாளர் பாஸ்கர் மற்றும் திட்ட மேலாளர் குமார் ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இப்பணிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும் என்று திட்ட மேலாளர் குமார் உத்தர வாதம் அளித்துள்ளார்.

    • படுகாயம் அடைந்த கோகுல், சரத் ஆகியோர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    • போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொளத்தூர்:

    விழுப்புரத்தைச் சேர்ந்த வர்கள் உதயா (19), கோகுல் (23), சரத் (20). இவர்கள் அம்பத்தூர் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையில் வந்தனர். உதயா மோட்டார் சைக்கிளை ஓட்டினார். புழல் பைபாஸ் சாலை முடிவில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் இறங்கு வதற்கு மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது வளைவில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோகுல், சரத் ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டு 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உதயா மேம்பாலத்திலேயே விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த கோகுல், சரத் ஆகியோர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டையில் ரூ.133.5 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியது.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- விருதுநகர் சாலையில் உள்ள துணைமின் நிலையம் அருகில் ரூ.133.5 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை -மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    இந்த புறவழிச் சாலை யானது அருப்புக்கோட்டை- கோவிலாங்குளம் விலக்கில் ஆரம்பித்து வலதுபுறம் பிரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர்- பார்த்திபனூர் சாலையில் குறுக்கிட்டு சுக்கிலநத்தத்தில் மீண்டும் குறுக்கிட்டு தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது.

    இதனுடைய தூரம் 10 கி.மீ. ஆகும். 35.25 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. ரூ.98.58 கோடி சாலை பணிக்கும், ரூ.35.4 கோடி நில எடுப்புக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த புறவழிச்சாலை பணிகள் முடிவடையும் போது விருதுநகர், ராஜபாளையம், தென்காசியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரத்திற்கும், ராமேசுவரம், ராமநாதபு ரத்தில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்கா சிக்கும் செல்லும் வாக னங்கள் போக்குவரத்து நெரிசலுள்ள மற்றும் குறு கலானஅருப்புக்கோட்டை நகர பகுதியை தவிர்த்து பயணிக்க ஏதுவாக அமையும்.

    அதேபோல், அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் வாகன நெரிசலுள்ள நகர பகுதிகளை தவிர்த்து, மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு சிரமமின்றி பயணம் செய்யவும், பந்தல்குடியில் இருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியில் இருந்து விருதுநகருக்கும் வாகன நெரிசலுள்ள நகர பகுதியை தவிர்த்து

    சுலபமாக பயணிக்க ஏதுவாக இந்த புறவழிச்சாலை அமையும். மேலும், அருப்புக்கோட்டை நகரபகுதியில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண்கரெட், கோட்டாட்சியர் கல்யாணகுமார், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவபிரகாசம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • நேற்று தொடங்கிய போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது.
    • மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30ஆம் தேதி விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

    இதையடுத்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புறவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது ‌. இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவு எட்டப்படாததால் தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் மீண்டும் விவசாயிகள் தங்களது உண்ணாவிரத தொடர் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். தஞ்சை அடுத்த காட்டுகோட்டை பாதை பகுதியில் நேற்று தொடங்கிய போராட்டம் இன்று 2-வது நாளாகவும் நீடித்தது.

    புறவழிச்சாலையை கைவிட வேண்டும், மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும். புறவழிச்சாலை திட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    • திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.
    • நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக நில எடுப்பு செய்யப்பட்டுள்ள கீழத்திருப்பூந்துருத்தி, கண்டியூர் கிராம விவசாயிகள் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள், சப்இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா, செந்தில்குமார், நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர், வருவாய் ஆய்வாளர் மற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதி கீழத்திருப்பூந்துருத்தி சுகுமார் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் விவசாய சங்க பிரதிநிதி சுகுமார் பேசும்போது திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.

    மேலும் நில எடுப்புக்கு நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    வட்டாட்சியர் பேசும்போது நில எடுப்பு சட்டத்தின்படியே நிலத்திற்கான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வழங்கிட இயலும் என தெரிவிக்கப்பட்டது.

    சுகுமாறன் தலைமையில் கலந்துகொண்ட விவசாயிகள் நில எடுப்பு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்பில் உள்ள நில எடுப்பு செய்த உத்தரவின் நகல் தேவை என்றும், அதன் பின்னரே விவசாயிகள் தரப்பில் உரிய முடிவு எடுத்திட இயலும் என்று தெரிவித்தனர்.

    வட்டாட்சியர் வருவாய் கோட்ட அலுவலரிடம் கலந்துபேசி இதற்கான முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவித்து. எதிர்வரும் 23-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    • பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதற்கும் காலையில் பஸ்கள்வருவது கிடையாது.
    • வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

    கடலூர்:

    புவனகிரியை சுற்றி சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூர், புதுச்சேரி, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்வதும் பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மற்றும் மருத்துவமனைக்கு செல்வதற்கும் இதுபோன்று பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதும் காலையில் பஸ்கள்வருவது கிடையாது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கின்றனர்.

    இதேபோல் இரவு நேரங்களில் திரும்பி வருவதற்கும் பஸ்கள் புவனகிரி வழியாக வருவது கிடையாது. அனைத்து தனியார் மற்றும அரசு பஸ்கள் சி .முட்லூர் புறவழிச்சாலை வழியாக செல்கிறது. குறிப்பாக புறவழிச் சாலையில் தான் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புவனகிரி மற்றும் புவனகிரி சுற்றியுள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தலைமையில் விரைவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

    ×